இன்றைய ராசி பலன் – 25-06-2021

rasi palan - 25-6-21
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நினைத்த இடத்தில் இருந்து பணவரவு சீராக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சக உழைப்பாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தடைப்பட்ட சில விஷயங்கள் முடிவுக்கு வரும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையில்லாத மன குழப்பம் நீடிக்க வாய்ப்புகள் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்கள் சக நண்பர்களுடன் இணக்கமாக செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக எதிரிகளின் தொல்லை வலுவாகும் வாய்ப்புகள் உண்டு என்பதால் கவனம் தேவை. குடும்பத்தில் அமைதி நிலவ ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது உத்தமம்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் கிடைக்கப் பெறும். தொலை தூர இடங்களிலிருந்து அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றத்திற்கான சூட்சுமங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் உருவாகும். தடைபட்ட திருமண முயற்சிகள் கைகூடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டம் பெருகும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களின் குடும்பத்தினரின் ஆதரவு பெருகும். உங்களுடைய பேச்சுக்கு மதிப்பு கொடுத்து நடந்து கொள்வார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் சக உழைப்பாளர்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது நல்லது. கூட்டு தொழில் புரிபவர்களுக்கு ஏற்றம் காணலாம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நினைத்தது நடக்க கூடிய நாளாக அமையும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனுகூலமான பலன்களை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வருங்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும். உற்றார் உறவினர்களின் பகை நீடிக்க வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்கள் திறமைகளை வெளிக்கொணரும் அதற்கான சரியான தருணமாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாள் தள்ளி சென்ற சில பிரச்சினைகளுக்கான முடிவு கிடைக்க கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் பெரிய மனிதர்களின் ஆதரவைப் பெறுவார்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் இழந்த மதிப்பை மீண்டும் பெறுவார்கள். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற போராடுவார்கள்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் துணிச்சலாக முடிவெடுக்க கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய சாதுரியமான சிந்தனைகளால் சிலவற்றை சாதகமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் கடும் உழைப்பை அதிகம் செலுத்த வேண்டிய தருணம் இது. ஆரோக்கியம் கவனம் தேவை.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை சிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தை பெறுவார்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முடிவுகளில் சாதகப் பலன்கள் உண்டு. தடைப்பட்ட திருமண சுப காரிய முயற்சிகளில் கைகூடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சில உத்திகளை கடைபிடித்து வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளியிட பயணங்களின் பொழுது விழிப்புடன் செயல்பட வேண்டிய தருணம் இது.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய முன்கோபத்தை குறைத்துக் கொள்வதன் மூலம் மன அமைதி காணலாம். பெரிய மனிதர்களின் ஆதரவும், ஆசிர்வாதமும் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிரடி முடிவுகளை தவிர்ப்பது உத்தமம். எந்த ஒரு செயலையும் சிந்தித்துச் செயலாற்றுவது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கவன சிதறல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வீண் விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கூடுமான வரை ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயர நாணயத்துடன் நடந்து கொள்வீர்கள். சமுதாயத்தில் உங்களுடைய மதிப்பு மேலோங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர் பார்க்கும் சலுகைகள் கிடைக்கும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அறிவுபூர்வமாக செயல்பட வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. எந்த ஒரு செயலையும் செய்யும் முன்னர் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து செய்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருக்கும் பிரச்சனைகள் தீர கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும். படிப்படியான முன்னேற்றத்தை காண இருக்கிறீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் வீண் பழிகளை ஏற்கும் நிலை ஏற்படலாம் எனவே கவனம் தேவை.

- Advertisement -