- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் பணம் என்பது எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு விலை உயர்ந்த பொருட்களும் முக்கியமாகவே கருதப்படுகிறது. ஒருவரிடம் எந்த அளவிற்கு பணம் இருக்கிறதோ அதே அளவிற்கு விலை உயர்ந்த பொருட்களும் இருக்கும். அதை பார்த்து தான் இந்த சமுதாயமே மதிப்பும் மரியாதையும் தருகிறது. ஒரு திருமண விழாவிற்கு செல்லும் பொழுது எந்தவித நகைகளும் அணியாமல் சென்றோம் என்றால் நமக்கு வரவேற்பை கிடைக்காது.

இதே கழுத்து நிறைய தங்க நகைகளை போட்டுக்கொண்டு சென்றோம் என்றால் நமக்கு கிடைக்கும் மரியாதையே வேறு விதமாக தான் இருக்கும். அந்த அளவிற்கு தங்கத்திற்கு இந்த சமுதாயத்தில் அதிக முக்கியத்துவம் இருக்கிறது. அப்படிப்பட்ட தங்கத்தை நம் வீட்டில் அதிக அளவு சேர்க்க வேண்டும் என்று நினைத்தால் வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி தாயாருக்கு எந்த முறையில் பரிகாரம் செய்து வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

பணத்திற்கு அதிபதியாக திகழக்கூடியவள் மகாலட்சுமி தாயார் என்பது நம் அனைவருக்குமே தெரியும். அதே மகாலட்சுமி தாயார் தான் தங்கத்திற்கும் அதிபதியாக திகழ்கிறாள். மகாலட்சுமிக்கு உகந்த கிழமையாக கருதப்படுவது வெள்ளிக்கிழமை என்பதாலும் ஆடம்பர வசதிக்கு சுக்கிர பகவான் உரியவர் என்பதாலும் இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் செய்வது சிறப்பு.

வெள்ளிக்கிழமை அன்று வரக்கூடிய சுக்கிர ஹோரையில் மகாலட்சுமி தாயாருக்கு முன்பாக நெய் ஊற்றி அதில் சிறிது ஜவ்வாது பொடியை சேர்த்து தீபம் ஏற்ற வேண்டும். பிறகு ஒரு சிறிய தட்டை எடுத்து அதில் கஸ்தூரி மஞ்சள் தூளை சேர்த்து பிள்ளையார் பிடிப்பது போல் பன்னீரை ஊற்றி பிணைந்து கொள்ள வேண்டும். இப்பொழுது நல்ல கிழியாத சுத்தமான வெற்றிலையாக ஒரு வெற்றிலையை எடுத்து ஒரு சிறிய தாம்பாள தட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதற்கு மேல் வெள்ளி நாணயத்தை வைக்க வேண்டும். வெள்ளி நாணயம் இல்லை என்றால் கண்டிப்பான முறையில் வெள்ளி நாணயத்தை வாங்கி வந்து செய்ய வேண்டும். வெள்ளி நாணயத்தை வைத்து அந்த வெள்ளி நாணயம் தெரியாத அளவிற்கு பிணைந்து வைத்திருக்கும் மஞ்சள் அதற்கு மேல் பிள்ளையார் பிடிப்பது போல் பிடித்து வைக்க வேண்டும். அடுத்ததாக இந்த மஞ்சளுக்கு மேல் முட்டு உடையாத மூன்று கிராம்பை எடுத்து மஞ்சளில் அழுத்தி வைத்து விட வேண்டும்.

பிறகு அந்த மஞ்சளை சுற்றி ஐந்து இடங்களில் குங்கும பொட்டு வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது இந்த வெற்றிலையை நாணயமும் மஞ்சளும் தெரியாத அளவிற்கு நன்றாக மடித்துக்கொள்ள வேண்டும். மடித்த இந்த வெற்றிலையை வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய பெருமாளின் பாதங்களுக்கு கீழோ அல்லது மகாலட்சுமி தாயாரின் பாதங்களுக்கு கீழோ வைத்து விட வேண்டும். இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது முழுக்க முழுக்க உங்களுக்கு தங்க நகை சேர வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்க வேண்டும். வேறு எந்த சிந்தனையும் இருக்கக் கூடாது.

- Advertisement -

மறுநாள் காலையில் எப்போதும் போல் எழுந்து குளித்து வீட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு இந்த வெற்றிலை, கிராம்பை எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். மஞ்சளை மட்டும் எடுத்து உங்களுடைய முகத்தில் தடவி குளித்துக் கொள்ளலாம். அல்லது தண்ணீரில் கலந்து வீடு முழுவதும் தெளித்துக் கொள்ளலாம். வெள்ளி நாணயத்தை அது எப்போதும் இருக்கும் இடத்தில் கொண்டு போய் வைத்து விடலாம்.

இந்த முறையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நாம் வெள்ளி நாணயத்தை வைத்து பரிகாரம் செய்ய தங்க நகை சேர்வதற்குரிய வாய்ப்புகள் நம்மை தேடி வரும். மேலும் அடமானத்தில் இருக்கக்கூடிய நகைகளையும் நம்மால் எளிதில் திருப்ப முடியும்.

இதையும் படிக்கலாமே கஷ்டங்கள் தீர அஷ்டமி பரிகாரம்

மகாலட்சுமி தாயார், சுக்கிர பகவான், குரு பகவான் போன்றோர்களின் அம்சம் நிறைந்த இந்த பரிகாரத்தை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையில் ஆசைப்பட்ட அனைத்து நகைகளையும் வாங்குவதற்குரிய யோகம் உண்டாகும்.

- Advertisement -