குரு பகவானை வசியம் செய்ய திலகம்

guru1
- Advertisement -

வருடத்திற்கு ஒருமுறை இந்த குரு பெயர்ச்சியானது நடக்கும். நம்முடைய ராசிக்கு நல்லது செய்யும் குரு பகவான், ஒரு வருடம் கழித்து வேறு ஒரு ராசியில் சென்று அமர்ந்து விடுவார். இந்த குரு பகவான் நம்மை சாதகமாக பார்த்தால் பிரச்சனை இல்லை. ஆனால் பாதகமாக பார்த்தால் நம்முடைய கதை முடிந்தது.

உங்களுடைய ஜாதக கட்டத்தில் குரு பகவான் உங்களுக்கு சாதகமாக வேலை செய்யவில்லையா. வரக்கூடிய பணம் கைக்கு வந்து சேரவில்லை, கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது, வீட்டில் வறுமை நிம்மதி இல்லை, என்பவர்கள் வியாழக்கிழமை தோறும் குரு பகவானை நினைத்து இந்த திலகத்தை நெற்றியில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஜாதகத்தில் கோபமாக கோரத்தாண்டவம் ஆடும் குரு கூட, சாந்தமடைந்து உங்களுக்கு நல்லது செய்ய தொடங்கி விடுவார். குரு பகவானை வசியம் செய்யும் திலகத்தை எப்படி தயார் செய்வது ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.

குருபகவான் வசிய திலகம்

வியாழக்கிழமை அதிகாலை வேலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்து விடுங்கள். 5:30 மணியிலிருந்து 6:30 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்து முடித்து விட வேண்டும். சூரிய உதயத்திற்கு முன்பு இந்த பரிகாரத்தை செய்வது மிக சிறப்பான பலனை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது காலை 6 மணிக்கு முன்பு.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு நமக்கு கொஞ்சமாக குங்குமப்பூ தேவைப்படும். கொஞ்சமாக வாசம் நிறைந்த தாழம்பூ குங்குமம் தேவைப்படும். இந்த குங்குமப்பூவை ஒரு கல்லில் வைத்து லேசாக அரைத்தால், பேஸ்ட் போல மாறிவிடும். கொஞ்சமா ஒரு சிட்டிகை குங்குமப்பூ எடுத்துக் கொள்ளுங்கள் போதும்.

அதில் கொஞ்சம் தண்ணீர் விட்டு கொஞ்சமாக குங்குமத்தை போட்டு குழைத்து, உங்களுடைய நெற்றியில் குரு பகவானை நினைத்து திலகமாக வைத்துக் கொள்ள வேண்டும். குங்குமப்பூவும், குங்குமமும் சேர்ந்த திலகம் குரு பகவானை வசியம் செய்ய உகந்ததாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. வியாழக்கிழமை மட்டும் இந்த திலகத்தை நெற்றியில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதேபோல வியாழக்கிழமை, அரச மரத்திற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். மூன்றிலிருந்து ஐந்து வியாழக்கிழமை அரசமரத்திற்கு தண்ணீரை ஊற்றி பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் நம்ப முடியாத நல்ல அதிசயங்கள் நடக்கும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் உடனடியாக தீரும். அந்த மஞ்சள் தண்ணீரை எப்படி அரச மரத்திற்கு ஊற்ற வேண்டும் தெரியுமா.

ஒரு பித்தளை சொம்பு அல்லது செம்பு சொம்பு எடுத்துக்கணும். அதில் நிரம்ப தண்ணீர் எடுத்து, அதில் கொஞ்சமாக மஞ்சள் தூள் போட்டு உங்கள் கையை கொண்டு கரைத்துக் கொள்ளுங்கள். இந்த சொம்பிலிருந்து தண்ணீரை மரத்தின் வேர் பகுதியில் ஊற்ற வேண்டும். அரச மரத்தின் வேர் பகுதியில், தண்ணீரை வேருக்கு ஊற்றும்போது உங்கள் கையை அந்த சொம்பின் வாய் பகுதியில் வைத்துக் கொண்டு ஊற்ற வேண்டும்.

அந்த தண்ணீர் உங்களுடைய வலது உள்ளங்கைகளில் பட்டு அரசமரத்து வேருக்கு செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி தண்ணீர் ஊற்றும் போது குரு பகவானின் ஆசி எனக்கு பரிபூரமாக கிடைக்க வேண்டும் என்ற பிரார்த்தனை வைத்துக் கொள்ளுங்கள்.

திலகத்தை தவறாமல் வாரந்தோறும் வியாழக்கிழமை நெற்றியில் வைத்துக் கொள்ளுங்கள். இத்தனை வாரம்தான் அதை வைக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. நீங்கள் தொடர்ந்து இந்த திலகத்தை நெற்றியில் வைத்துக் கொண்டால் உங்களுக்கு தொடர்ந்து குருபகவான் நன்மையை செய்வார். ஆனால் ஐந்து வாரம் மட்டும் அரச மரத்துக்கு தண்ணீரை ஊற்றினாலே போதும்.

இதையும் படிக்கலாமே: கல்வியில் சிறந்து விளங்க வழிபாடு

ஆக்ரோஷமாக உங்களுக்கு பிரச்சனை கொடுக்கும் குரு உடனடியாக சாந்தமாகி நல்லது செய்ய தொடங்கி விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றுங்கள், நல்லதே நடக்கும்.

- Advertisement -