இன்றைய ராசி பலன் – 20-06-2021

Rasi Palan
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெற்றிகள் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. புதிய முயற்சிகளை பயம் இல்லாமல் தொடங்கலாம். நினைத்தது நினைத்தபடி நல்லபடியாக நடக்கும். வேலை செய்யும் இடத்தில் எதிர்பாராத பாராட்டுகள் கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் உண்டு.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொஞ்சம் தடுமாற்றத்தோடு தான் இருக்கும். பிரச்சனைகள் பெரியதாக வருவதற்கு வாய்ப்பு இல்லை. முன்கோபத்தை குறைத்துக் கொண்டு அனாவசியமாக யாரிடத்திலும் பிரச்சினைக்கு செல்லாமல் இருந்தால் நல்லது. மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டமான நாளாக தான் இருக்கப்போகின்றது. நீண்ட நாட்களாக தீர்க்கமுடியாத பிரச்சனைகளை இன்றைய நாளில் தீர்த்து வைக்கப் போகிறீர்கள். எதிர்காலத்திற்கு தேவையான நல்ல செய்திகள் செவிகளுக்கு விருந்தாகும்.

கடகம்:
கடக ராசிக்காரர்கள் இன்று எல்லா வேலையிலும் கொஞ்சம் கவனத்துடன் இருக்கவேண்டும். அலட்சியமாக எந்த ஒரு செயலையும் செய்யக்கூடாது. வேலை செய்யும் இடத்தில் நிதானம் தேவை. பொறுமையோடு சிந்தித்து செயல்பட்டால் இன்றைய நாள் நிச்சயம் நல்லபடியாக செல்லும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்கள் இன்றைய நாள் உஷாராக இருக்க வேண்டியது அவசியம். நீங்கள் யாரிடமாவது ஏமாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. உங்களுடைய பொருட்களையும் கொஞ்சம் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். யாரையும் நம்பி உங்கள் குடும்ப விஷயத்தை கூட பகிர வேண்டாம். நண்பர்களையும் நம்ப வேண்டாம்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அனுகூலமான நாளாகத்தான் இருக்க போகின்றது. உங்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு தேவையான முடிவுகளை தடுமாற்றம் இல்லாமல் எடுப்பீர்கள். நீங்கள் எடுக்கும் அந்த முடிவு உங்களுக்கு சாதகமாக அமையும். தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் வெற்றி உங்கள் பக்கமே.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றத்தாழ்வுடன் காணப்படும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் எடுக்க வாய்ப்பு உள்ளது. வருமானம் அதிகரிக்கும். அதே சமயம் உங்களுடைய முன்கோபத்தால் சில தேவையற்ற பிரச்சினைகளும் வரும். கவனமாக இருந்து கொள்ளுங்கள்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையற்ற பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. முன்பின் தெரியாத நபர்களிடம் எந்த ஒரு பேச்சுவார்த்தையும் வைத்துக்கொள்ள வேண்டாம். தெரிந்தவர்களாகவே இருந்தாலும் அளவோடு பேசி பழக வேண்டும். நெருங்கிச் சென்றால் எல்லாம் பகையாகும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்கள் இன்றைய நாள் கொஞ்சம் உஷாராக இருப்பது நல்லது. யாரை நம்பியும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். நீங்களும் யாரிடமிருந்து கை நீட்டி பணம் வாங்காதீர்கள். தொழில் சம்பந்தப்பட்ட விஷயமாக இருந்தாலும், பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில், இன்று கொஞ்சம் உஷாராக இருப்பது நல்லது.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொஞ்சம் குழப்பம் நிறைந்த நாளாகத்தான் இருக்கும். எந்த முடிவை எடுப்பது என்று தடுமாறிக் கொண்டே இருப்பீர்கள். முடிந்தவரை முடிவெடுக்கும் விஷயத்தை நாளை தள்ளிப் போடுங்கள். அவசர முடிவு என்றால் பெரியோர்களை ஆலோசித்து எடுக்க வேண்டும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அமைதியான நாளாக இருக்கப் போகின்றது. நன்றாக ஓய்வெடுக்க போகிறீர்கள். நிம்மதியாக தூங்க போகிறீர்கள். மனநிம்மதி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். எந்த ஒரு பிரச்சனையும் உங்களுக்கு இல்லை. இந்த ஞாயிறு ஓய்வுக்கு பஞ்சமிருக்காது.

மீனம்:
மீன ராசிக்காரர்கள் கடந்த சில நாட்களாகவே மனக்குழப்பத்தில் இருந்து வருகிறீர்கள். அந்த மன குழப்பங்கள் அனைத்தும் இந்த வார இறுதி நாளான இன்று நீங்கிவிடும். எதைப்பற்றியும் கவலைப்படாமல் குலதெய்வ வழிபாட்டை செய்யுங்கள். உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. எல்லாமே மனப்பிரமை தான்.

- Advertisement -