- Advertisement -

விளக்கு ஏற்றும் போது சொல்ல வேண்டிய முருகன் மந்திரம்

வெற்றியை தரக்கூடிய கடவுள் அந்த முருகப்பெருமான்தான். வாழ்க்கையில் இதுவரை எங்களுக்கு வெற்றியே கிடைத்ததில்லை. கஷ்டங்களை மட்டும் தான் அனுபவித்து வருகின்றோம். வாழ்வில் முன்னேற எத்தனை முறை முயற்சி செய்தும், முயற்சிகள் தோல்வியில்தான் முடிவடைகின்றன என்பவர்கள் எல்லாம், முருகப்பெருமானை நினைத்து செவ்வாய்க்கிழமை தோறும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

நிச்சயமாக வெற்றி உங்களைத் தேடி வரும். வெற்றியை கொடுக்கும் வழிபாட்டையும் மந்திரத்தையும் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா. நாம் அனைவருக்குமே தெரியும் செவ்வாய்க்கிழமை முருகர் வழிபாடு சிறப்பு வாய்ந்தது என்று. வீடு கட்ட, கடன் சுமை குறைய, திருமணம் நடக்க எப்படி முருகர் வழிபாட்டை மேற்கொள்கின்றோமோ, அதே போல தான் வெற்றி கிடைக்கவும் முருகர் வழிபாடு நமக்கு வழிவகுக்கும்.

- Advertisement -

ஒவ்வொரு நாளும் காலையிலேயே எழுந்து சுத்த பத்தமாக குளித்துவிட்டு காலை 6 மணி முதல் 7 மணி வரை இருக்கக்கூடிய நேரத்தில், பக்கத்தில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று விளக்கு போட்டு முருகப்பெருமானை வேண்டி 6 முறை வலம் வர வேண்டும். கோவிலில் விளக்கு ஏற்றும் போதும் இந்த மந்திரத்தை சொல்லலாம்.

கோவிலுக்கு சென்ற இந்த வழிபாட்டை செய்ய முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே காலை முருகப்பெருமானின் திருவுருவப்படத்திற்கு முன்பாக விளக்கை ஏற்றும்போதும், இந்த மந்திரத்தை சொல்லி விளக்கு ஏற்றி முருகா நீயே துணை, வாழ்க்கையில் இருக்கும் தீராத துன்பங்கள் தீர வேண்டும், வெற்றி மேல் வெற்றி கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை வைத்துக் கொண்டாலும் நிச்சயம் வெற்றி கிடைக்கும். முருகப்பெருமானை நினைத்து விளக்கு ஏற்றும் போது சொல்ல வேண்டிய இரண்டு வரி மந்திரம் இதோ உங்களுக்காக.

- Advertisement -

விளக்கு ஏற்றும் போது சொல்ல வேண்டிய முருகர் மந்திரம்

தீப மங்கள ஜோதீ நமோ நம!
தூய அம்பல லீலா நமோ நம!
ஞான பண்டித ஸாமீ நமோநம! அருள்தாராய்

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் இருந்து எடுக்கப்பட்ட ஜோதி மந்திரம் தான் இது. தூய மனதோடு விளக்கு ஏற்றும் போது முருகனை மட்டும் மனதில் நினைத்து இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும். எந்த அளவுக்கு வீட்டில் தீபம் ஏற்றி வழிபாடு செய்கிறீர்களோ, அந்த அளவுக்கு உங்களுடைய வீட்டில் இருள் என்னும் கஷ்டம் விலகும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

செவ்வாய்க் கிழமை மட்டுமல்ல தினம் தோறும் வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும். தினம் தோறும் வீட்டில் விளக்கு ஏற்றும் போது முருகப்பெருமானின் நினைத்து இந்த மந்திரத்தை சொன்னால் கூட தவறு கிடையாது. மந்திரத்தை உச்சரிக்க எண்ணிக்கை அவசியம் கிடையாது.

இதையும் படிக்கலாமே: பணம் சேர பூஜை அறையில் கட்டாயம் இருக்க வேண்டிய பொருள்.

உங்களால் எத்தனை முறை மந்திரத்தை உச்சரிக்க முடியுமோ, அத்தனை முறை இந்த மந்திரத்தை தினம்தோறும் உச்சரிக்கலாம். வாழ்க்கையில் இருக்கும் இருள் நீங்கும். பிரகாசமான வாழ்க்கை கிடைக்கும் வெற்றி மேல் வெற்றி குவியும். முருகப்பெருமானின் அருள் அனைவருக்கும் கிடைக்க பிரார்த்தனை செய்து இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -
Published by