- Advertisement -
ஜோதிடம்

சனி பகவானால் பாதிப்பிற்கு உள்ளாகும் ராசிகள்

நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக் கூடியவர் தான். ஒருவர் செய்யும் செயலுக்கு ஏற்ப நன்மை தீமைகளை பகிர்ந்து கொடுப்பதில் என்றென்றும் நீதி தவறாமல் இருப்பவர் தான் இந்த சனி பகவான். இந்த சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். அதனாலேயே இவர் கிரகங்களிலே மெதுவாக நகரக் கூடியவராக கருதப்படுகிறார்.

இந்த ஆண்டு (2024) சனிபகவான் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு பயணம் செய்து வருகிறார். இந்த வருடம் முழுவதும் இதே ராசியில் தான் பயணம் செய்வார் இதனால் அனைத்து ராசிகளுக்கும் மாற்றங்கள் நிகழும். சனிபகவான் தற்போது உக்கிர பார்வையில் இருக்கிறார். இதனால் சில ராசிக்காரர்களுக்கு மட்டும் அசுப பலன்கள் நேர உள்ளது. யார் அந்த ராசிக்காரர்கள் என்பதை ஜோதிடம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.

- Advertisement -

சனி கோரப்பார்வையில் சிக்கி இருக்கும் ராசிகள்

கடக ராசி

சனி பகவானின் இந்த உக்கிரப் பார்வையால் கடக ராசிக்காரர்கள் பல விதமான கஷ்டமான சூழ்நிலையை சந்திக்க போகிறார்கள். இவர்கள் எடுத்த காரியங்கள் அனைத்தும் சற்று தாமதமாக தான் நிறைவேறும். தடைகள் அதிகப்படியாக வந்து சேரும் வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வரக் கூடிய மாதங்களில் மிகவும் மிக கவனமாக இருப்பது அவசியம்.

விருச்சக ராசி

சனியின் கோர பார்வையானது விருச்சிக ராசிக்காரர்களின் மீதும் விழுந்துள்ளது. இதனால் இவர்களும் பல்வேறு விதமான சிக்கல்களை சந்திக்க உள்ளார்கள். பணம் தொடர்பான விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பதும் அவசியம். எதிரிகளின் தொல்லை அதிகரிக்கும் எச்சரிக்கையாக செயல்படுங்கள். எதையும் நிதானமாக சிந்தித்து செயல்படுவது சிறந்தது.

- Advertisement -

மகர ராசி

ஏழரை சனியின் இரண்டாவது கட்டத்தில் இருக்கக் கூடிய மகர ராசிக்காரர்களும் சனியின் கோபத்தை சிக்கி உள்ளார்கள். இந்த ராசிக்காரர்கள் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மற்றவர்களிடம் பேசும் போதும் பணம் கொடுக்கல் வாங்கல் போதும் கவனமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்படும் வார்த்தைகளை நிதானமாக கையாளுங்கள். கோபத்தை கட்டுப்படுத்த விட்டால் இழப்புகள் பெரிய அளவில் சந்திக்க நேரிடும். எதிலும் நிதானமாக செயல்படுங்கள்.

கும்ப ராசி

சனி பகவான் இவர்களின் ராசி தான்பயணம் செய்து கொண்டிருக்கிறார். ஆகையால் இவர்களுக்கும் அசுப பலன்களை தருகிறார். நீங்களும் பிறரிடத்தில் பேசும் பொழுது எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருப்பது நல்லது. குடும்பத்தில் ஏற்படும் வாக்குஸவாதங்களை தவிர்த்து விடுங்கள். கோபத்தினால் பெரும் அளவு நஷ்டத்தை சந்திக்க நேரிடும். பண விஷயத்தில் மிக மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம். சிந்தித்து செயல்பட்டால் விரயத்தை தவிர்க்கலாம்.

இதையும் படிக்கலாமே: சுக்கிரனால் யோகம் பெறும் ராசிகள்

ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள பொதுவான கருத்துகளின் படி தொகுக்கப்பட்டவை தான் இந்த பதிவில் உள்ள தகவல்கள். இதிலும் அவரவரின் கிரக சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றங்கள் நிகழும் என்பதை தெரிவித்துக் கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -