Tag: காதல் கவிதைகள் போட்டோ
என் உயிரின் அணுவினில் – காதல் கவிதை
விழிகளில் கவிநயம்
விரல்களில் அபிநயம்
உன்னிடம் உள்ளதடி..
விடிகிற வரையினில்
மடியினில் உறங்கிட
என் மனம் தவிக்குதடி..
மணிக்குயில் படித்திடும்
கவிதையின் இசையென
நீதான் வந்தாயோ!
மௌனம் களைத்து நீ
எனக்குள் வந்து
எனைதான் வென்றாயோ
குயில்களின் பாடலும்
மயில்களின் ஆடலும்
ஒன்றாய் சேர்ந்தவளே..
என் உயிரின் அணுவினில்
காதலை விதைத்து
அன்பை தந்தவளே.
இதையும் படிக்கலாமே:
உன் நினைவில்...