உங்கள் வீட்டில் இருக்கும் கண் திருஷ்டி, கெட்ட சக்தியை கண்டுபிடிக்க இதோ ஒரு சுலபமான வழி!

akasa-karudan
- Advertisement -

ஆகாச கருடன் கிழங்கை நம்முடைய வீட்டு வாசலில் கட்டி வைத்தால் கண் திருஷ்டி விலகும். அதேசமயம் ஏவல் பில்லி சூனியம் போன்ற பெரிய பெரிய பிரச்சனைகளை கூட தடுக்கும் சக்தி இதற்கு உண்டு என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். ஆனால் இந்த ஆகாச கருடன் கிழங்கை முறையாகத்தான் நம்முடைய வீட்டில் கட்டி வைத்திருக்கின்றோமோ? வெறுமனே இந்தக் கிழங்கை வாங்கி கட்டி வைத்துவிட்டால் வரக்கூடிய பிரச்சனைகளிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ள முடியுமா என்ற சில சந்தேகங்களுக்கான பதிலைத் தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

akasa-garudan

எந்த ஒரு விஷயத்தையும் சரியான முறையில் செய்யும் போது தான் அதனுடைய முழு பலனையும் நம்மால் அனுபவிக்க முடியும். அதே போல்தான் இந்த ஆகாச கருடன் கிழங்கை வாங்கும்போது அது சாப நிவர்த்தி செய்யப்பட்டு எடுக்கப்பட்டதா, என்பதை முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும். சாப நிவர்த்தி செய்யப் படாமல், பரிகாரத்திற்காக எடுக்கப்படும் எந்த ஒரு மூலிகை பொருட்களும் முழுமையான பலனைக் கொடுக்காது. இதை முதலில் பார்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்தபடியாக இந்த கிழங்கை வாங்கி கருப்பு அல்லது சிகப்பு நிற கயிறு கொண்டுதான் நிலை வாசலில் கட்ட வேண்டும். வாசல் காலுக்கு மேல் சட்டம் இருக்கும் அல்லவா, அந்த மேல் சட்டத்திற்கு இணையாக இந்த ஆகாச கருடன் கிழங்கை கட்டி தொங்கவிட வேண்டும். வீட்டு வாசலுக்கு உள்ளே நுழைபவர்களுடைய தலையில் படக்கூடாது. நிலை வாசலுக்கு ரொம்பவும் உயரத்திலும் இதை கட்டி வைக்கக் கூடாது.

akasa-garudan

வெளியில் கட்டி இருப்பதை போலவே நிலை வாசலுக்கு, உள் பக்கமும் ஒரு ஆகாசகருடன் கிழங்கை வாங்கி கட்டி வைக்கலாம். வீட்டுக்குள் இருக்கும் கெட்ட சக்தியை, கண்திருஷ்டியையும் இது முழுமையாக அழித்து விடும். ஒருவேளை உங்களுடைய வீட்டிற்குள் கட்டி வைத்திருக்கும் ஆகாச கருடன் கிழங்கு முளைத்து வரவில்லை. கெட்டுப் போகிறது எனும் பட்சத்தில் உங்களுடைய வீட்டிற்குள் இருக்கும் கண்திருஷ்டியை இது உள்வாங்கிக் கொண்டது என்று அர்த்தம்.

- Advertisement -

இப்படியாக கெட்டுப்போன ஆகாச கருடன் கிழங்கை உடனடியாக வீட்டில் இருந்து அகற்றிவிட்டு, புது ஆகாச கருடன் கிழங்கை வைக்க வேண்டும். மீண்டும் புதியதாக இதை வாங்கி வைக்கும் பட்சத்தில், உங்களுடைய வீட்டில் இது கெட்டுப் போகக் கூடாது. ஒருவேளை மீண்டும் மீண்டும் ஆகாச கருடன் கிழங்கு வாடிப்போய் கொண்டே இருந்தால், உங்களுடைய வீட்டில் ஏதோ ஒரு பிரச்சனை உள்ளது என்பதை உணர்த்துவதாக அர்த்தம்.

அந்த பிரச்சனை என்ன என்பதை கண்டுபிடித்து நீங்கள் தான் சரி செய்து கொள்ள வேண்டும். வெளியில் கட்டி வைத்திருக்கும் ஆகாச கருடன் கிழங்கு வாடிப் போய் விட்டாலும் அதை உடனே மாற்றிவிட வேண்டும். உங்களுடைய வீட்டில் கெட்ட சக்தி உள்ளது என்பதை மட்டும் இது உடனடியாக காட்டிக் கொடுத்துவிடும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -