
இன்று குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகமாக வருகிறது என்றால் அதற்கு முதல் காரணம் நாம் பழமையை மறந்து விட்டது மட்டும்தான். புதுமைகளும் புது கண்டுபிடிப்புகளுக்கும் நாம் வழி கொடுக்க வேண்டும். புதுவரவை குறை சொல்லக்கூடாது. இருந்தாலும் பழமையை மறக்கக் கூடாது. ஓரளவுக்கு மேல் முன்னோர்கள் சொன்ன விஷயத்தை எல்லாம் மறந்து செயல்படும் போது தான் பிரச்சனையில் சிக்கி தவிக்க வேண்டிய சூழ்நிலை.
அந்த வகையில் இன்று எல்லா ஜாதக கட்டத்திலும் தோஷம், எல்லோருக்கும் சனி பகவானால் பிரச்சனை, நேரம் சரியில்லை கடன் சுமை என்ற பிரச்சனை நம்மை துரத்தி துரத்தி அடிக்கிறது. அதாவது, இருபது வருடத்திற்கு முன்பு இருந்த வாழ்க்கை முறை கூட இன்று கிடையாது. அதி விரைவான முன்னேற்றம் நமக்கு, அதி விறைவான அழிவை தான் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
உங்களுடைய குடும்பம் சீரும் சிறப்புமாக குலதெய்வத்தின் ஆசிர்வாதத்தோடு சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் பின் சொல்லக்கூடிய இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். அதே சமயம் சனி பகவானால் உங்களுக்கு தோஷம் இருக்கிறது, உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு சனி பகவானால் பிரச்சனை, கடன் சுமை அதிகமாக இருக்கிறது என்றாலும், இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். சனி பகவானின் கோபம் தணிந்து அவருடைய பரிபூரண ஆசீர்வாதம் உங்கள் குடும்பத்திற்கு கிடைக்கும். அது என்ன பரிகாரம் ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
நிலைவாசலில் ஏற்ற வேண்டிய ஒரு விளக்க பரிகாரம் தான் இது. பெரும்பாலும் அந்த காலத்தில் எல்லாம் வீட்டிற்கு வெளியே, விலைவாசலில் முக்கோண வடிவில் ஒரு மாடம் அமைத்திருப்பார்கள். அந்த மாடத்தில், மாலை 6 மணி ஆகிவிட்டால் விளக்கு எரிய தொடங்கிவிடும். ஏனென்றால் இருள் சூழக்கூடிய நேரம் தான் சனி பகவானுக்கு உரிய நேரமாக சொல்லப்பட்டுள்ளது.
சனி பகவானுக்கு உரிய நட்சத்திரம், பரணி நட்சத்திரம். பரணி நட்சத்திரத்தின் வடிவம் முக்கோணம். முன்னோர்களுக்கு, சனி பகவானின் தாக்கம் குறைவாக இருந்ததற்கு காரணம், அவர்கள் நிலை வாசலில் முக்கோண வடிவில் இருக்கக்கூடிய மாடத்தில் மாலை நேரத்தில், விளக்கு ஏற்றி வழிபாடு செய்ததும் ஒன்று என்பது ஜோதிடர்களின் கணிப்பு. ஆனால் இன்று அந்த பழக்கம் நம்மிடம் இல்லை.
நம்முடைய வீட்டு வாசலில் முக்கோண மாடமும் இல்லை. நிலை வாசலில் மாலை நேரத்தில் விளக்கு ஏற்றக்கூடிய வழக்கமும் மறைந்து போய்விட்டது. உங்களுடைய வீட்டு நிலை வாசலில் முக்கோணத்தில் மாடம் இல்லை என்றாலும் பரவாயில்லை. ஒரு மரப்பலகையைக் கொண்டு முக்கோண வடிவில் மாடம் போல தயார் செய்து சுவற்றில் அடித்து வைத்து விடுங்கள்.
அந்த மாடத்திற்கு உள்ளே மாலை 6:00 மணிக்கு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு குலதெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்து கொண்டால், உங்களுடைய குடும்பத்திற்கு பெருசாக எந்த கஷ்டமும் நஷ்டமும் வரவே வராது. இது நிதர்சனமான உண்மை. நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பாருங்கள். குடும்பத்தில் இருக்கும் பெரிய பெரிய பிரச்சனைகள் கூட சாதாரணமாக சரியாகிவிடும்.
லட்ச ரூபாய் கொடுத்து ஹோமம் செய்து சரி செய்ய முடியாத பிரச்சினைகளை கூட, சுலபமாக சரி செய்யக்கூடிய சக்தி இந்த விளக்கு வழிபாட்டில் இருக்கிறது. நம்பிக்கை இருந்தால் நீங்களும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். தொடர்ந்து இதுபோல விளக்கை 3 மாதங்கள் ஏற்றி பாருங்கள். உங்களுக்கே வித்தியாசம் தெரிந்து விடும். இந்த விளக்கை ஏற்றுவதன் மூலம் எந்த ஒரு நஷ்டமும் உங்களுக்கு ஏற்பட போவது இல்லை.
இதையும் படிக்கலாமே: அவமானத்தை போக்கும் வாராஹி வழிபாடு
மாடத்தை அமைக்க ஆயிரம் ரூபாய் செலவு செய்தால் கூட போதும், இன்றைய சூழ்நிலையில் மாடத்தை நீங்கள் அமைத்துக் கொள்ளலாம். உங்கள் கஷ்டங்களை போக்கக்கூடிய எளிமையான சக்தி வாய்ந்த பரிகாரங்களில் இதுவும் உண்டு. நம்பிக்கை இருந்தால் இதை நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம். நல்லது நினைத்தால் நல்லது மட்டுமே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.