யார் வீட்டில் பாம்பு வரும்? உங்கள் வீட்டிற்குள்ளும் பாம்பு புகுந்துள்ளதா? வீட்டிற்குள் பாம்பு வராமல் இருக்க என்ன செய்வது? பாம்பு வந்து விட்டால், அது நம்மை தீண்டாமல் இருக்க என்ன செய்வது?

snake
- Advertisement -

பாம்பு என்று சொன்னால் படையே நடுங்கும் என்பார்கள்! இப்படிப்பட்ட இந்த பாம்பு வசிக்கக்கூடிய காடு மேடு கழனிகள் எல்லாம், வீடு கட்டும் நிலங்களாக மாற்றி விட்டு, அந்த இடத்தில் வீடு கட்டி குடி போகிறார்கள். அதன் பின்பு வீட்டிற்குள் பாம்பு வரத்தான் செய்யும். நாம் வசிக்கும் இடத்திற்கு பாம்புகள் வரவில்லை. பாம்பு வசிக்கும் இடத்தில் தான் நாம் குடி சென்று இருக்கின்றோம். இதை நாம் முதலில் நினைவு வைத்துக்கொள்ள வேண்டும். தற்போது கடந்த சில வருடங்களாக, பல காடு, கழனிகள் வீடு கட்டும் மனைகளாக மாறி விட்டது. சரி, இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

கிராமப்புறங்களில் வசிப்பவர்களது வீடுகளிலும் பாம்புகள் வீட்டிற்குள் வரும் பிரச்சினைகள் உண்டு. எல்லோரது வீட்டிலும் பாம்புகள் நுழையாது. வீட்டை சுற்றி கொண்டிருக்குமே தவிர, சில பேர் வீடுகளில் மட்டும் தான், வீட்டிற்குள் நுழையும். நகர்ப்புறங்களிலும் சில சமயங்களில் சில பேரது வீட்டில் பாம்பு நுழைந்த கதையை நாம் கேள்விப்பட்டிருப்போம். இவ்வாறாக உங்களுடைய வீடு கிராமப்புறங்களில் அமைந்திருந்தாலும் சரி, வயல்வெளிகளில் வீடு கட்டி, அந்த இடத்தில் குடியிருப்பவர்களாக இருந்தாலும் சரி, நகர்ப்புறங்களில் குடியிருப்பவர்களாக இருந்தாலும் சரி, குறிப்பாக பாம்பு வீட்டிற்குள் நுழைகிறது என்றால் அதற்கு என்ன காரணம்? எதனால் நுழைகிறது? பாம்பு வீட்டில் நுழைந்து விட்டால் அது நம்மை தீண்டாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் சற்று விரிவாக தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

உங்களுடைய வீட்டில் பரம்பரை பரம்பரையாக, செய்து வந்த வழிபாட்டு முறையை திடீரென்று மாற்றினாலோ அல்லது பரம்பரை பரம்பரையாக உங்களுடைய முன்னோர்கள் செய்து வந்த காரியத்தை நீங்கள் செய்யாமல் விட்டு இருந்தாலும், உங்களுடைய  வீட்டில் பாம்பு வருவதற்கு வாய்ப்புள்ளது. இதுவும் ஒரு காரணமாக இருக்கும்.

Snake

சில பேரது வீட்டில் விவசாயம் செய்வதை தொழிலாக வைத்திருப்பார்கள். இப்படியாக காடுகளுக்கு செல்லும்போது, விவசாயம் செய்யும் போது, பாம்பை கொன்று இருந்தாலும், அல்லது பாம்புப் புற்று இருந்த இடத்தில் அந்த பாம்பு புற்றை நீக்கிவிட்டு, விவசாயம் செய்தாலும், அந்த இடத்தில் வீடு கட்டினாலும், தொழில் செய்யும் இடம் கட்டினாலும், இப்படிப்பட்டவர்களது வீட்டிலும் பாம்பு புகும்.

- Advertisement -

சில வீட்டில் இருக்கும் பெண்கள் இறைவனை ரொம்ப வழிபாடு செய்வார்கள். அதாவது உருகி உருகி விரதமிருப்பது, வேண்டுதல் வைப்பது போன்ற ஆன்மீக ரீதியான செயல்களில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பார்கள். ஆனாலும் அவர்களுக்கு மன குழப்பங்கள் நிறைய எழுந்துகொண்டே இருக்கும். தேவையற்ற சிந்தனையோடு வாழ்பவர்களது வீட்டிலும் பாம்பு புகும்.

snake

இப்படியாக வீட்டுக்குள் பாம்பு புகுந்து விட்டது. என்ன செய்வது? பயம்! அதை அடித்து தான் ஆக வேண்டும். நம்மால் வேறு எதுவும் செய்ய முடியாது. இப்படியாக அந்தப் பாம்பை அடித்தவர்களினுடைய சந்ததியினர் எங்கு வீடு கட்டினாலும் அவர்களுடைய வீட்டிலும் பாம்பு புகும் என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

snake1

பாம்பு இந்த இடத்தில் இருக்கின்றது என்று காட்டிக் கொடுத்தவர்களுடைய வீட்டிலும் பாம்பு புகும். என்று சொல்லப்பட்டுள்ளது. சரிங்க இந்த பாம்பு வீட்டிற்குள் புகாமல் இருக்க ஏதாவது வழி உள்ளதா? என்று கேட்பவர்களுக்கும் இந்த பதிவின் மூலம் பதில் உள்ளது.

நாட்டு மருந்து கடைகளில் விற்கும் நாக தந்தி வேர் என்று சொல்லப்படும் இந்த வேரை வாங்கி ஒரு செப்பு கம்பியால் கட்டி, வீட்டின் நான்கு பக்கங்களிலும் வைத்துவிட்டால் வீட்டிற்குள் பாம்பு நுழையாது. இதேபோல் சிறியாநங்கை பெரியாநங்கை செடிகளை, வீட்டின் முன் பக்கம் பின் பக்கம் போன்ற இடங்களில் வளர்த்தாலும் வீட்டிற்குள் பாம்பு நுழையாது.

பொதுவாகவே நல்ல பாம்பு, சாரை பாம்பு இந்த இரண்டு பாம்புகளை அடிக்கக் கூடாது என்று சொல்கிறது நம்முடைய சாஸ்திரம். மற்ற பாம்புகள் ஆக இருந்தாலும் அதை அடிப்பது பாவம் தான், இருப்பினும் விஷமுள்ள ஜந்து தீண்டி விடுமோ என்ற பயத்தில் உயிர் மேல் உள்ள ஆசையில் அடித்து விடுகின்றோம். குறிப்பாக நல்ல பாம்பும் சாரைப்பாம்பும் அடிக்கக் கூடாது என்று மட்டும் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது. நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். முடிஞ்ச வரைக்கும் இத அடிக்காமல் பாத்துக்கோங்க!

siriyanangai

உங்களுக்கு மன உறுதியும் மன தைரியமும் அதிகமாக இருக்கின்றதா? தெய்வ நம்பிக்கை அதிகம் உள்ளவர்களாக இருந்தால், உறுதியோடு இருப்பவர்களாக இருந்தால் மட்டும், ஒருவேளை உங்களுடைய வீட்டில் பாம்பு வந்து விட்டாலும் அல்லது பாம்புகள் உலவும் வயல்வெளிகளுக்கு நீங்கள் சென்றாலும், உங்களை பாம்புகள் தீண்டாமல் இருக்க, உங்கள் பக்கம் பாம்புகள் வராமல் இருக்க இந்த மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு செல்லலாம். நிச்சயம் பாம்பு உங்களுடைய கண்களுக்கு தென்படாது. உங்களுக்கான அந்த மந்திரம் இதோ!

ஓம் அஸ்திக சித்தா ரட்சிப்பாய்!

ஒருவேளை உங்களுடைய வீட்டிற்குள் பாம்புகள் நுழைந்து விட்டால், இந்த மந்திரத்தை வாய்விட்டு உச்சரித்தால், பாம்பு வந்த வழி தெரியாமல் போய்விடும். பதிவில் படித்து விட்டோம் என்பதற்காக, விஷமுள்ள பாம்பை கண்டவுடன், இந்த மந்திரத்தை சொல்லி, அந்தப் பாம்பு கிடைக்கின்றதா என்றெல்லாம் சோதிக்கக் கூடாது. ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நம்பிக்கை உள்ளவர்களுக்காக சொல்லப்பட்டுள்ள மந்திரம் இது. நம்பிக்கை உள்ளவர்களுக்காக கொடுக்கப்பட்டுள்ள பதிவு இது, என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
தினம் தினம் இனி உங்களுக்கு வெற்றி மட்டும்தான்! தினசரி வாழ்க்கையை சிறப்பானதாக மாற்றி தர சூரிய பகவானுக்கு காலையில் இப்படி வணக்கம் சொல்லிப் பாருங்களேன். அதிசயம் நடக்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -