- Advertisement -

சுக்கிர தோஷம் விலக எளிமையான பரிகாரங்கள்

ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிர பகவான் லக்னத்தில் இருந்து ஆறாம் இடத்தில் இருந்திருந்தாலோ அல்லது தீமை செய்யும் கிரகங்களோடு சேர்ந்திருந்தாலோ சுக்ர தோஷம் என்பது ஏற்படும் என்று ஜோதிட ரீதியாக கூறப்படுகிறது. அப்படி சுக்ர தோஷம் ஏற்பட்டிருந்தால் அவருடைய வாழ்க்கையில் பண பற்றாக்குறை ஏற்படும்.

கணவன் மனைவிகளுக்கிடையே அன்னியோன்யம் இருக்காது. எப்பொழுதும் சண்டை சச்சரவாக இருக்கும். ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்க முடியாது. இப்படி பல விஷயங்கள் ஏற்படும். அப்படிப்பட்ட சுக்கிரதோஷத்தை நீக்குவதற்கு பல பரிகாரங்கள் இருக்கிறது. அவற்றுள் எளிமையான சில பரிகாரங்களை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

சுக்கிர தோஷம் நீங்க

சுக்கிரனின் அருள் ஒருவருக்கு பரிபூரணமாக கிடைத்துவிட்டால் பணவரவு என்பது ஏற்பட்டு கொண்டே இருக்கும். அதோடு சுகபோகமான வாழ்க்கையை வாழ முடியும். ஆடம்பரமான வசதியான வாழ்க்கையை வாழ முடியும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். அப்படிப்பட்ட சுக்கிர பகவானின் அருளை நாம் பெற வேண்டும் என்றால் அதற்கு என்று சில வழிமுறைகள் இருக்கிறது. அந்த வழிமுறைகளை பின்பற்றும் பொழுது சுக்கிர பகவானால் ஏற்பட்ட தோஷங்கள் அனைத்தும் நீங்கி சுக்கிரனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

சுக்கிர பகவானுக்குரிய கிழமையாக கருதப்படுவது வெள்ளிக்கிழமை. வெள்ளிக்கிழமை அன்று அருகில் இருக்கும் அம்மன் ஆலயத்திற்கு சுக்கிர ஹோரையில் சென்று ரசகுல்லாவை தானமாக தரலாம் அல்லது கல்கண்டு சாதத்தை தானமாக தருவதன் மூலம் சுக்கிர யோகம் உண்டாகும். ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபட செல்லும் பொழுது இந்த பரிகாரத்தை செய்துவிடலாம் என்று நினைக்காதீர்கள்.

- Advertisement -

ராகு காலத்தில் சுக்கிரனுக்குரிய பரிகாரத்தை செய்தாலே அது சுக்கிரதோஷம் உண்டாக காரணமாகிவிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதனால் வெள்ளிக்கிழமை சுக்கிர பகவானுக்குரிய தோஷ நிபர்த்தியை செய்வதாக இருக்கும் பட்சத்தில் சுக்கிர ஹோரையில் செய்வதுதான் சிறப்புக்குரியது. ராகு காலத்தை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும்.

வீட்டில் தினமும் நெய் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வதன் மூலமும் சுக்கிர தோஷம் நிவர்த்தி ஆகும். தினமும் ஏற்ற இயலாது என்பவர்கள் வெள்ளிக்கிழமை மட்டும் ஆவது நெய் தீபத்தை ஏற்ற வேண்டும். அடுத்தது நாம் எந்த அளவிற்கு சுத்தமாக இருக்கிறோமோ அந்த அளவிற்கு சுக்கிர வசியம் உண்டாகும் என்று கூறப்படுகிறது. நாம் சுத்தமாக இருப்பது போல நம்முடைய வீட்டையும் நாம் சுத்தமாக வைத்துக் கொண்டோம் என்றால் சுக்கிர வசியம் என்பது உண்டாகும். அதிலும் குறிப்பாக படுக்கையறை என்பது மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:பணத்தடை நீங்கி பண வசியம் உண்டாக மிளகு பரிகாரம்

இந்த எளிமையான பரிகாரங்களை முழு மனதுடனும் தொடர்ச்சியாகவும் செய்து வரும்பொழுது சுக்கிரனால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கி சுக்கிர வசியமும் சுக்கிர யோகமும் உண்டாகி வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வரலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்

- Advertisement -