இன்றைய ராசி பலன் – 10-12-2019

Rasi Palan
- Advertisement -

மேஷம்:
mesham
தரக்கூடிய உங்கள் மனப் போக்கு கெட்டதில் நல்லதாக அமையும். ஏனெனில் சந்தேகம், ஊக்கமின்மை, நம்பிக்கைக் குறைவு, பேராசை, ஈகோ, பொறாமை போன்ற கெட்டவற்றில் இருந்து விடுபடுகிறீர்கள். சந்தேகமான நிதி விவகாரங்களில் சிக்கிவிடாமல் கவனமாக இருங்கள். வீட்டு விவகாரங்கள் மனதை ஆக்கிரமித்துக் கொண்டு வேலையை சரியாகச் செய்ய முடியாமல் பாதிக்கும்

ரிஷபம்:
rishabam
அதிக ஆதிக்கம் செலுத்தக் கூடியவரின் ஆதரவு உங்கள் நன்னடத்தைக்கு ஊக்கமாக அமையும். இன்று முதலீட்டை சேர்த்து – நிலுவையில் உள்ள கடன்களை வசூலிக்கலாம் – அல்லது புதிய திட்டங்களில் வேலை பார்க்க பணம் கேட்கலாம். உங்கள் அக்கறையற்ற போக்கால் பெற்றோர் கவலைப்படுவார்கள். எந்தவொரு புதிய பிராஜெக்டையும் தொடங்குவதற்கு முன்பு அவர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும்.

மிதுனம்:
Midhunam
இதய நோயாளிகள் காபி பழக்கத்தை கைவிட வேண்டிய நேரம் இது. இனியும் காபி குடித்தால் இதயத்தில் தேவையற்ற பிரஸ்ஸர் ஏற்படும். தேவையில்லாமல் நட்டம் ஏற்படுவதைத் தவிர்க்க, அனைத்து முதலீடுகளையும் உரிய ஆலோசனை பெற்று கவனமாக செய்ய வேண்டும். தேவையில்லாமல் மற்றவர்களிடம் குறை காணும் போக்கை உறவினர்கள் குற்றம் சொல்வார்கள். அது நேரத்தை வீணடிக்கும் செயல் என்று நீங்கள் உணர்ந்திட வேண்டும்.

கடகம் :
Kadagam
உங்களை பிட்டாகவும் நன்றாகவும் வைத்துக் கொள்ள அதிக கலோரி உணவை தவிர்த்திடுங்கள். அதிக ஆதாயம் தரும் நாள் அல்ல – எனவே பண நிலைமையை சோதித்து செலவுகளை கட்டுப்படுத்துங்கள். இன்றைக்கு உங்கள் செயல்பாட்டால் உங்களுடன் வாழும் ஒருவர் அதிக எரிச்சலுக்கு ஆளாவார். இன்று உங்கள் உயிரிலே கலந்து விட்ட அந்த காதல் துணை நாள் முழுவதும் உங்களை பற்ரியே சிந்தித்து கொண்டிருப்பார்.

சிம்மம்:
simam
ஒரு நண்பர் கண்டுகொள்ளாமல் இருப்பது உங்களை காயப்படுத்தும். ஆனால் அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். அது உங்களை பாதிக்கக் கூடாது. மாறாக துன்பத்தைத் தவிர்த்திட முயற்சி செய்யுங்கள். பணம் சம்பந்தமாக யாருடன் டீல் செய்கிறீர்கள் என்பதில் கவனமாக இருக்கவும். நண்பர் மிகுந்த உதவியாகவும், அதிக ஆதரவாகவும் இருப்பார்.

கன்னி:

தங்கள் கனவுகளை நனவாக்க வீட்டையும் ஆரோக்கியத்தையும் புறக்கணிக்கும் நபர்களைப் போல நீங்கள் நடந்து கொண்டு அவர்களின் வழியை பின்பற்றாதீர்கள். உங்கள் கடமை உணர்வும் கடின உழைப்பும் கவனிக்கப்படும். இன்று அதற்கு பண வெகுமதியும் கிடைக்கும். சமீப காலமாக தனிப்பட்ட வாழ்வில் அதிக கவனம் செலுத்தி வருகிறீர்கள் – ஆனால் இன்றைக்கு சமூகப் பணியில் தர்மகாரியத்தில் கவனம் செலுத்துவீர்கள் – பிரச்சினையோடு உங்களை நாடி வருபவர்களுக்கு உதவி செய்வீர்கள்.

துலாம்:

உங்கள் டென்சனைக் குறைக்க குடும்பத்தினரின் ஆதரவைப் பெறுங்கள். உதவிகளை நன்றியுடன் பெற்றுக் கொள்ளுங்கள். உணர்வுகளையும் மன அழுத்தத்தையும் உள்ளேயே அடக்கி வைத்துக் கொள்ளக் கூடாது. அடிக்கடி பிரச்சினைகளைப் பகிர்ந்து கொள்வது உங்களுக்கு உதவும். இன்று உங்களிடம் முன்வைக்கப்படும் முதலீட்டுத் திட்டங்களை இரண்டு முறை பாருங்கள்.

விருச்சிகம்:

வாழ்க்கையில் சீரியஸ் தன்மையை தவிர்த்திடுங்கள். தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால் பண நிலைமை மேம்படும். நீங்கள் தனிமையாக உணரும்போது குடும்பத்தினரின் உதவியை நாடுங்கள். மன அழுத்தத்தில் இருந்து உங்களை அது காப்பாற்றும். நியாயமான முடிவுகள் எடுக்க அது உங்களுக்கு உதவும். இன்று காதல் மன நிலையில் இருப்பீர்கள் – நிறைய வாய்ப்புகள் வரும். நீங்களாக முடிவெடுத்து, தேவையில்லாத செயல்களை செய்தால் இது அப்செட்டாக்கும் நாளாக இருக்கும்.

தனுசு:

சமீபத்திய நிகழ்வுகளால் மனம் பாதிக்கப்படும். தியானமும் யோகாவும் ஆன்மிக மற்றும் உடல்சார்ந்த ஆதாயங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். இன்று முதலீட்டை சேர்த்து – நிலுவையில் உள்ள கடன்களை வசூலிக்கலாம் – அல்லது புதிய திட்டங்களில் வேலை பார்க்க பணம் கேட்கலாம். குடும்ப வாழ்வுக்கு முறையாக நேரம் ஒதுக்கி கவனம் செலுத்துங்கள். அலுவலக வேலையில் அதிகமாக மூழ்கியிருந்தால் குடும்பத்தில் பிரச்சினைகள் எழும்.

மகரம்:
magaram
ஆரோக்கியத்தை நிச்சயமாக கவனிக்க வேண்டும். மதிப்பு உயரக் கூடிய பொருட்களை வாங்க சரியான நாள். உறவினர்கள் வருகை, நீங்கள் கற்பனை செய்ததைவிட நல்லதாக இருக்கும். உங்கள் அன்புக்குரியவர் கடினமான மனநிலையை இன்று உருவாக்குவார். உங்களுடைய கோபமான நடத்தை நல்ல நட்பைக் கெடுத்துவிடும் என்பதால் அதைக் கட்டுப்படுத்துங்கள்.

கும்பம்:

சமயோசித புத்தி மற்றும் புரிதலுடன் நீங்கள் செய்யும் தொடர்ச்சியான முயற்சியால் வெற்றி உறுதியாகும் என்பதால் பொறுமையாக இருங்கள். உங்கள் செலவு எதிர்பாராமல் அதிகரிப்பது மன அமைதியைக் கெடுக்கும். எல்லோருடைய தேவைகளையும் கவனத்தில் கொள்ள முயற்சி செய்தால், எல்லா பக்கமிருந்தும் உங்களை பிய்த்து எடுப்பார்கள். சமூகத் தடைகளைக் கடக்க முடியாதிருக்கும்.

மீனம்:

எதிர்காலம் பற்றிய தேவையற்ற கவலை உங்கள் மனநிலையை பாதிக்கும். ஏக்கத்துடன் எதிர்காலத்தை சார்ந்திருப்பதைவிட, இப்போதைய நேரத்தை அனுபவிப்பதில்தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். எல்லாவற்றிலும் அதற்கான அற்புதம் உண்டு, இருளுக்கும், அமைதிக்கும் கூட. சிலருக்கு பயணம் அலைச்சல் மிக்கதாகவும், மன அழுத்தம் ஏற்படுத்துவதாகவும் இருக்கும் – ஆனால் பண அளவில் ஈடாக இருக்கும். பிறருடன் வாக்குவாதங்கள், மோதல்கள், தேவையில்லாமல் குற்றம் கண்டுபிடிக்கும் போக்கை தவிர்த்திடுங்கள்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.

- Advertisement -