- Advertisement -

இன்று பல குடும்பங்களில் பெரிய பிரச்சனையாக உருவெடுத்து இருப்பது பணம் தான் இந்த பணம் சார்ந்த பிரச்சனை பல உண்டு. பல குடும்பங்களில் பெரிய பிரச்சனையாக உருவெடுத்து இருப்பது பணம் தான் இந்த பணம் சார்ந்த பிரச்சனை பல உண்டு. ஒன்று வருமானம் போதாமல் பிரச்சனை வரும் மற்றொன்று பிறரிடம் பணத்தை கொடுத்து வராமல் அதன் மூலம் பிரச்சனை வரும்.

கொடுத்த பணம் திரும்ப வராமல் வரக்கூடிய பிரச்சினை பெரிய அளவில் இருக்கும். ஏனெனில் பாடுபட்டு சம்பாதித்து சேர்த்திருப்போம். யாரோ கேட்டார்கள் என்று அவசரத்திற்கு உதவிய அதனால் திரும்ப நமக்கு அந்த பணம் வராமல் இருந்தால் அது எத்தனை பெரிய மன உளைச்சலை தரும்.

- Advertisement -

இதன் மூலம் வீட்டிலும் நிம்மதி இழக்க நேரிடும். இந்த ஒரு பிரச்சனையை சரி செய்வதற்கான எளிய பரிகார முறையை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

வராத பணம் வர பரிகாரம்

இந்த பரிகாரத்தை செய்ய புதன்கிழமை அன்று சில விஷயங்களை செய்ய வேண்டும் அதற்கு புதபகவானின் தானியமான பச்சை பயிரை வாங்கிக் கொள்ள வேண்டும் இதற்கு தனியாக கடையில் வாங்கிக் கொள்ளுங்கள் வீட்டில் இருக்கும் பயிர் எடுக்க வேண்டாம். அதேபோல் சிறிதளவு நாட்டு சர்க்கரையும் வாங்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த பச்சை பயிரை புதன்கிழமை இரவு தூங்கப்போகும் ஊறவைத்து விடுங்கள் மறுநாள் வியாழக்கிழமை அன்று காலையில் குளித்து முடித்த பிறகு வீட்டின் பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு ஊறவைத்த பச்சைப்பயிரை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள் இத்துடன் நாட்டு சர்க்கரையை கலந்து பசு மாட்டிற்கு உங்கள் கைகளாலே தானமாக கொடுங்கள்.

அப்படி கொடுக்கும் வேளையில் பசுமாட்டை தொட்டு வணங்கி நீங்கள் இழந்த பணம் உங்களுக்கு திரும்ப வர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பசு மாட்டிற்கு தரக்கூடிய இந்த தானமானது 30 முக்கோடி தேவர்களுக்கும் தருவதற்கு சமம். ஆகையால் இந்த பரிகாரம் சொல்லும் போதும் செய்யும் போதும் எளிமையானதாக தான் இருக்கும்.

- Advertisement -

இதற்கான பலன் மடங்காக திரும்ப கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அதே போல் பணம் தவிர்த்து நகை போன்றவற்றை இழந்திருந்தாலோ அல்லது தொலைத்திருந்தாலோ உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு அம்மன ஆலயத்திற்கு சென்று தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்தால் பொருளாக இழந்தவை திரும்ப வருவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

இதையும் படிக்கலாமே: குரு தோஷம் நீங்க வழிபாடு

ஒவ்வொரு பொருளையும் சம்பாதிப்பதும் பணத்தை சேர்ப்பதும் எத்தனை பெரிய கஷ்டம் என்று அனைவருக்கும் தெரியும் அதை இழப்பது ஒன்றும் சாதாரண காரியம் கிடையாது இந்த எளிய பரிகாரங்கள் மூலம் இவையெல்லாம் திரும்ப கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -