பொதுவாக மனிதர்கள் பல பிறவி எடுப்பார்கள் என்று நம்பப்படுகிறது. அப்படியானால் மறுபிறவியில் இருந்து விடுபட வழியே இல்லையா? யாருக்கெல்லாம் மறுபிறவிகள் ஏற்படாது என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும்.
இது குறித்த சில தகவல்கள் சாஸ்திரங்கள், கருட புராணம் போன்றவற்றில் உள்ளன. வாருங்கள் இதை பற்றி விரிவாக பார்ப்போம்.
நமது சாஸ்திரத்தின்படி இவ்வுலகில் வாழும் அனைவரும் பிரமாத்மாவில் இருந்து வந்த ஜீவன்கள் தான். நிச்சயம் ஒருநாள் இந்த ஜீவன்கள் பரமாத்மாவை அடைந்தே தீர வேண்டும். அது ஒரு பிறவியிலும் நடக்கலாம் அல்லது ஓராயிரம் பிறவியிலும் நடக்கலாம். அனால் நிச்சயம் ஒரு நாள் அது நடக்கும்.