பொதுவாக கனவுகள் என்பது நமது ஆழ் மனதில் ஒளிந்திருக்கும் ஆசை நிராசை போன்றவற்றின் வெளிப்பாடே என்று விஞ்ஞானம் கூறுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் மற்றும் ஞானிகளின் கருது இதற்கு முணற்பாடானது.
பொதுவாக நாம் பகலில் காணும் கனவுகள் எதுவும் பலிக்காது என்று கூறுவர். ஆனால் இரவு நேரத்தில் நான்காம் யாமத்தில், அதாவது விடியற்காலையில் காணும் கனவானது பலிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. ஆனாலும் அதற்கும் சில விதி விளக்குகள் இருக்கின்றன.
அதே போல நாம் காணும் கனவுகள் அப்படியே நடக்குமா என்றால் இல்லை என்றே கூற வேண்டும். உதாரணத்திற்கு ஒருவர் தன் கனவில், வீட்டை சாணி போட்டு முழுகுகிறார் என்றால் அவர் வாழும் வீட்டில் விரைவில் ஏதோ களவு போகப் போகிறது என்று அர்த்தம். அதே போல ஒருவர் தன் கனவில் கடல் தாண்டி பறக்கிறார் என்றால் அவருக்கு விரைவில் பண வரவு அதிகரிக்கும் என்று அர்த்தம்.
இதையும் படிக்கலாமே:
உங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா ?
இப்படி ஒவ்வொரு கனவிற்கு ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு. சில கனவு நல்ல பலன்களை தரும் சிலது தீய பலன்களை தரும். தீய பலன்களை தரும் கனவை விடியற்காலையில் கண்டோமானால் கோயிலிற்கு சென்று இறைவனுக்கு அர்ச்சனை செய்வது, ஏழைகளுக்கு தானம் செய்வது போன்றவற்றை செய்வது நல்லது.