- Advertisement -

10-05-2024 அட்சய திருதியையில் யோகம்பெரும் ராசிகள்.

வருடம் தோறும் வரும் சித்திரை மாத அமாவாசையை அடுத்து, மூன்றாவது நாள் அட்சய திதி வரும். அந்த வகையில் இந்த வருடம் 10/5/2024 வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து இந்த அட்சய திதி வந்திருக்கின்றது. இதோடு சேர்த்து கூடுதல் சிறப்பாக அன்று கஜகேசரி யோகமும் சேர்ந்து வரவிருக்கின்றது.

குரு சந்திரன் சேர்க்கையால் இந்த நாள் அதிசிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. இந்த அட்சய திதியோடு சேரும் கஜகேசரி யோகத்தின் மூலம் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என்பதை இந்த ஜோதிடம் சார்ந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். அதற்கு முன்பு இந்த அட்சய திருதி தோன்றிய நாளில் என்னென்ன சிறப்புகள் இருக்கிறது என்பதையும் பார்த்து விடுவோம்.

- Advertisement -

ஏழையாக இருந்த ஆதிசங்கரருக்கு மகாலட்சுமி தாயார், தங்க நெல்லி மழையை பொழிய செய்த நாள் தான் இந்த அட்சய திதி திருநாள். ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் அருளிய நாள், இதோடு மட்டுமல்லாமல் சிவபெருமான் பிச்சை கேட்டு வரும்போது, அம்பாள் அன்னபூரணி அவதாரம் எடுத்து சிவபெருமானுக்கு அன்னதானம் வழங்கிய நாளும் இந்த அட்சய திதி நாளில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இது மட்டுமா அட்சய பாத்திரத்தை பாண்டவர்கள் பெற்ற நாளும் இந்த அட்சய திதியில் தான். இப்படி நிறைய மங்களகரமான விஷயங்களை இந்த நாளில் சொல்லிக் கொண்டே செல்லலாம். இந்த அட்சய திதி நாளில் தங்கம் கட்டாயம் வாங்கிய ஆக வேண்டும் என்ற அவசியமும் கிடையாது. கல் உப்பு, மஞ்சள் தூள் இந்த இரண்டு பொருட்களை வாங்கினாலே உங்கள் குடும்பத்திற்கு லட்சுமி கடாட்சம் கிடைத்துவிடும். இந்த நாளில் கட்டாயம் செய்ய வேண்டிய ஒரு விஷயம் அன்னதானம்.

- Advertisement -

கஷ்டப்படுபவர்களுக்கு உங்களால் முடிந்ததை வாங்கி தானம் செய்யுங்கள். அரிசி, பருப்பு, தானியம் அல்லது ஒரு வேலை சாப்பாடு ஆவது வாங்கி கொடுங்க. புண்ணியம் கிடைக்கும் சரி, இப்போது இந்த நாளில் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் யார் யார் என்பதை பார்த்து விடலாம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இனி வரக்கூடிய நாட்களில் முன்னேற்றத்திற்கு எந்த ஒரு தடையும் வராது. வேலை தொழில் என்று உங்களுடைய வாழ்க்கைப் பயணம் மேல் நோக்கி செல்ல போகின்றது. இதுநாள் வரை வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தவர்களுக்கு எல்லாம் நல்ல நல்ல வாய்ப்புகள் வீடு தேடி வர தொடங்கும். நல்ல வேலை கிடைக்கும். நல்ல தொழில் தொடங்குவதற்கு உண்டான வாய்ப்புகளை பெறுவீர்கள். அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் வீசப் போகின்றது. குடும்பத்தில் சந்தோஷம் பல மடங்கு பெருகும்.

- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இனி வரக்கூடிய நாட்களில் சந்தோஷம் அதிகரிக்கும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு, வெளிநாட்டில் வணிகம் செய்ய வேண்டும் என்று காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, எல்லாம் நல்ல செய்தி வந்து சேரும். நிதி நிலைமை சீராகும். கடன் பிரச்சனையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்து விடுவீர்கள். பேச்சுத்திறமை அதிகரிக்கும். யாராலும் தீர்க்க முடியாத பிரச்சினைகளை கூட உங்கள் பஞ்சாயத்து தீர்த்து வைக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு நிதிநிலைமை உயர்ந்து கொண்டே செல்லக்கூடிய ஒரு சூழ்நிலை அமையும். நீண்ட நாட்களாக செய்ய முடியாமல் வைத்திருந்த காரியங்களை இனிவரும் நாட்களில் இனிதே செய்து முடிப்பீர்கள். வேலையிலும் சரி, தொழிலிலும் சரி உங்களை தோற்கடிக்க யாராலும் முடியாது. வேலை செய்யும் இடத்தில் ப்ரோமோஷன் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. நீங்கள் எதிர்பார்க்காத நல்ல சம்பளமும் உங்களுக்கு கிடைக்கும். தொழிலில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: சனி பகவானால் யோகம் பெரும் ராசிகள்

மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஜோதிடம் சார்ந்த தகவல்கள் எல்லாம் பொதுப்படையாக கணிக்கப்பட்டவை. தனிப்பட்ட நபரின் ஜாதகத்தைப் பொறுத்து இதில் சில மாற்றங்கள் வரலாம். இந்த பட்டியலில் எங்களுடைய ராசி இல்லையே என்று மற்ற ராசிகாரர்கள் கவலைப்பட வேண்டாம். இந்த அட்சய திதி அன்று உங்களால் முடிந்த தானத்தை செய்யுங்கள். அடுத்தவர்களுக்கு நல்லது செய்யும்போது நமக்கு நல்லது தானாக தேடி வரும் என்ற தகவலுடன் ஜோதிடம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -