
பிரபஞ்ச பேராற்றல் அதிகம் இருக்கக்கூடிய நாளாக திகழ்வதுதான் பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்கள். அதிலும் தெய்வ வழிபாட்டிற்கு உகந்த புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமிக்கு பல மடங்கு விசேஷங்கள் இருக்கிறது என்றே கூறலாம். பொதுவாகவே பௌர்ணமி தினத்தில் சந்திர பகவானின் ஆதிக்கம் என்பது அதிகமாக இருக்கும். அதுவும் சந்திர பகவானுக்குரிய திங்கட்கிழமை வரும் பொழுது அதன் பலன் கூடுதலாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த பிரபஞ்ச பேராற்றல் மிகுந்த சந்திர பகவானுக்குரிய அற்புதமான தினமாக திகழக்கூடிய புரட்டாசி பௌர்ணமி நாள் அன்று பணவசியம் அதிகரிப்பதற்கு இரண்டு ரூபாயை வைத்து செய்யக்கூடிய பரிகாரத்தை பற்றி நான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பொதுவாகவே பிரபஞ்ச பேராற்றல் மிகுந்த நாட்களில் நாம் செய்யக்கூடிய வழிபாடுகளும் பரிகாரங்களும் பல மடங்கு பலனைத் தரும் என்று கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். அதிலும் ஒரு சில குறிப்பிட்ட மாதங்களில் வரக்கூடிய இந்த பிரபஞ்ச பேராற்றல் மிகுந்த நாட்களில் நாம் செய்யும்பொழுது அதற்கு அபரிவிதமான பலன் என்பது உண்டாகும். அந்த வகையில் புரட்டாசி பௌர்ணமியும் ஒரு சிறப்பு மிகுந்த நாளாகவே கருதப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் பெருமாளை வழிபாடு செய்வதோடு பெண் தெய்வ வழிபாட்டிலும் ஈடுபட்டு இருப்போம். பௌர்ணமி தினத்தன்று நாம் சந்திர பகவானை வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும் என்றே கூறலாம். அதிலும் பண வசியத்தை அதிகரிப்பதற்காக செய்யக்கூடிய பரிகாரம் பல மடங்கு பலனை தரும்.
இந்த பரிகாரத்தை மாலை 6:00 மணியிலிருந்து இரவு 12 மணிக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பரிகாரத்தை செய்வதற்கு நமக்கு இரண்டு ரூபாய் நாணயமும் சந்திர பகவானின் ஆதிக்கம் நிறைந்த பச்சரிசியும் வேண்டும். இந்த பரிகாரத்தை யார் வேண்டுமானாலும் செய்யலாம். அன்றைய தினத்தில் குளித்திருக்க வேண்டும், அசைவத்தை தவிர்த்து இருக்க வேண்டும் என்பது மட்டுமே குறிப்பிடத்தக்கது. இந்த பரிகாரத்தை செய்வதற்கு முன்பாக கிழக்கு அல்லது வடக்கு திசை பார்த்தவாறு அமர்ந்து கொள்ள வேண்டும். வெறும் தரையில் அமராமல் ஒரு விரிப்பை விரித்து அமர்ந்து கொள்வது என்பது சிறப்பு.
இப்பொழுது ஒரு மூடி போட்ட டப்பாவை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த டப்பாவில் பாதி அளவிற்கு மேல் பச்சரிசியை நிரப்பிக்கொள்ளுங்கள். உங்களுடைய வலது கையில் இரண்டு ரூபாய் நாணயத்தை வைத்து நன்றாக மூடிக்கொண்டு சந்திர பகவானின் பண வசிய மந்திரத்தை குறைந்தபட்சம் 15 நிமிடம் கூற வேண்டும். அவ்வாறு கூறி முடித்த பிறகு முழுமனதோடு பணவசியம் அதிகரிக்க வேண்டும் என்ற வழிபாட்டை செய்துவிட்டு இரண்டு ரூபாய் நாணயத்தை பச்சரிசிக்குள் மறைத்து வைத்து விட வேண்டும். பிறகு இந்த டப்பாவை மூடி சமையல் அறையிலோ அல்லது பூஜை அறையிலோ வைத்து விடலாம். 48 நாட்கள் கழித்து அதில் இருக்கும் இரண்டு ரூபாயை எடுத்து பணம் வைக்கும் இடத்தில் வைத்துவிட்டு பச்சரிசியை எறும்புகளுக்கு தானமாக தந்து விட வேண்டும்.
” ஓம் ஸ்ரீம் ஷம் சந்திர தேவாய நமஹ “
இதையும் படிக்கலாமே: தடையில்லா செல்வம் பெற கோஜாகரி பௌர்ணமி வழிபாடு
மிகவும் சக்தி வாய்ந்த பிரபஞ்ச பேராற்றல் மிகுந்த புரட்டாசி பௌர்ணமி நாளில் சந்திரனுக்குரிய இந்த பண வசிய மந்திரத்தை கூறி செய்யக்கூடிய இந்த வழிபாடு நம்முடைய வாழ்க்கையில் பணவரவை அதிகரிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.