- Advertisement -
பாரதியார் கவிதைகள்

சிட்டுக் குருவியைப் போலே – பாரதியார் கவிதை

[பல்லவி]
விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச்
சிட்டுக் குருவியைப் போலே

Bharathiyar Kavithai

[சரணங்கள்]
எட்டுத் திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு. (விட்டு)

- Advertisement -

பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்றுப்
பீடையிலாத தொர் கூடு கட்டிக்கொண்டு
முட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு. (விட்டு)

முற்றத்தி லேயுங் கழனி வெளியிலும்
முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு
மற்றப் பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின்
வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று. (விட்டு)

- Advertisement -
Bharathiyar Kavithai

இதையும் படிக்கலாமே:
மரணத்தை வெல்லும் வழி – பாரதியார் கவிதை

இது போன்ற மேலும் பல பாரதியார் கவிதைகள் மற்றும் தமிழ் கவிதைகள் பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Bharathiyar kavithai – chittu kuruviye pole. This Bharathiyar Padal starts with “Vittu viduthalai lyrics in Tamil”

- Advertisement -
Published by