இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து முடிந்தது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி 3-2 என்ற கணக்கில் தொடர் வெற்றியை பெற்று இந்திய அணியை பழி தீர்த்தது.
இந்த வெற்றியின் பிறகு இந்திய அணிக்கும் மற்றும் அணி தேர்வுக்கும் இடையேயான மோதல் இந்திய அணியில் உருவாகியுள்ளது. அதன்படி இந்திய அணி தேர்வு குறித்து இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் கம்பீர் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது : இந்திய அணியின் மிடில் ஆர்டர் குறித்து தற்போது நான் பேச இருக்கிறேன். தற்போதைய இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் வலிமையாக இருந்தாலும், முதல் மூன்று ஆட்டக்காரர்கள் மட்டுமே இந்திய அணிக்காக தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
மேலும், உலகக்கோப்பை தொடரிலும் தோணியை சேர்த்தாலும் இந்திய அணி பலமாக இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இந்திய அணியின் மிடில் ஆர்டரில் இன்னும் பலம் தேவைப்படுவது அவசியம் என்று தெரிவித்தார் கம்பீர்.
இதையும் படிக்கலாமே :
மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்