- Advertisement -

நாளை 2/11/2021 தன்வந்திரி ஜெயந்தி! இந்த மந்திரம் உச்சரித்து வீட்டில் விளக்கு ஏற்றி வைத்தால் எல்லா விதமான நோய்களும் நம்மை விட்டு நீங்கி விடுமாம் தெரியுமா? தவறவிட்டுவிடாதீர்கள்!

மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாக இருக்கும் இந்த தன்வந்திரி பகவான் சகல நோய்களை நீக்கும் வல்லமை பெற்றவர் ஆவார். தசாவதாரங்களில் இவர் சேரா விட்டாலும், இவரை வேண்டி வணங்குபவர்களுக்கு சகல விதமான நோய்களும் விரைவாக குணமாவது நிதர்சனமான உண்மை. இத்தகைய தன்வந்திரி பகவான் ஜெயந்தி அதாவது அவர் அவதரித்த தினம் நாளை ஐப்பசி மாதத்தில் வரும் திரியோதசி திதி நன்னாளாகும். எனவே நாளை தன்வந்திரி பகவானுடைய காயத்ரி மந்திரத்தை உச்சரித்து அவரை எப்படி வழிபட்டால் எல்லா விதமான நோய்களும் நம்மை விட்டு நீங்கும்? என்பதை நாமும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

தன்வந்திரி பகவான் இந்து மதத்தை பொறுத்தவரை ஆரோக்கியத்தை காக்கும் அற்புத சக்தி ஆகும். பழம் பெருமை வாய்ந்த புகழ் பெற்ற பெருமாள் கோவில்களில் இவருக்கென தனி சன்னிதிகள் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆயுர்வேத மருத்துவத்தின் கடவுளாக விளங்கும் தன்வந்திரி பகவான் தேவர்களின் மருத்துவராக புகழப்படுகிறார். தேவர்களுக்கே இவர் மருத்துவராக இருப்பார் எனில் இவரை வணங்கும் மனிதர்களுக்கு எப்படிப்பட்ட மருத்துவ கடவுளாக இருப்பார்? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

- Advertisement -

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த பொழுது கையில் அமிர்த கலசத்துடன் தோன்றியவர் தன்வந்திரி பகவான். தனு என்ற சொல்லுக்கு அம்பு என்கிற பொருள் உண்டு, உடலை அம்பினால் தைப்பது என்பது இவ்வார்த்தையின் உள்ளர்த்தம் ஆகும். இந்த வகையில் அறுவை சிகிச்சை முறைக்கு புகழ்பெற்றவர் தன்வந்திரி பகவான் என்பதும் பொருள்படுகிறது. பிரம்ம தேவர் இயற்றிய ஆயுர்வேதத்தை தழைத்தோங்க செய்யக்கூடிய பணியை மேற்கொண்டவர் தன்வந்திரி. தன்வந்திரி என்கிற சொல்லுக்கு வானத்தில் வசிப்பவர் என்கிற பொருளும் உண்டு என்பதால் சூரியனே தன்வந்திரி பகவானாகவும் கருதப்படுகிறார்.

இத்தகைய அருமை பெருமைகள் வாய்ந்த தன்வந்திரி பகவான் பிறந்த நாளாகிய நாளை செவ்வாய்க்கிழமையில் தன்வந்திரி பகவான் படத்தை வைத்து அவருடைய காயத்ரி மந்திரத்தை 9 முறை உச்சரித்து வழிபடுபவர்களுக்கு சகல பிணிகளும் உடலை விட்டு நீங்கும் என்பது நம்பிக்கை. தன்வந்திரி பகவான் படம் இல்லாவிட்டாலும், மகாவிஷ்ணுவின் படத்தை வைத்து வழிபடலாம். ஒரு டம்ளர் தண்ணீரை மட்டும் வைத்து கீழ்வரும் இந்த மந்திரத்தை 9 முறை உச்சரித்து விட்டு மனதார நம் நோய்கள் அனைத்தும் தீர வேண்டிக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த தண்ணீரை நோய்வாய்ப்பட்டவர்கள் அருந்த வேண்டும்.

- Advertisement -

தன்வந்திரி பகவான் காயத்ரி மந்திரம்:
ஓம் நமோபகவதே வாசு தேவாய
தன்வந்தரயே அம்ருத கலச ஹஸ்தாய
சர்வாமய விநாசனாய த்ரைலோக்யநாதாய
ஸ்ரீ மஹா விஷ்ணவே நம:

பொதுவாக இந்த வழிபாட்டை தேய்பிறை திரயோதசிகளில் மாதம் தோறும் மேற்கொண்டு வரலாம். ஆனால் அவர் அவதரித்த தினமான ஐப்பசி தேய்பிறை திரயோதசி நாளை என்பதால் கட்டாயம் நாளை இவ்வாறு வழிபட குடும்பத்தில் இருக்கும் அத்தனை நபர்களுடைய ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகள் தீர்வதாக கருதப்படுகிறது. நோயில்லாத வாழ்வே குறைவற்ற செல்வமாகும். எவ்வளவுதான் காசு பணம் இருந்தாலும் நோய் நொடி இல்லாமல் வாழும் பொழுது தான் நாம் முழுமை பெறுகிறோம். எனவே நாளைய இந்த நல்ல நாளை தவறவிடாமல் அனைவரும் பயன்படுத்தி பயன் பெறலாமே!

- Advertisement -