- Advertisement -
ஜோதிடம்

29-06-2024 சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்.

ஒருவருடைய வாழ்க்கையில் அதிகப்படியான ஏற்றத்தாழ்வுகளையும், மாற்றங்களையும் கொடுக்கக்கூடிய கிரகம் என்றால் அது இந்த சனி கிரகம் தான். சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டு காலம் பயணம் செய்வார். வருடத்திற்கு, ஒருமுறை 4 மாதம் வக்கிர நிலையில் பயணம் செய்வார். அந்த வகையில் இன்று சனிக்கிழமை 29.6.2024 சனி வக்கிர பெயர்ச்சி நடைபெறவிருக்கிறது.

இந்த பெயிர்சியில் மேஷம் முதல் மீதம் வரை எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் இருக்கிறது என்பதை பற்றிய விரிவான தகவலை ஜோதிடம் சார்ந்த இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். ஜூன் 29ஆம் தேதி சனியின் வக்ர பெயர்ச்சி காலம் தொடங்கி, நவம்பர் 15 ஆம் தேதி வரை சனிபகவான் வக்கிர கதியில் பயணம் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இதுநாள் வரை தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். நஷ்டமாகி கொண்டிருந்த தொழிலும் லாபத்தில் செல்ல தொடங்கும். புதிய முதலீட்டை செய்யலாம். புதிய முயற்சிகளை செய்யலாம். நல்ல வேலை கிடைக்கும். இருக்கும் வேலையில் இருந்து வேறு ஒரு நல்ல வேலைக்கு ப்ரமோஷனோடு மாற்றம் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. குடும்பத்தில் நிம்மதி நிலவும். வருமானத்தில் இருந்த சிக்கல்கள் விலகும். ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியானது சில நல்ல பாடங்களை கற்றுக் கொடுக்கும். அனுபவ ரீதியாக நல்ல விஷயங்களை தெரிந்து கொள்வீர்கள். தேவையற்ற விவகாரங்களில் நீங்கள் தலையிடக்கூடாது. முன்கோபத்தை குறைக்க வேண்டும். குறிப்பாக பேசுவதை பாதியாக குறைத்து விடுங்கள். சோம்பேறித்தனத்தோடு எந்த வேலையையும் அடுத்த நாள் தள்ளிப் போடக்கூடாது. அன்றைக்கான வேலையை அன்றைக்கே முடிச்சிடனும். பயணத்தின் போது கவனமாக இருக்க வேண்டும். வண்டி வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் படிப்பில் கூடுதல் கவனத்தோடு செயல்படுங்கள். குறிப்பாக சொந்த பந்தங்களோடு விவாதம் செய்யாதீங்க.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி நன்மையை தரக்கூடிய பெயர்ச்சியாக தான் இருக்கும். வேலையில்லாமல் கஷ்டப்பட்டு வந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வீட்டில் சுபகாரிய தடை விலகும். சுப செலவுகள் உண்டாகும். கூடுமானவரை சிவபெருமான் வழிபாடு செய்யுங்கள். கணவன் மனைவிக்குள் பெரிய அளவில் சண்டை போடாதீங்க. சண்டையை சின்னதாக முடித்துக் கொள்வது நல்லது.

கடகம்

கடக ராசிக்காரர்கள் கஷ்டத்திலிருந்து விடுபட்டு நிம்மதி அடையக்கூடிய காலம் இது. இதுநாள் வரை உங்களை தொடர்ந்த பண கஷ்டம், மன கஷ்டம் எல்லாம் ஒரு முடிவுக்கு வரும். கூடுமானவரை எல்லா பிரச்சனைகளும் சரியாகும். ஆனால் பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். கொடுக்கல் வாங்கலில் கவனம் இருக்கணும். தொழிலை விரிவு படுத்த வேண்டாம். புதிய முதலீடு செய்ய வேண்டாம்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இனி வரக்கூடிய காலகட்டம் உற்சாகமானதாக இருக்கும். உங்களுடைய வேலையில் பின்னடைவு இருக்காது. திறமையாக சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வேலையில் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். தொழிலில் பின்னுக்கு தள்ளப்பட்ட நீங்கள் குறுகிய காலத்திலேயே நல்ல முன்னேற்றத்தையும் லாபத்தையும் பெறுவதற்கு உண்டான வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் அடுத்தவர்களைப் பார்த்து நீங்கள் எந்த வேலையையும் செய்யக்கூடாது. பேராசை பட்டால் பெரு நஷ்டம் ஆகிவிடும். பெண்களுக்கு பொன் பொருள் ஆபரண சேர்க்கை இருக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் நிறைய நன்மைகள் நடக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களை எதிரிகளாக பார்த்தவர்கள் கூட நண்பர்களாக மாறுவார்கள். ஆனால் மேலதிகாரிகளிடம் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். எல்லா விஷயத்தையும் வெளிப்படையாக பேசாதீங்க. எந்த விஷயத்தை பேசணும் எந்த விஷயத்தை பேசக்கூடாது என்ற பக்குவத்தோடு நடந்து கொள்ள வேண்டும். பிள்ளைகளுடைய ஆரோக்கியத்திலும் படிப்பிலும் கவனம் செலுத்துங்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இனி வரக்கூடிய காலகட்டம் மன நிறைவாகத்தான் இருக்கும். செய்யும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். உங்களுக்கு உதவி செய்ய நண்பர்களும் உறவுகளும் உறுதுணையாக இருப்பார்கள். வேலை செய்யும் இடத்தில் கஷ்டப்பட்டால் தான் நல்ல பலன் கிடைக்கும் குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இனி வரக்கூடிய காலகட்டத்தில் நிதி நிலைமை சீராகும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடன் பிரச்சனையிலிருந்து வெளி வருவீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். ஆனால் உங்கள் வார்த்தையில் மட்டும் எப்போதுமே கவனம் இருக்க வேண்டும். யாருக்கும் அவசரப்பட்டு வாக்கு கொடுக்கக் கூடாது. கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். யாருடைய பஞ்சாயத்திலும் தலையிடாதீங்க.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இனி வரக்கூடிய காலகட்டத்தில் நிதானம் தான் முதல் ஆயுதம். வாயை திறப்பதற்கு முன்பு ஆயிரம் முறை யோசிக்க வேண்டும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வது நல்லது. இருக்கும் வேலையிலேயே எப்படி சிறப்பாக செயல்படுவது என்று சிந்திக்கவும். வண்டி வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்கவும். நிதி நிலைமை சீராக தான் இருக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு வேலையில் சின்ன சின்ன மாற்றங்கள் வர வாய்ப்புகள் இருக்கிறது. இடம் மாற்றம் ஏற்படும். சில பேருக்கு பிரமோசனோடு சேர்ந்த இடம் மாற்றமும் வரும். வெளிநாட்டுக்கு செல்லக்கூடிய கனவு நினைவாக வாய்ப்புகள் இருக்கிறது. கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். வீட்டில் சுப காரியத்தடை விளக்கும். தொழிலில் இருந்து வந்த இடர்பாடுகள் நீங்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு தடைபட்ட காரியங்கள் எல்லாம் இனி சுபமாக நடைபெறும். கடன் பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும். நிதி நிலைமை சீராகும். மனதிற்கு பிடித்த வேலையை சந்தோஷமாக செய்வீர்கள். புதிய வேலை கிடைக்கும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி உண்டாகும். குடும்ப தகராறுகள் ஒரு முடிவுக்கு வரும். ஆக மொத்தம் கஷ்டகாலம் நிறைவடைந்து, நல்ல காலம் பிறக்கப் போகிறது.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இனி வரக்கூடிய காலம் நல்ல காலமாக இருந்தாலும் பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றி அடையும் ஆனால் முதலீட்டில் கவனம் கட்டாயம் இருக்க வேண்டும் பணத்தின் போது அலட்சியம் வேண்டாம் நீண்ட நாளாக சேமித்த பணத்தை இழக்க நிறையவே வாய்ப்பு இருக்கிறது ஜாக்கிரதை.

- Advertisement -