இன்றைய ராசி பலன் – 29-10-2020

rasi palan - 29-10-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத விஷயங்கள் நடைபெறுவதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு. தொழில் மற்றும் உத்தியோக ரீதியான பயணங்களில் அனுகூலமான பலன்கள் உண்டு. புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அனுமனை வணங்கினால் நன்மைகள் நடைபெறும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய பலவீனம் எது பலம் எது என்பதை நீங்களே அறிந்து கொள்வதற்கு சந்தர்ப்பங்கள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். மேலதிகாரிகளின் தொந்தரவுகள் குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளன. தொழில் மற்றும் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். ஆரோக்கிய ரீதியான விஷயத்தில் எச்சரிக்கை தேவை.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தன்னம்பிக்கையை அதிகரிக்க கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. உங்களின் விடாமுயற்சியால் கிடைக்கக்கூடிய பலன்கள் நல்லவையாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மற்றவர்களை எளிதாக கவர்ந்து விடும் உங்களுக்கு பல விதங்களிலும் நன்மைகள் நடைபெறக் கூடிய அமைப்பு இருக்கிறது.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் போட்ட முதலீடுகளை திரும்ப எடுப்பதற்கே சிரமப்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடன் பணிபுரிபவர்கள் போட்டியுடன் செயல்பட வேண்டிய சூழ்நிலை நிலவும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் அன்பு அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் தொந்தரவு டென்ஷனை கொடுக்கும். கணவன் மனைவிக்கு இடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றி மறையும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகள் வந்துசேரும். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் இருக்கும் நபர்களை அனுசரித்து செல்வது மன அமைதிக்கு வழிவகுக்கும். தேவையற்ற வாக்குவாதங்கள் மிகப்பெரிய பிரச்சனையாக மாறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் திடீர் மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடும் என்பதால் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

- Advertisement -

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார ரீதியான சிக்கல்களை சமாளிக்க சற்று போராட வேண்டியிருக்கும். தகுந்த சமயத்தில் உற்றார் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். சுபகாரிய முயற்சிகள் கைகூடிவரும். பெண்களுக்கு உடல் அசதி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. புதிய பொருள் சேர்க்கை உண்டாகும் யோகம் உண்டு. பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்களைக் காண்பீர்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு மனரீதியான விஷயத்தில் எச்சரிக்கை தேவை. நிறைய குழப்பங்களும் சஞ்சலங்களும் ஆட்கொண்டிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் கவனம் இருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எந்த ஒரு விஷயத்திலும் முடிவுகளை தள்ளி வைப்பது நல்லது. அதிலும் குறிப்பாக பண ரீதியான விஷயத்தில் நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் பிரச்சனைகளை உண்டாக்கலாம். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு கால தாமதம் ஏற்படலாம்.

மகரம்மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அனைத்து விஷயத்திலும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். ஆரோக்கிய ரீதியான தொல்லைகள் பின்விளைவுகளை ஏற்படுத்தும். கூடுதல் கவனமுடன் இருப்பது மிகவும் அவசியம். நண்பர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். உங்களைப் புரிந்து கொள்ளாத உங்களுடைய துணையாறு நிச்சயம் புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் அமையும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த போட்டி பொறாமைகள் குறையும். வாடிக்கையாளர்களை கவர்வதற்கு புதிய யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இழந்த மரியாதை மீட்கப்படும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த சண்டை சச்சரவுகள் முடிவுக்கு வரும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் வரும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொலைதூர விஷயங்களில் அனுகூலமான பலன்கள் உண்டு. நீண்டநாள் எதிர்பார்த்து காத்திருந்த நல்ல செய்திகள் வரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை தேடி அலைவதில் சோர்வு உண்டாகும். குரு தட்சிணாமூர்த்தியை வணங்கி வர நல்ல வேலை கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி இருக்கும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -