- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

பண வரவை அதிகரிக்க அட்சய திருதியை பரிகாரம்

இந்த நொடி நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வாழ்க்கை மாற வேண்டும் என்றால் நமக்கு பணவரவு என்பது அதிகரிக்க வேண்டும். முயற்சிகள் செய்யாமல் பணவரவு என்பது அதிகரிக்காது. ஒரு சிலருக்கு என்னதான் முயற்சி செய்தாலும் பணவரவு அதிகரிப்பதற்குரிய வாய்ப்புகளே ஏற்படாது. இன்றைய காலகட்டத்திலும் கிராமப்புறங்களில் “என்னதான் உடம்பில் எண்ணெயை தேய்த்துக் கொண்டு உருண்டாலும் ஒட்டுகிற மண்தான் ஒட்டும்” என்று கூறும் பழமொழியை கேட்டிருப்போம். அந்த வகையில் நாம் என்னதான் முயற்சி செய்தாலும் நமக்கு வரவேண்டிய பணம் தான் வரும் என்று கூறப்படுகிறது. அதையும் மீறி நமக்கு பணவரவு அதிகரிக்க வேண்டும் என்றால் நம்முடைய முயற்சியுடன் தெய்வ வழிபாட்டையும் நாம் மேற்கொள்ள வேண்டும்.

அப்படி நம்முடைய பணவரவை அதிகரிக்க உதவக்கூடிய தெய்வமாக திகழ்ந்தவர் தான் மகாலட்சுமி தாயார். மகாலட்சுமி தாயாருக்கு மிகவும் உகந்த தினமாக கருதப்படும் இந்த அட்சய திருதியை நாளில் மகாலட்சுமி தாயாருக்கு பூஜை செய்கிறோமோ இல்லையோ அவருக்கு பிடித்தமான பொருட்களை வாங்கி வைத்து வழிபாடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று பலரும் கூறுவார்கள். இப்படி பூஜை செய்யாமல், வழிபாடு செய்யாமல் மகாலட்சுமி தாயாருக்கு பிடித்தமான ஏலக்காயை வைத்து தாந்திரீக முறைப்படி எப்படி பரிகாரம் செய்தால் நம்முடைய பண வரவு அதிகரிக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு நமக்கு ஆறு ஏலக்காய் வேண்டும். சிவப்பு நிறத்தில் எழுதக்கூடிய பேனா அல்லது ஸ்கெட்ச் வேண்டும். வேறு எதுவும் தேவையில்லை. இந்த இடத்தில் இருந்து கொண்டு தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் இல்லை. யார் வேண்டுமானாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். பிறப்பு தீட்டு, இறப்பு தீட்டு, பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிடாய் போன்ற எந்த தீட்டாக இருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

வேலை செய்யும் இடத்திலோ, வீட்டிலோ, உறவினரின் இல்லத்திலோ எங்கு வேண்டுமானாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது நேரம் மட்டும்தான். நாளை வெள்ளிக்கிழமை என்பதால் வெள்ளிக்கிழமையில் வரக்கூடிய சுக்கிர ஹோரையில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். காலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள் சுக்கிர ஹோரை என்றாலும் அக்ஷய திருதியை காலை 6:30 மணிக்கு மேல் தான் தொடங்குகிறது என்பதால் 6:30 மணியிலிருந்து 7:00 மணிக்குள்ளும், மதியம் 1:00 மணியிலிருந்து 2:00 மணிக்குள்ளும், இரவு 8:00 மணியில் இருந்து 9:00 மணிக்குள்ளும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

- Advertisement -

இந்த மூன்று நேரத்தில் ஏதாவது ஒரு நேரத்தை தேர்வு செய்து நம்முடைய மனதை ஒரு நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்ததாக உடையாத நல்ல பச்சை நிறத்தில் இருக்கக்கூடிய ஏலக்காயாக பார்த்து ஆறு ஏலக்காய்களை எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக சிவப்பு நிறத்தில் எழுதக்கூடிய பேனா அல்லது ஸ்கெட்ச் வேண்டும் என்று சொன்னோமல்லவா அதை எடுத்து ஒவ்வொரு ஏலக்காயிலும் முடிவிழி சின்னத்தை போடுங்கள் அதாவது இன்ஃபினிட்டி சின்னத்தை போடுங்கள். 6 ஏலக்காய்களிலும் இப்படி வரைந்து விட்டு இதை ஒரு பேப்பரில் அப்படியே மடித்து நாம் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும்.

வீட்டில் இல்லாமல் வெளியில் இருந்து இந்த பரிகாரத்தை செய்பவர்கள் தங்களுடைய பர்ஸ்ஸில் இந்த ஏலக்காய்களை வைத்துக் கொள்ளலாம். இந்த ஏலக்காய்களை தொடர்ந்து மூன்று மாதம் அப்படியே இருக்கட்டும். மூன்று மாதம் கழித்து இதை கால் படாத இடத்தில் எடுத்துப் போட்டு விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: தொழிலில் இருக்கும் பிரச்சனைகள் நீங்க விநாயகர் வழிபாடு

மிகவும் எளிமையான தாந்திரீக பரிகாரத்தை நாளை செய்து நம்முடைய பணவரவை அதிகரித்துக் கொள்வோம்

- Advertisement -