வீடு தொடர்பான அனைத்து தோஷங்களும் நீங்க வாஸ்து நாளில் ஏற்ற வேண்டிய தீபம்.

sivan dheepam
- Advertisement -

வீடு என்றால் அது சந்தோஷமும் நிம்மதியும் நிறைந்ததாக இருக்க வேண்டும். இப்போதெல்லாம் பலருக்கும் வீடு என்றாலே பிரச்சனைக்கு உரியதாக மாறி விட்டது. ஒன்று வீட்டு மேல் வாங்கிய கடனாக இருக்கும் அல்லது வீட்டின் வாஸ்து தோஷம் இருக்கும். சிலருக்கு வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு குடியேற வேண்டும் என்ற ஆசை இருக்கும். இன்னும் சிலருக்கோ நிலம் இருந்தும் வீடு கட்ட முடியாது.

இப்படி நிலம் வீடு தொடர்பான எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதை சரி செய்வதற்கு உகந்த நாளாக நாளைய ஐப்பசி மாத வாஸ்து நாள் அமைந்துள்ளது. இந்த நாளில் நாம் ஏற்றக் கூடிய ஒரு தீபமானது நம்முடைய இத்தனை பிரச்சனைகளையும் சரி செய்து விடும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அந்த தீபம் ஏற்றும் நேரம் முறை பற்றி ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

வாஸ்து பிரச்சனைகள் தீர சர்வதிசை தீபம்

இந்த தீப பரிகாரம் செய்வதற்கு முக்கியமானது நேரம் தான் அந்த குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் தான் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். அடுத்தது நமக்கு தேவை சிவபெருமானுடைய திருகஉருவப்படம் அது இல்லாத பட்சத்தில் சிவலிங்கம் அல்லது கோமதி சக்கரம் இப்படி சிவ அம்சம் பொருந்திய ஏதேனும் ஒரு பொருள் நிச்சயமாக இதற்கு தேவை.

இந்த தீபத்தை நாளை காலை 7.40 மணிக்கு மேல் 8.20 மணிக்குள்ளாக ஏற்ற வேண்டும். இதற்கு முதலில் பூஜை அறையை சுத்தம் செய்து படத்திற்கு மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து மாலை எல்லாம் போட்டு அலங்காரம் செய்து தயாராக வைத்து விடுங்கள். அடுத்து சிவபெருமானுக்கு ஏதேனும் ஒரு எளிய நெய்வேத்தியம் செய்து பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

மேலே குறிப்பிட்டுள்ள அந்த நேரத்தில் சிவபெருமான் படத்திற்கு முன்பாக ஒரு அகல் விளக்கை வைத்து அதில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு நான்கு திசையில் எரியும்படி திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபம் எரியும் போது அதற்கு முன்பாக அமர்ந்து உங்களுடைய வீடு தொடர்பான அல்லது கடன் தொடர்பான எந்த பிரச்சினையாக இருந்தாலும் தீர வேண்டிக் கொள்ளுங்கள்.

அந்த நேரத்தில் ஓம் சிவாய நமக என்ற இந்த மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். அதுவரையிலும் இந்த தீபம் அணையாமல் இருக்கும்படி கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். இந்த நேரம் முடிந்த பிறகு விளக்கை குளிர்வித்து அகலை அங்கிருந்து எடுத்து விடுங்கள். இவ்வளவு தான் பரிகாரம்.

இதையும் படிக்கலாமே: கடன் பிரச்சனையை தீர்க்க உதவும் பூ.

நாளை இந்த நேரத்தில் நீங்கள் செய்யும் இந்த எளிய பரிகாரமானது உங்களுடைய பல பெரிய பிரச்சனைகளை சுலபமாக தீர்க்கக் கூடிய ஆற்றலையும் வாய்ப்புகளையும் கொடுக்கும். அது மட்டும் இன்றி இதற்கான முழு ஆசிர்வாதத்தையும் சிவபெருமான் நிச்சயம் அருள்வார். இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருக்கு நம்பிக்கையுடன் செய்து பலன் அடையலாம்.

- Advertisement -