- Advertisement -
ஜோதிடம்

குருவால் யோகம் பெரும் ராசிகள்

குருபகவானின் அனுகிரகம் கிடைத்தாலே ஒருவர் வாழ்க்கையில் எல்லாவித நலன்களையும் பெறுவார். ஆகையால் தான் நவகிரகங்களில் இவர் மங்கள நாயகன் என்ற சிறப்பு பெயருடன் விளங்குகிறார். அப்படியான குருபகவான் தற்போது தனது சொந்த ராசியான ரிஷப ராசியில் பயணம் செய்து வருகிறார். இதன் மூலம் சில ராசிக்காரர்கள் விபரீத யோகங்களை பெறுகிறார்கள் அதை குறித்து ஜோதிடம் பற்றிய இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

குருவால் ராஜயோகம் பெரும் ராசிகள்

பொதுவாகவே குருவின் பார்வை ஒருவர் மீது பட்டால் அவர்கள் செல்வம் செழிப்பு குழந்தை பாக்கியம் திருமண யோகம் அந்தஸ்து ஆடம்பரம் என அனைத்திலும் முன்னணியில் இருப்பார்கள் நினைத்த வேலை இடமாற்றம் சொந்த வீடு இப்படியான வசதி வாய்ப்புகளும் தேடி வரும் அப்படியான இந்த குருபகவான் தன்னுடைய இடப்பெயர்ச்சியின் மூலம் சில ராசிகளுக்கு நல்ல அனுகூலத்தை தருகிறார் அதை குறித்த தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

துலாம் ராசி

துலாம் ராசிக்காரர்களுக்கும் குரு பகவான் பல யோகங்களை தருகிறார் இதனால் எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்களை பெற முடியும் வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு சம்பள உயர்வு அதிகரிக்கும் புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும் தொழில் ரீதியான முன்னேற்றம் பெருமளவு இருக்கும் அதிர்ஷ்டங்கள் உங்கள் வீட்டு கதவை தட்டக் கூடும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண யோகம் ஏற்படும் பணவரவில் இதுவரையில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். நிதி நிலைமை பல மடங்கு உயரக் கூடிய காலமிது.

தனுசு ராசி

குருபகவான் தனுசு ராசிக்காரர்களுக்கும் பல சிறப்பான யோகங்களை தர உள்ளார். பங்கு சந்தையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் புதிய தொழில் தொடங்கும் அவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் தேடி வரும். வேலையில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும் வீடு மனை சுற்று வாங்கக்கூடிய யோகங்கள் உண்டாகும் குடும்பத்தில் நிம்மதி மகிழ்ச்சி அதிகரிக்கும் நண்பர்கள் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றத்தை பெறலாம்.

- Advertisement -

கடக ராசி

குருவின் அனுகிரகத்தை பெறக் கூடிய ராசிகளில் கடக ராசியின் உண்டு கடக ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும் புதிய வருமானத்திற்கான வாய்ப்புகள் தேடி வரும் குரு பகவானால் திருமண வாழ்க்கை சுமுகமாக இருக்கும் குழந்தை பாக்கியம் வேண்டுபவருக்கு இந்த காலம் அதற்கான வாய்ப்பை வழங்கக் கூடியதாக அமைந்துள்ளது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் பணக்கார யோகம் உங்களை தேடி வரும்.

குருவின் பெயர்ச்சியால் யோகத்தை பெறக்கூடிய ராசிக்காரர்களை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொண்டிருப்பீர்கள். அப்படியானால் மற்ற ராசிக்காரர்களுக்கு எந்த பலனும் இல்லை என்று தோன்றலாம் எப்போதும் முயற்சிக்கேற்ற பலன் என்று ஒன்று நிச்சயமாக இருக்கும் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ளும் பொழுது அதற்கான பலனை பலனை பெறலாம்.

இதையும் படிக்கலாமே: வீடு தொடர்பான அனைத்து தோஷங்களும் நீங்க வாஸ்து நாளில் ஏற்ற வேண்டிய தீபம்.

அதுமட்டுமின்றி இது ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள பொதுவான கருத்துக்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை தான் இதிலும் அவரவரின் கிரக ஜாதக சூழ்நிலைக்கு ஏற்ப மாறுதல்களுக்கு உட்பட்டது தான் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -