- Advertisement -

ஒரு வீடு நன்றாக இருக்க வேண்டும் என்றாலோ எந்தவித குறையும் இல்லாமல் இருக்க வேண்டும் என்றாலோ அந்த வீட்டில் மகாலட்சுமி தாயாரின் அருள் என்பது பரிபூரணமாக வேண்டும். அப்படி மகாலட்சுமி தாயாரின் அருள் கிடைத்துவிட்டால் சகல ஐஸ்வர்யங்களையும் எளிதில் பெற முடியும். அப்படி சகல ஐஸ்வர்யங்களையும் பெறுவதற்கும் மகாலட்சுமி தாயாரின் அருளை பெறுவதற்கும் எந்த பொருளை நம் வீட்டில் வைத்திருக்க வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஐஸ்வர்யத்தை வாரி வழங்கக்கூடிய தெய்வமாக திகழும் மகாலட்சுமி தாயாரின் அருளை பெறுவதற்கு பல வழிகள் இருந்தாலும் ஒரு சில குறிப்பிட்ட பொருட்களை நம் இல்லத்தில் வைப்பதன் மூலமும் மகாலட்சுமி தாயாரின் அருளை நம்மால் பெற முடியும். அப்படிப்பட்ட பொருட்களுள் மிகவும் முக்கியமான ஒன்றுதான் ஜாதிக்காய்.

- Advertisement -

ஜாதிக்காய் எதனுடன் சேர்ந்து இருக்கிறதோ அந்த பொருள் பல மடங்கு பெருகும் என்றும் ஜாதிக்காய் எந்த வீட்டில் இருக்கிறதோ அந்த வீட்டில் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. சரி இப்பொழுது வீட்டில் மகாலட்சுமி தாயாரின் அருளை பெற்று சகல ஐஸ்வரியத்தையும் பெறுவதற்கு ஜாதிக்காயை வைத்து எந்த முறையில் பரிகாரம் செய்வது என்று பார்ப்போம்.

இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அன்றுதான் செய்ய வேண்டும். புதிதாக மண், கண்ணாடி, பீங்கான் இந்த மூன்றில் ஏதாவது ஒன்றால் செய்யப்பட்ட கிளாஸ் அல்லது கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் முக்கால் பங்கு இருக்கும் அளவிற்கு பன்னீரை ஊற்ற வேண்டும். பிறகு இதனுடன் இரண்டு துண்டு பச்சை கற்பூரத்தை சேர்த்து சிறிதளவு வெட்டிவேரையும் சேர்த்து ஐந்து ஜாதிக்காய் அதனுடன் சேர்க்க வேண்டும்.

- Advertisement -

இவை அனைத்தும் பன்னீரில் மூழ்கும் அளவிற்கு பன்னீர் இருக்க வேண்டும். இப்பொழுது இதை வீட்டு வரவேற்பறையிலோ அல்லது பூஜை அறையிலோ வைக்க வேண்டும். திறந்த நிலையில் தான் வைக்க வேண்டும். இதை வெள்ளிக்கிழமை தோறும் மாற்றி விட வேண்டும். இதில் இருக்கும் பொருட்களை கால் படாத இடத்தில் போட்டு விட்டு பன்னீரை மட்டும் வீட்டை சுற்றி தெளித்து விட வேண்டும்.

அடுத்ததாக ஒரு பச்சை நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த துணியில் சிறிதளவு வெட்டிவேர் இரண்டு துண்டு பச்சை கற்பூரம் மற்றும் ஐந்து ஜாதிக்காயை வைத்து மூட்டையாக கட்டி பணம் வைக்கும் இடத்திலோ அல்லது கல்லாப்பெட்டியில் வைப்பதன் மூலம் பணவரவு என்பது அதிகரிக்கும்.

- Advertisement -

மேலும் வெள்ளிக்கிழமை தோறும் சாம்பிராணி தூபம் காட்டும் பொழுது ஜாதிக்காயை இடித்து தூளாக்கி சாம்பிராணி போட்டு வீடு முழுவதும் மகாலட்சுமி தாயாரின் மந்திரத்தை கூறியவாறு தூபம் போட வேண்டும். இப்படி செய்வதன் மூலமும் மகாலட்சுமி தாயாரின் அருள் பரிபூரணமாக நமக்கு கிடைத்து சகல சௌபாக்கியங்களுடன் நலமுடன் வாழ முடியும்.

இதையும் படிக்கலாமே: கடன் சுமை குறைய விநாயகர் வழிபாடு

மிகவும் எளிமையான இந்த ஜாதிக்காய் பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்பவர்களுக்கு கண்டிப்பான முறையில் மகாலட்சுமி தாயாரின் அருள் கிடைக்கும்.

- Advertisement -