- Advertisement -
சுவாரஸ்ய தகவல்கள்

அனுமன் இன்றும் இமயமலையில் உயிரோடு வாழ்கிறாரா? ஆதாரங்கள் இதோ

உலகில் உள்ள கோடிக்கணக்கான இந்துக்கள் வழிபடும் முக்கிய கடவுள்களில் ஒருவர் அனுமன். அவர் ஒரு சிரஞ்சீவி என்பதால் இறப்பு என்பதே அவருக்கு இல்லை என்று நாம் புராணங்களில் படித்திருப்போம். நாம் படித்தவை அனைத்தும் உண்மை தான் என்பதை நிரூபிக்கும் வகையில் அவர் இன்றும் உயிருடன் வாழ்வதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. வாருங்கள் அந்த ஆதாரங்கள் என்னவென்று பார்ப்போம்.

ஒருசமயம் சிலர் ஒன்றாக சேர்ந்து மானசரோவர் என்னும் இடத்திற்கு ஆன்மீக பயணம் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் அங்குள்ள குகைகளை பார்த்துக்கொண்டு வந்துள்ளனர். அதில் ஒருவர் மட்டும் தனியாக ஒரு குகைக்கு சென்றுள்ளார்.

அங்கு மனித உருவம் கொண்ட ஒரு அபூர்வ வானரத்தை அவர் கண்டுள்ளார். உடனே அவர் தன் கையில் இருந்த கேமராவை வைத்து புகைப்படம் எடுத்துள்ளார். அதன் பிறகு சில நிமிடங்களில் அவர் இறந்துள்ளார்.

- Advertisement -

அவர் எதனால் திடீரென்று இறந்தார் என்பதை அவருடைய நண்பர்களால் கண்டறிய முடியவில்லை. சிறிது நாட்களுக்கு பிறகு அவருடைய கேமெராவில் இருந்த புகைப்படங்களை அவருடைய நண்பர்கள் பார்க்கையில் அனுமன் ஒரு புத்தகத்தை படித்திக்கொண்டிருப்பது போன்ற ஒரு புகைப்படம் அதில் தெளிவாக இருந்திருக்கிறது. அதுவே அவர் கடைசியாக எடுத்த புகைப்படம். பிறகு அந்த புகைப்பம் இணையத்தில் வெளியிடப்பட்டது. அந்த புகைப்படம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

அனுமன் இன்றும் இமயமலையில் வாழந்துகொண்டிருப்பதற்கான மேலும் ஒரு ஆதாரமாக அவ்வப்போது அங்குள்ள பனிப்பாறைகளில் தென்படும் மிக பெரிய காலடிகள். அந்த காலடிகள் மனிதர்களுடையது போல் இருந்தாலும் அதன் அளவு மிகப்பெரியதாக உள்ளது. அதனால் அது நிச்சயம் அனுமனுடையதாக தான் இருக்கவேண்டும் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -