இன்றைய ராசி பலன் – 24-06-2021

rasi palan - 24-6-21
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். உங்களுடைய கொள்கையை எந்த காரணத்திற்காகவும் தளர்ந்து போகாமல் பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் சற்றே சோர்வுடன் காணப்படுவார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய பங்களிப்பு கூடுதலாக அமையும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் ஒன்று நினைக்க அது வேறு ஒன்றாக முடியும். தொழில் மற்றும் வியாபார ஸ்தலங்களில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி கிடைக்க முன்கோபத்தை குறைத்துக் கொள்வது உத்தமம். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் மேலும் அதிகரிக்கும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கிடைக்கின்ற வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் நண்பர்களின் உதவிகளை பெறுவார்கள். உத்யோகத்தில் உங்களுடைய திறமைக்கு உரிய பாராட்டுகளைப் பெறுவீர்கள். கணவன் மனைவி உறவில் இருக்கும் சிக்கல்கள் தீரும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் தீட்டும் புதிய திட்டங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் கடும் போராட்டங்களை சந்தித்து வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் காலதாமதம் ஏற்படலாம். பழைய நினைவுகளை திடீரென்று அசை போட்டு பார்க்கும் சந்தர்ப்பங்கள் அமையும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெளியிடங்களில் முன்பின் தெரியாத நபர்களிடம் இருந்து எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே வாக்கு வாதங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய நட்புகள் விரியும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சில விஷயங்கள் எதிர்பார்த்தபடி நடக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு உரிய அற்புதமான நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் வாகன ரீதியான வீண் விரயங்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் நட்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு மனதிற்கு உற்சாகத்தை அளிக்கும் வகையில் அமையும். ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய அணுகுமுறையால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக நண்பர்களின் ஆதரவு மனதிற்கு உற்சாகத்தை கொடுக்கும். தேவையற்ற பிரச்சனைகளில் மூக்கை நுழைப்பதை தவிர்க்கவும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய கோபத்தை குறைத்துக் கொண்டு பொறுமை காப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை சமாளிக்கக் கூடிய திறமை உண்டாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. புதிய நண்பர்களின் உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே விட்டுக் கொடுத்து செல்வது மிகவும் நல்லது. சகோதர சகோதரிகளுக்கு இடையே இருக்கும் உறவு சிக்கல் நீங்கும். உற்றார், உறவினர்களின் வருகை மனதிற்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருக்கும் போட்டி பொறாமைகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கூடுதலாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான பயணங்களின் மூலம் அனுகூலமான பலன்களை பெறலாம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய சிந்தனைகள் வலுவாகும். உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் தளர்வு ஏற்படும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றும் எண்ணம் மேலோங்கி காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் விடுபவர்களுக்கு இடமாற்றம் போன்ற சில விசயங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைக்கு சவால் தரும் வகையில் சில பொறுப்புகள் ஒப்படைக்கப்படும். ஆரோக்கியம் கவனம் தேவை.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர் வரும் சவால்களை எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான பகைகள் ஒழியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளிடமிருந்து தேவையற்ற மனக் கசப்புகள் ஏற்படலாம். வீண் பழிகள் ஏற்படுவதை தவிர்க்க எச்சரிக்கை தேவை. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் அன்யோன்யம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

- Advertisement -