- Advertisement -

30-4-2024 ஆம் தேதி அதாவது இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை, திரி புஷ்கர யோகம் இருக்கிறது. திரி புஷ்கர யோகம் என்றால் என்ன? இந்த நாளில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். ஞாயிறு, செவ்வாய், சனிக்கிழமையோடு, துவிதியை, சப்தமி, துவாதசி திதிகளோடு, உத்திரம், பூரட்டாதி, புனர்பூசம், கார்த்திகை, உத்திராடம், நட்சத்திரங்களும் சேர்ந்து வந்தால் அது திரி புஷ்கர யோகம் என்று சொல்லப்படுகிறது.

அதாவது மேற்குறிப்பிட்ட கிழமைகளில், மேற்குறிப்பிட்ட திதிகளும், நட்சத்திரங்களும் சேர்ந்து வர வேண்டும். ஒரு குறிப்பிட்ட கிழமை, குறிப்பிட்ட திதி, குறிப்பிட்ட நட்சத்திரம் சேரும் போது இந்த திரி புஷ்கர யோகம் வரும். அந்தக் குறிப்பிட்ட கிழமை திதி நட்சத்திரங்களை மேலே குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை, கார்த்திகை நட்சத்திரம், சப்தமி திதி, இருக்கிறது. அதனால் இன்றைய நாளில் திரிபுஷ்கர யோகம் இருக்கிறது என்று சொல்கின்றோம்.

- Advertisement -

30-04-2024 திரி புஷ்கர யோகம்

இந்த நாளில் நீங்க எதை செய்தாலும் அது மூன்று முறை திரும்பவும் உங்களுக்கு நடக்கும் என்பது நம்பிக்கை. நீங்க நல்லது செய்தாலும் அது மூன்று முறை நடக்கும். நீங்க கெட்டது செய்தாலும் அது மூன்று முறை நடக்கும். அப்போ உங்களுக்கு மீண்டும் மீண்டும் நடக்க வேண்டிய நல்லதை இந்த நாளில் தொடங்க வேண்டும்.

நிறைய பணம் சேர வேண்டும், நிறைய தங்கம் சேர வேண்டும், நிறைய வெள்ளி வைடூரியங்கள் வீட்டில் சேர வேண்டும் என்றால் இன்றைய தினம் உங்களால் முடிந்த பணத்தை கொடுத்து கடையிலிருந்து தங்கம் வெள்ளி போன்ற பொருட்களை வாங்கலாம். இதற்காக கடன் வாங்கி தங்கம் வாங்காதீங்க. பிறகு கடன் வாங்கக்கூடிய சூழ்நிலையும் மீண்டும் மீண்டும் மூன்று முறை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

உங்களுடைய குழந்தைகளின் பெயரில் வங்கியில் கணக்கு தொடங்கலாம். மீண்டும் மீண்டும் அந்த வங்கிக் கணக்கில் பணம் சேரும்‌. அந்த பணம் உங்களுக்கு மூன்று மடங்கு லாபத்தை கொடுக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அதேபோல சீட்டு போடுவது, நகை சீட்டு கட்டுவது, போன்ற நல்ல விஷயங்களை இன்று தொடங்குங்கள்.

நீங்கள் வாங்கிய கடனிலிருந்து ஒரு சிறு தொகையையாவது திருப்பிக் கொடுங்கள். கடன் சீக்கிரம் அடையும். அடமானத்தில் நகையை வைத்திருந்தால் அந்த நகையை மீட்பதற்கு ஒரு சிறு தொகையை இன்று திருப்பி கட்டுங்கள். சீக்கிரம் அடமானத்தில் இருக்கும் நகை உங்கள் வீடு திரும்பும்.

- Advertisement -

இன்றைய நாளில் இறைவழிபாடு செய்வது கோவிலுக்கு சென்று, விளக்கு போடுவது, அன்னதானம் செய்வது போன்ற நல்ல காரியங்களை செய்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். இன்னைக்கு செவ்வாய் கிழமையாக இருக்கிறது. திரி புஷ்கரண யோகமும் இருக்கிறது. நிறைய பேருக்கு பிள்ளைகளின் படிப்புக்காக ஸ்கூலில் அட்மிஷன் போடலாமா என்ற சந்தேகம் இருக்கும்.

வருடத்தில் ஒருமுறை செய்ய வேண்டிய வேலை இது ஆகவே இன்னைக்கு ஸ்கூலுக்கு சென்று பள்ளிக்கூடத்தில் அட்மிஷன் போட வேண்டாம். பிறகு ஏதாவது பிரச்சனையால் மூன்று முறை அட்மிஷன் போடக்கூடிய சந்தர்ப்பங்கள் வந்துவிடும். அதனால் அதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

இன்று குடும்பத்தோடு சந்தோஷமாக நேரத்தை செலவு செய்யுங்கள். உங்களுடைய பிள்ளைகளுக்கு பிடித்தமான பொருட்களை வாங்கி கொடுக்கலாம். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ச்சியாக இருக்கலாம். மற்றபடி கடன் வாங்குவது சண்டை போடுவது போன்ற இந்த எதிர்மறையான வேலையையும் செய்யாதீங்க.

இதையும் படிக்கலாமே: மே மாதத்தில் நல்லது நடக்க சொல்ல வேண்டிய மந்திரம்

உங்களுக்கு மனநிம்மதியை தரக்கூடிய சந்தோஷத்தை கொடுக்கக் கூடிய விஷயங்களை மட்டும் என்று செய்யுங்கள். உங்களுக்கு துன்பத்தை கொடுக்கக்கூடிய வேதனையை கொடுக்கக்கூடிய எந்த விஷயத்தையும் இன்னைக்கு செய்யாதீங்க. நல்லதே நடக்கும். அதி அற்புதம் வாய்ந்த இப்படி ஒரு தகவலை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மன மகிழ்ச்சியுடன் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -