- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

இந்த தெய்வங்கள் உங்கள் கனவில் வரக் கூடாது. ஒரு வேளை வந்து விட்டால் உடனே மறக்காமல் இதை மட்டும் செய்தால் போதும். கனவில் வரக் கூடாத தெய்வங்கள்.

ஒரு மனிதன் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் பொழுது அவனுடைய என்ன ஆற்றல்களின் அலை மோதல்களை தான் கனவு என்று அறிவியல் சொல்கிறது. நமக்கு ஏற்பட இருக்கும் நன்மை தீமைகளை முன்கூட்டியே உணர்த்தக் கூடியவையாகவும் கனவுகள் அமையும் என்று ஆன்மீகம் சொல்கிறது. இந்த பதிவில் கனவு குறித்து ஆன்மீகம் சொல்வதை தெரிந்து கொள்ளலாம்.

இந்த கனவுகள் நாம் காணும் நேரத்தை பொறுத்து அதற்கான பலனும் மாறக் கூடும். எல்லா கனவுகளும் பலித்து விடும் என்பது கிடையாது. சில கனவுகள் பலிக்கும் சில கனவுகள் பலிக்காது. கனவில் தெய்வங்கள் வருவது பெரும்பாலும் நமக்கு நல்ல பலனையே கொடுக்கும். ஆனால் சில தெய்வங்கள் நமக்கு கனவில் தோன்றுவது ஆபத்தை குறிக்கும் எனவும் ஆன்மீகம் சொல்கிறது. அது என்ன தெய்வம் என்பதையும், வந்தால் அதை எப்படி சரி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

கனவில் தெய்வங்கள் வருவதால் ஏற்படும் நன்மைகள்:
கனவில் முருகப் பெருமான், வேல் போன்றவைகள் வந்தால் உங்களுடைய தோஷங்கள் எல்லாம் நீங்கி உங்களுக்கு நல்ல காலம் பிறக்கப் போகிறது என்று அர்த்தம். கனவில் கோபுர தரிசனம் அல்லது கோவில் தெப்பம் போன்றவற்றை கண்டால் உங்கள் வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் மறைந்து நீங்கள் படிப்படியாக மேலே முன்னேறி செல்ல போகிறீர்கள் என்று அர்த்தம்.

கனவில் விநாயகர் வந்தால் உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றியில் முடியப் போகிறது என்று அர்த்தம். அதே போல் ஆலய கதவு திறந்து நீங்கள் உள்ளே செல்வது போல் இருந்தால் உங்கள் துயரங்கள் அனைத்தும் முடிந்து விட போகிறது என்று அர்த்தம். கனவில் விஷ்ணு பெருமாள் போன்றவர்கள் வந்தால் உங்களின் வழக்கு சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து விடப் போகிறது என்று அர்த்தம்.

- Advertisement -

கனவில் வரக் கூடாத தெய்வம்:
கனவில் தெய்வங்கள் வந்தால் எவ்வளவு நல்லதோ அதே போல சில தெய்வங்கள் வந்தால் நமக்கு கெடுதல் என்று சொல்லப்படுகிறது. கனவில் உக்கிரமான தெய்வங்கள் வந்தால் நமக்கு பின்னால் இருந்து யாரோ சூழ்ச்சி செய்கிறார்கள். பெரிய பிரச்சனையை நம்மை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

அதே போல கனவில் குலதெய்வங்களோ வந்தாலோ அல்லது நீங்கள் ஏதாவது ஒரு தெய்வத்திற்கு வேண்டுதல் வைத்து அதை செய்ய முடியாமல் விட்டு விட்டாலோ அல்லது மறந்து விட்டாலோ அந்த தெய்வங்கள் உங்கள் கனவில் வந்து ஞாபகப்படுத்தி உடனே செய்ய சொல்லும் என்று சாஸ்திரம் சொல்கிறது.

இதையும் படிக்கலாமே: சமையல் கட்டில் இதை மட்டும் கடைப்பிடித்து பாருங்க இனி உங்க வீட்டில் தனமும் தானியமும் குறையவே குறையாது! அன்னபூரணி வீட்டில் இருப்பதை எப்படி அறிவது?

இப்படியான கனவுகள் உங்களுக்கு வந்து விட்டால் அவர்களுக்கான நேர்த்திக் கடனை உடனே செய்து விட வேண்டும். இதை செய்ய தவறினால் கண்டிப்பாக உங்கள் குடும்பத்தில் அடுத்தடுத்த பிரச்சனைகள் சூழ ஆரம்பிக்கும் என்று சொல்லப்படுகிறது. இது போல தெய்வங்கள் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை எல்லாம் இந்த பதிவில் தெரிந்து கொண்டிருப்பீர்கள். இனி இது போல கனவுகள் வந்தால் அதற்கான பலன்களை உணர்ந்து செயல்படுங்கள்.

- Advertisement -
Published by