இன்றைய ராசி பலன் – 19-09-2019

Rasi Palan
- Advertisement -

மேஷம்:

mesham

காரிய அனுகூலம் உண்டாகும். தாய் வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பிற்பகலுக்கு மேல் புதிய நண்பர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும்.

- Advertisement -

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க அனுகூலம் உண்டாகும்.

ரிஷபம்:

- Advertisement -

rishabam

மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தன லாபம் ஏற்படும்.

- Advertisement -

மிதுனம்:

Midhunam

வெளியூரில் இருந்து கிடைக்கும் தகவல் மனதுக்கு மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரித்தாலும் உற்சாகமாகச் செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். நேரத்துக்கு சாப்பிட முடியாது.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் ஆதாயம் உண்டாகும்.

கடகம்:

Kadagam

நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. பிற்பகலுக்குமேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வாழ்க்கைத்துணை வழியில் சிறு சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும் என்பதால் அனுசரித்துச் செல்லவும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் பொருள் சேர்க்கை உண்டாகும்.

சிம்மம்:

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் சிறு சிறு தடைகள் ஏற்படும்.

கன்னி:

மனம் உற்சாகமாகக் காணப்படும். தேவையான பணம் கிடைக்கும். பிள்ளைகளால் சிறு சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை தேவை.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

துலாம்:

அலுவலகத்தில் கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும். அதற்கேற்ற பலனும் கிடைக்கும் என்பதால் உற்சாகமாக இருப்பீர்கள். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். மாலையில் சிலருக்கு லேசான தலைவலி வரக்கூடும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.

விருச்சிகம்:

இன்றைய தினம் உங்களுக்கு உற்சாகமாக அமையும். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். அரசு அதிகாரிகளின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பண வரவும் உண்டு.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

தனுசு:

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தொலைதூரத்தில் இருந்து வரும் செய்திகள் உங்களுக்கு மகிழ்ச்சி தரும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். .

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் இறைவழிபாடு செய்யும் வாய்ப்பு ஏற்படும்.

மகரம்:

magaram

மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

கும்பம்:

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு மனச் சஞ்சலம் ஏற்படுத்தும். பிற்பகலுக்கு மேல் எதிர்பார்த்த பணம் வந்து சேரும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.

மீனம்:

இன்று நீங்கள் தொடங்கும் காரியங்கள் அனைத்தும் சாதகமாக முடியும். எதிர்பாராத பணவரவும் உண்டாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். நீண்டநாளாக எதிர்பார்த்து காத்திருந்த தகவல் வந்து சேரும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணம் வாங்கும் யோகம் உண்டாகும்.

அனைத்து ராசிகளுக்கான இன்றைய ராசி பலன் முழுவதையும் கணித்து கொடுத்தவர் ‘ஜோதிடஶ்ரீ’ முருகப்ரியன்

- Advertisement -