- Advertisement -

அரசு வேலை கிடைக்க லலிதா சகஸ்ர நாமம்

என்னதான் கை நிறைய சம்பாதித்தாலும் அரசாங்க சம்பளத்தை பெறுவது என்பது தனி சிறப்பு. பலரும் அரசாங்க வேலையில் சேர வேண்டும் என்பதற்காக பல நாட்கள் கஷ்டப்பட்டு படித்து பரீட்சை எழுதுவார்கள். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு அரசாங்க வேலை கிடைக்கும். தோல்வி பெறுபவர்கள் திரும்பத் திரும்ப முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள். அப்படி பலமுறை முயற்சி செய்தும் அவர்களுக்கு அரசாங்க வேலை கிடைக்கவில்லை என்னும் பட்சத்தில் எந்த பாடலை தினமும் பாராயணம் செய்தால் அரசாங்க வேலை கிடைக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

சூரிய பகவன் வழிபாடு

அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் என்றால் ஒருவருடைய ஜாதகத்தில் சூரிய பகவான் வலுவாக இருக்க வேண்டும். சூரிய பகவான் குருவுடன் சேர்ந்திருந்தாலோ அல்லது குருவின் பார்வை படும்படி இருந்தாலோ, புதனுடன் சேர்ந்திருந்தாலோ அவர்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடைந்து விரைவிலேயே அரசாங்க வேலை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அதே சமயம் சூரிய பகவான் கேதுவுடனோ ராகுவுடனும் அல்லது சனி பகவானுடன் சேர்ந்திருந்தால் பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு படித்தாலும் வேலை கிடைப்பதில் சிரமம் ஏற்படும் என்றும் ஜாதக ரீதியாக கூறப்படுகிறது. மேலும் ஒருவருடைய ஜாதகத்தில் ஒன்பதாம் பாகமானது வலுப்பெற்று இருந்தால் தான் அவர்களுக்கு அரசாங்க வேலை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

அப்படி ஒன்பதாவது பாகம் வலுப்பெற்று இருக்க வேண்டும் என்றால் தான தர்மங்கள் செய்ய வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் இறைவனின் நாமங்களையும் மந்திரங்களையும் உச்சரிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு வழிபாட்டை பற்றி தான் இந்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

பொதுவாக நம்முடைய ஜாதகத்தில் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் கடைசியாக நாம் தெய்வத்திடம் சரணாகதி அடைந்து விட்டோம் என்றால் அந்த ஜாதகத்தில் இருக்கக்கூடிய பிரச்சினைகள் அனைத்துமே நீங்கிவிடும் என்றுதான் கூறப்படுகிறது. முழு மனதோடு தெய்வத்தின் நாமத்தை நாம் உச்சரிக்கும் பொழுது நமக்கு ஜாதகத்தில் இருக்கக்கூடிய பாதகமான சூழ்நிலையும் சாதகமாக மாறிவிடும் என்பது பலரும் அனுபவபூர்வமாக கண்ட உண்மையே.

அப்படி இருக்கும் பொழுது அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சூரிய பகவானை தங்களுடைய ஜாதகத்தில் வலுப்பெறச் செய்ய வேண்டும். அப்படி சூரிய பகவானை வலுப்பெற செய்ய வேண்டும் என்றால் அதற்காக நாம் பாராயணம் செய்ய வேண்டியது லலிதா சகஸ்ரநாமம். தினமும் காலையில் லலிதா சகஸ்ர நாமத்தை போட்டு முழுவதையும் கேட்பது அரசாங்க வேலைக்கு மட்டுமல்லாமல் பல நன்மைகளையும் நமக்கு ஏற்படுத்தும்.

- Advertisement -

இதில் அம்பிகையின் நாமங்கள் மட்டுமே தொடர்ச்சியாக வரும். எப்படி விஷ்ணு சகஸ்ரநாமம் இருக்கிறதோ அதே போல் தான் இதில் லலிதா சகஸ்ரநாமம். இந்த லலிதா சகஸ்ர நாமத்தில் ஒரு குறிப்பிட்ட நான்கு நாமங்களை நாம் தினமும் கூறி வந்தோம் என்றால் சூரிய பகவானின் அருள் நமக்கு கிடைக்கும். அதனால் அரசாங்க வேலையோ, பதவி உயர்வு கிடைப்பதற்கு உரிய வாய்ப்புகளும் உண்டாகும். அந்தப் பாடல்

“ராஜராஜேஸ்வரீ ராஜ்யதாயினீ ராஜ்யவல்லபா ராஜத்க்ருபா ராஜபீட நிவேசித நிஜாச்ரிதா”

இந்த நாமத்தை நாம் தினமும் காலையில் சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் அமர்ந்து ஒன்பது முறை அல்லது 27 முறை பாராயணம் செய்ய வேண்டும். மேலும் அரசாங்க வேலைக்காக முயற்சி செய்பவர்கள் படிக்க அமர்வதற்கு முன்பாக இந்த நாமத்தை மேற்சொன்ன எண்ணிக்கையில் கூறிவரும் பொழுது அவர்கள் எடுத்த முயற்சிகள் வெற்றி அடையும். விரைவிலேயே அரசாங்க வேலை கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே :பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்கும் துளசி செடி வழிபாடு

வழிபாடுகளை செய்ய இயலாதவர்கள் அன்றாடம் தெய்வத்தின் நாமத்தை உச்சரித்தாலேயே அந்த வழிபாட்டிற்குரிய பலனை பெற முடியும் என்று நம்பிக்கையுடன் இந்த லலிதா சகஸ்ர நாமத்தையும் முழுமனதோடு பாராயணம் செய்து நினைத்த அரசாங்க வேலையும் பதிவு உயர்வையும் பெறலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -