கோவிலின் வாயிற்படியை மிதித்து செல்லவேண்டுமா அல்லது தாண்ட வேண்டுமா

kovil-1
- Advertisement -

கோவிலில் தினம்தோறும் நடத்தப்படும் பூஜைகளினாலும், மந்திர உச்சரிப்புகளாலும், மேளம், நாதஸ்வரம், மணி போன்ற சத்தினாலும் எண்ணிலடங்கா பல அற்புத சக்திகள் கோவில் முழுவதும் இருக்கிறது என்பது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்க பட்ட உண்மை. இப்படி பல அற்புதங்கள் நிறைந்த கோவிலின் வாயிற்படியை எப்படி கடந்து செல்ல வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம் வாருங்கள்.

steps

கோவிலுக்குள் செல்லும் அனைவரும் நிச்சயம் கால்களை நன்கு கழுவி விட்டு செல்ல வேண்டும். கோவிலின் வாயிற்படியருகே வந்ததும், பலரும் அதை மிதித்து செல்ல வேண்டுமா இல்லை தாண்டி செல்லவேண்டுமா என்று யோசிப்பது வழக்கம். சந்தேகமே வேண்டும், வாயிற்படியை தாண்டி தான் செல்ல வேண்டும்.

- Advertisement -

அப்படி தாண்டி செல்வதற்கு முன்பு குனிந்து நமது வலது கை வீரர்களால் படியை தொட்டு புருவ மத்தியில் உள்ள இடத்தில் அழுத்த வேண்டும். புருவத்தின் மத்தியில் உள்ள ஆக்ஞா சக்கரத்தை அழுத்துவதன் மூலம் நமது உடலானது நேர்மறை ஆற்றல்களை கிரகிக்க தயாராகும்.

கோவிலின் உள்ளே சென்றதும் அங்குள்ள நேர்மறை ஆற்றல்களானது பதம் வழியாக நமது உடலுக்குள் ஊடுருவ ஆரமிக்கும். இதனாலேயே கோவில் படிகளை தொட்டு வணங்கிவிட்டும் கால்களை நன்கு கழுவிவிட்டும் கோவிலுக்குள் செல்லவேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

 

- Advertisement -