ஒவ்வொரு கடவுளிற்கு சிறப்பான நான் என்று சில நாட்கள் இருக்கும் அந்த வகையில் பார்த்தால் முருகனுக்கு உகந்த நாள் கிருத்திகை. அதிலும் ஆடி கிருத்திகை என்பது முருகனுக்கு மிகவும் விசேசமான நாள்.
ஆடி கிருத்திகை அன்று காலையில் எழுந்து குளித்துவிட்டு முருகனை வேண்டி கந்தசஷ்டி கவசம் படித்துவிட்டு கோயிலிற்கு சென்று பாலபிஷேகம் செய்தால் ஒருவருக்கு பதவி உயர்வு என்பது நிச்சயம் கிடைக்கும்.
12 ஆண்டுகள் தொடர்ந்து இந்த விரதத்தை நாரதர் கடைபிடித்தார் அதனாலேயே அவருக்கு எல்லா முனிவர்களிலும் மேலான பதவி கிடைத்தது என்று புராணங்கள் கூறுகின்றன. ஆகையால் ஆடி கிருத்திகையில் முருகனை வேண்டி விரதம் இருந்தால் உயர் பதவி நிச்சயம். இந்த வருடம் ஜூலை 19 மற்றும் ஆக.15 ஆகிய இருநாட்களும் ஆடி கிருத்திகையாகும்.