- Advertisement -

வைகாசி மாத சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டு முறை

நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கும் வல்லமை பெற்ற விநாயகர் பெருமானை சங்கடஹர சதுர்த்தி நாள் அன்று நாம் வழிபடும் பொழுது அனைத்து விதமான நன்மைகளையும் நம்மால் பெற முடியும் அப்படிப்பட்ட சங்கடஹர சதுர்த்தி வரும் ஞாயிற்றுக்கிழமை மே மாதம் 26 ஆம் தேதி வருகிறது. இன்றைய தினத்தில் விநாயகப் பெருமானை நாம் எந்த முறையில் வழிபட்டால் நம்முடைய வேண்டுதல் நிறைவேறும் என்று இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்ப்போம்.

சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

விஸ்வரூபமாக காட்சியளித்தாலும் குழந்தை போல் பழகக் கூடியவர் தான் விநாயகப் பெருமான். இவரை நம்மால் எந்த அளவுக்கு எளிமையாக வழிபட முடியுமோ அந்த அளவுக்கு எளிமையாக வழிபட்டாலும் அந்த வழிபாட்டை மனம் உவந்து ஏற்றுக் கொள்வார். சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை விநாயகப் பெருமானை வழிபடாத நபர்களையே இருக்க முடியாது. எந்த ஒரு செயலை தொடங்குவதாக இருந்தாலும் அதற்கு முதலில் பிள்ளையார் சுழி போட்டு தான் பலரும் ஆரம்பிப்பார்கள். அப்படி ஆரம்பிக்கும் செயலானது எந்தவித தடைகளும் இல்லாமல் வெற்றிகரமாகவே நடைபெறும்.

- Advertisement -

ஞாயிற்றுக்கிழமை வரக்கூடிய இந்த சங்கரஹர சதுர்த்தி நாளன்று காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்து விட்டு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய விநாயகப் பெருமானின் படத்திற்கு முன்பாகவோ அல்லது சிலைக்கு முன்பாகவோ ஒரு நல்லெண்ணெய் தீபத்தை ஏற்றி வைத்து உங்களுடைய வேண்டுதலை முன்வைத்து விரதம் இருக்க ஆரம்பிக்க வேண்டும். முடிந்த அளவு அன்றைய தினம் அருகில் இருக்கும் விநாயகர் ஆலயத்திற்கு செல்லுங்கள்.

பகலில் உறங்க கூடாது. மேலும் அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது மிகவும் நல்லது. திரவ உணவுகளாக உட்கொள்வது நல்லது. உடல் நலம் சரியில்லாதவர்கள் ஒரு வேளை மட்டும் உணவு உண்டு விரதம் இருக்கலாம். மாலையில் ஆறு மணிக்கு மேல் விநாயகப் பெருமானின் படத்திற்கு முன்பாக ஒரு நல்லெண்ணெய் தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அருகம்புல்லை வாங்கி வந்து மாலையாக தொடுத்து விநாயகப் பெருமானுக்கு சாற்ற வேண்டும்.

- Advertisement -

வெள்ளருக்கு பூ கிடைத்தால் அதையும் வைக்கலாம். பிறகு அவருக்கு நெய்வேத்தியமாக கொழுக்கட்டை படைக்க வேண்டும். கொழுக்கட்டை செய்ய இயலாதவர்கள் சுத்தமான தேனை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். பிறகு விநாயகரின் இந்த பாடலை அவருக்கு முன்பாக அமர்ந்து 21 முறை மனதார கூற வேண்டும்.

பாடல்
மூஷிக வாகன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாசக பாத நமஸ்தே.

- Advertisement -

கடைசியாக கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து விட வேண்டும். நெய்வேத்தியமாக வைத்த கொழுக்கட்டையை வீட்டில் இருக்கும் நபர்களுக்கு பிரசாதமாக தர வேண்டும். இப்படி சங்கடஹர சதுர்த்தி அன்று வழிபாடு செய்பவர்கள் எந்த வேண்டுதலை முன்வைத்து வழிபாடு செய்கிறார்களோ அந்த வேண்டுதல் விரைவிலேயே நடைபெறும்.

இதையும் படிக்கலாமே: வேண்டுதல் நிறைவேற சிதறு தேங்காய் பரிகார

இந்த சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டில் நம்பிக்கை இருப்பவர்கள் தும்பிக்கையானை நம்பிக்கையோடு வழிபட்டு நன்மைகளை பெறலாம் என்ற இந்த தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளுவோம்.

- Advertisement -