- Advertisement -

அட்சய திதியில் செய்ய வேண்டிய மகாலட்சுமி பூஜை

கை நீட்டி கடன் வாங்கும் வரைக்கும் தான் நமக்கு சுதந்திரம். கைநீட்டி கடனை வாங்கி விட்டால், அன்றே நம்முடைய சுதந்திரம் பறிபோய்விட்டது என்று அர்த்தம். காரணம் நாம் என்ன வேலை செய்தாலும், அதை நோட்டம் விட்டுக் கொண்டே இருப்பார்கள். கடனை திருப்பித் தரவில்லை, புது துணி எடுக்கிறீர்களா?

கடனை திருப்பித் தரவில்லை, சந்தோஷமாக ருசியாக சாப்பிடுகிறீர்களா. கடனை திருப்பித் தரவில்லை வெளியிடங்களுக்கு போய் மட்டும் ஊர் சுற்றத் தெரியுமா? இப்படி பல கேள்விகள் உங்களைப் பின் தொடரும். இன்னும் சொல்லப் போனால் நீங்கள் யாரிடம் கைநீட்டி கடன் வாங்கினீர்களோ, அவர்களுக்கு நீங்கள் அடிமை வாழ்க்கை தான் வாழ வேண்டும்.

- Advertisement -

ஆக கடன் இல்லாத வாழ்க்கையே நமக்கு சுதந்திரமான வாழ்க்கையாக இருக்க முடியும். கடன் இல்லாமல் வாழ அட்சய திருதியை அன்று நாம் செய்ய வேண்டும் ஒரு மகாலட்சுமி பூஜையைப் பற்றியும், மகாலட்சுமி மந்திரத்தை பற்றியும் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

கடன் இல்லாமல் வாழ அட்சய திருதியை வழிபாடு

10-05-2024 வெள்ளிக்கிழமை அன்று அட்சய திருதியை வருகிறது. வெள்ளிக்கிழமை காலை 10:45 மணிக்கு முன்பாக இந்த பூஜையை உங்களுடைய வீட்டில் நீங்கள் செய்து முடித்திருக்க வேண்டும் ஏனென்றால் அன்று புதன் பாகவான், சுக்கிர பகவானின் சேர்க்கை இருக்கிறது.

- Advertisement -

ரோகிணி நட்சத்திரமும் சேர்ந்து வந்திருக்கிறது என்பதால், அன்றைய தினம் நீங்கள் செய்யக்கூடிய பூஜை உங்களுக்கு பல மடங்கு பலனை தரும். அதிலும் குறிப்பாக மகாலட்சுமி பூஜை செய்யும் போது பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உடனே தீரும் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த பூஜைக்கு பன்னீர் ரோஜா அவசியம் தேவை. பன்னீர் ரோஜா கிடைக்காத பட்சத்தில் கொஞ்சமாக பன்னீரை ஒரு கிண்ணத்தில் ஊற்றி எடுத்துக் கொள்ளுங்கள்.

பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, வெள்ளை நிற வாசனை பூக்களை மகாலட்சுமிக்கு அலங்காரம் செய்துவிட்டு, கற்கண்டு சாதம் நெய்வேதியம் செய்து வைக்க வேண்டும். உங்களால் கற்கண்டு சாதம் நெய்வேத்தியம் செய்து வைக்க முடியாத பட்சத்தில், வெறும் டைமன் கற்கண்டுகளை மகாலட்சுமிக்கு பிரசாதமாக வைத்துவிட்டு, பூஜை அறையில் அமர்ந்து பன்னீர் ரோஜா கிடைத்தால் அதை உங்களுடைய 2 உள்ளங்கைகளில் வைத்துக் கொண்டு, மகாலட்சுமி தாயை மனதார நினைத்து ‘ஓம் ஸ்ரீம் ஸ்ரீயை நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லிவிட்டு உங்களுக்கு இருக்கும் கடன் சுமை குறைய வேண்டும்.

- Advertisement -

பணக்கஷ்டம் தீர வேண்டும் இனிமேல் கடன் வாங்காத சூழ்நிலை உருவாக வேண்டும் என்று தாயாரை மனதார பிரார்த்தனை செய்தால் அந்த வேண்டுதல் அப்படியே பலிக்கும். மந்திரத்தை சொல்லி முடித்துவிட்டு அந்த பூக்களை கொண்டு போய் அப்படியே பீரோவில் பணம் வைக்கும் பெட்டியில் வைக்கலாம்.

ஒருவேளை உங்களுக்கு இந்த பன்னீர் ரோஜா கிடைக்கவில்லை என்றால் இரண்டு கைகளிலும் கொஞ்சமாக பன்னீரை ஊற்றி தேய்த்துக்கொண்டு, அந்த பன்னீர் வாசம் நிறைந்த உள்ளங்கைகளை ஏந்தியபடி மகாலட்சுமி தாயாரிடம் இந்த மந்திரத்தை சொல்லலாம். அட்சய திருதியை அன்று ஒரு செயலை நாம் செய்யும்போது அந்த செயல் நமக்கு பல மடங்கு பெருகும் என்பதாக ஆன்மீகத்தில் சொல்லப்பட்டது உள்ளது.

இதன் அடிப்படையில் உங்கள் பணக்கஷ்டம் தீர வேண்டும் என்றும், வருமானம் உயர வேண்டும் என்றும், நாளை மகாலட்சுமி தாயை நினைத்து நீங்கள் வைக்கும் இந்த பிரார்த்தனை அப்படியே உங்கள் வாழ்க்கையில் தொடர தொடங்கும். நிச்சயம் கடன் இல்லாத வாழ்க்கையை நீங்கள் வாழுவீர்கள்.

இதையும் படிக்கலாமே: குரு பகவானை வசியம் செய்ய திலகம்

கடனை திருப்பி கொடுக்க வருமானம் அதிகரிப்பது, ஒரு சந்தோஷம் என்றால், அடுத்தடுத்து கடன் வாங்காத அளவுக்கு நம்முடைய வாழ்க்கை நிலைமை மாறுவதற்கும் இந்த பரிகாரம் உங்களுக்கு வழிவகுக்கும். நம்பிக்கையோடு செய்யுங்கள் நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -