இன்றைய ராசி பலன் – 29-12-2019

rasi palan - 29-12-2019
- Advertisement -

மேஷம்:
இன்றைய நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையும். உங்களின் திறமைக்கேற்ற பாராட்டுகள் கிடைக்கப்பெறும். உறவினர் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடை பெறுவதற்குரிய வாய்ப்புகள் இருக்கும். அதில் கலந்துகொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். நேர்மறையான சிந்தனை இன்றைய நாளை சிறப்பான நாளாக அமைத்து தரும். விநாயகரை வழிபடுங்கள்.

ரிஷபம்:
இன்றைய நாள் உங்களுக்கு வீண் விரயங்கள் ஏற்படக்கூடிய நாளாக இருக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் சண்டை சச்சரவுகள் நீங்க இருவரும் மனம் விட்டு பேச வேண்டிய கட்டாயத்தில் இருப்பீர்கள். இன்றைய நாளை நல்ல புரிந்துணர்வுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையற்ற செலவுகளை சந்திக்க வேண்டிய நாளாக இருக்கும். பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். தேவையற்ற மனக்குழப்பங்கள் நீங்க முருகனை வழிபாடுங்கள் மனம் தெளிவு பெறும். கணவன் மனைவி இடையே இருக்கும் சண்டை சச்சரவுகள் ஏற்படாமல் இருக்க ஒருவரை ஒருவர் விட்டு கொடுத்து செல்வது நல்லது.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இறை வழிபாடுகளில் கவனம் செலுத்த வேண்டிய நாளாக இருக்கும். உங்களுக்கு உங்களுடைய திறமைக்கேற்ற பலன் கிடைக்கப்பெறும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். எந்த ஒரு முடிவையும் இன்றைய நாளில் நீங்கள் தாராளமாக எடுக்கலாம். நல்ல பலன் தரும். வினைகளைத் தீர்க்கும் விக்னேஸ்வரனை வணங்குங்கள்.

- Advertisement -

சிம்மம்:
இன்றைய நாள் உங்களுக்கு ஆரோக்கிய குறைபாடு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றது. உடல்நலனில் அக்கறை தேவை. குடும்ப உறுப்பினர்களிடையே மனம் விட்டுப் பேசுவதன் மூலம் பல பிரச்சனைகளை தடுக்கலாம். இறை வழிபாடுகளில் ஈடுபடுவது மன அமைதிக்கு வழிவகுக்கும். தம்பதியரிடையே ஒற்றுமை நிலவும்.

கன்னி:
இன்றைய நாள் உங்களுக்கு வீண் அலைச்சலை உண்டாக்க கூடிய நாளாக இருக்கும். வேலை பளு காரணமாக மிகவும் சோர்வுடன் காணப்படுவீர்கள். உங்களுக்கு ஓய்வு தேவை. யோகா, தியானம் முதலியவற்றை மேற் கொள்ளலாம். வாழ்க்கையில் விரக்தி ஏற்படக்கூடிய சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையை கைவிடாதீர்கள்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகுந்த குழப்பமுடனிருக்கும் நாளாக அமைய பெரும். உங்களை சுற்றி என்ன நடக்கிறது என்று உங்களுக்கு தெரியாத வண்ணம் குழப்பத்தில் இருப்பீர்கள். முருகனை வணங்குங்கள். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.

விருச்சிகம்:
இன்றைய நாள் உங்களுக்கு தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். எந்த முடிவை எடுத்தாலும் தீர்க்கமாக எடுப்பது நல்லது. சரியாக இருக்குமா? இல்லையா? என்ற குழப்பத்தில் முடிவுகளை எடுப்பதை தவிர்த்து விடுங்கள். உத்தியோகத்தில் சுமூகமான சூழ்நிலை நிலவும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார். மனைவியிடத்தில் மரியாதை செலுத்துங்கள்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆரோக்கிய குறைபாடு ஏற்படும். குடும்பத்தில் பிரச்சனை நிலவும். குடும்ப பொறுப்புகளை சுமக்க வேண்டிய நிலை ஏற்படலாம். தயாராக இருங்கள். தனவரவு திருப்திகரமாக இருக்காது எனினும் செலவுகள் சுப செலவுகளாக அமையப்பெறும்.

மகரம்:
இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் பதட்டமான நாளாக இருக்கும். உங்களின் கோபத்தால் நீங்கள் சிலவற்றை இழக்க வேண்டிய நிலை ஏற்படலாம். எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்யோகத்தில் சக பணியாளர்களிடம் நல்லிணக்கத்தை கடைபிடியுங்கள். பிரச்சனைகளில் இருந்து விலகி இருப்பது நன்மை தரும். பெற்றோர்களின் உடல் நலத்தில் கவனம் தேவை. தம்பதியர் இடையே பரஸ்பர அன்பு நீடித்திருக்கும்.

கும்பம்:
பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாளாக இருக்கும். யாரிடம் பேசினாலும் உணர்ச்சிவசப்படாமல் மிகவும் நிதானமாக இருக்க வேண்டும். உங்களின் பலம் எது? பலவீனம் எது? என்பதை அறிந்தவர்கள் உங்களுக்கு துணையாக நிற்பார்கள். உங்களின் விடா முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கப் பெறும். மகாவிஷ்ணுவை வழிபட்டால் சிறந்த நாளாக அமையும்.

மீனம்:
இன்றைய நாள் உங்களுக்கு தன்னம்பிக்கையுடன் செயல்பட கூடிய நாளாக இருக்கும். உங்களின் நேர்மையான சிந்தனை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும். எதிர்பாராத தனவரவு குதூகலப்படுத்தும். புதிய வாய்ப்புகள் இல்லம் தேடி வந்து சேரும். குடும்பத்தில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். அனைவரிடமும் அன்புடன் அனுசரித்து செல்வது நல்லது.

- Advertisement -