மேஷம்:
செவ்வாய் பகவானின் ராசியான மேஷ ராசியில் பிறந்தவர்கள் இந்த வாரம் முழுவதும் சிறப்பானதாக அமைய காலையில் ஆஞ்சநேயருக்குரிய
சோர்விலா தூயவீரன் வல்லவன் ராமன்
சீதை வாயுறை பெற்ற அன்பன் அல்லலைப்
போக்கிக் காக்கும் அனுமனைப் பாடும் காலை
கல்லினைப் பெண்ணாய்ச் செய்தான் கழலிணைப் போற்றுவோமே
என்கிற பாடலை 9 முறை அல்லது 27 முறை துதிப்பது நல்லது.
ரிஷபம்:
ரிஷப ராசிகாரர்கள் இந்த வாரம் முழுவதும் நன்மையான பலன்களை பெற தினமும் முருகப்பெருமானின் படத்திற்கு நெய் அல்லது நல்லெண்ணெய் தீபமேற்றி, செந்நிற மலர்களை முருகனுக்கு சமர்ப்பித்து வழிபட்டு வெளியில் செல்வதால் நற்பலன்கள் ஏற்படும்.
மிதுனம்:
மிதுன ராசியினர் இந்த வாரம் காலத்தில் நன்மையான பலன்களை பெற புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் உங்கள் குலதெய்வத்திற்கு பழம், இனிப்பு போன்றவற்றை நைவேத்தியம் வைத்து வழிபடுவதால் நன்மைகளை உண்டாக்கும்.
கடகம்:
கடக ராசியினர் இந்த வாரம் வெள்ளிக்கிழமை தினத்தன்று வீட்டில் முருக பெருமான் படத்திற்கு தீபமேற்றி, கந்த சஷ்டி பாடலை துதித்து வழிபடுவதால் வழிபடுவதால் அனைத்திலும் விடயங்களிலும் நன்மைகள் உண்டாகும்.
சிம்மம்:
சிம்ம ராசியினர் இந்த வாரம் முழுவதும் அனைத்திலும் நன்மையான பலன்களை பெற இந்த வாரத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வருகின்ற பிரதோஷ தினத்தில், சிவன் கோயிலில் பாலாபிஷேகத்திற்கு பால் தானமாக வழங்குவதால் நன்மைகள் உண்டாகும்.
கன்னி:
புதன் பகவானின் ஆதிக்கத்தில் இருக்கின்ற கன்னி ராசியினருக்கு இந்த வார காலம் முழுவதும் அனைத்திலும் நன்மையான பலன்கள் ஏற்பட யாரேனும் ஏழைகள், யாசகர்கள் குறைந்த பட்சம் இரண்டு பேருக்கு அன்னதானம் வழங்குவதால் நல்ல பலன்கள் உண்டாகும்.
துலாம்:
துலாம் ராசியினர் இந்த வாரம் முழுவதும் காலையில் எழுந்து குளித்து முடித்ததும், அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று, கருட பகவானுக்கு நெய் தீபமேற்றி, அர்ச்சனை செய்து வழிபட்டு வருவதால் நீங்கள் மேற்கொள்ளும் காரியங்கள் அனைத்தும் சிறப்பான வெற்றிகளை பெறும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியினர் இந்த வாரம் முழுவதும் நன்மையான பலன்களை பெற தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு உறையூர் வெக்காளியம்மனை மனதில் நினைத்து வழிபடுவதால் விரும்பிய பலன்களை பெற முடியும்.
தனுசு:
குரு பகவானின் ஆதிக்கத்திற்குரிய தனுசு ராசியில் பிறந்தவர்கள் இந்த வாரம் முழுவதும் தட்சிணாமூர்த்திக்கு மலர்கள் சாற்றி, நெய் தீபம் ஏற்றி தட்சிணாமூர்த்தி மந்திரம் துதித்து வருவதால் அனைத்து விடயங்களிலும் நன்மையான பலன்களை பெற முடியும்.
மகரம்:
செவ்வாய் பகவானின் உச்ச ராசியான மகர ராசியில் பிறந்தவர்கள் இந்த வாரம் முழுவதும் மறைந்த தங்களின் முன்னோர்களை மனதில் நினைத்து வழிபட்டு, காரியங்களில் ஈடுபடுவதால் அனைத்து நன்மைகளும் கிடைக்க பெறுவார்கள்.
கும்பம்:
சனி பகவானுக்குரிய கும்ப ராசியில் பிறந்தவர்கள் நன்மைகள் அனைத்தும் கிடைக்கப் பெற ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு நெய் தீபம் ஏற்றி, பைரவ மந்திரங்களை துதித்து வழிபடுவதால் நன்மைகள் உண்டாகும்.
மீனம்:
இந்த வார காலம் முழுவதும் அனைத்து இடம் சிறப்பான பலன்களைப் பெற மீன ராசியினர் அரச மரத்தடியில் இருக்கும் விநாயகருக்கு அருகம்புல் சமர்ப்பித்து, தீபமேற்றி விநாயகர் மந்திரங்களைத் துதித்து வழிபாடு செய்வதால் அனைத்திலும் வேண்டிய பலன் கிடைக்கப் பெறலாம்.
இதையும் படிக்கலாமே:
சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்
இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.
English overview:
Here we have Weekly jothida pariharam in Tamil. It is also called as Parigarangal in Tamil.