- Advertisement -
அழகு குறிப்புகள் | Beauty tips in Tamil

முகச்சுருக்கம் நீங்கி 10 வயது குறைந்தது போல் தோற்றமளிக்க எள்ளு சாற்றை ஒருமுறை இப்படி மட்டும் பயன்படுத்தி பாருங்கள்!

உடல் வறட்சியைப் போக்குவதில் பெரும் பங்கு வகிக்கும் இந்த எள்ளு முகப்பொலிவையும் மெருகேற்றி காட்டக் கூடிய அற்புத சக்தி வாய்ந்தது. முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் பத்து வயதை அதிகரிப்பது போல நம்மை காண்பிக்கும். இந்த சுருக்கங்களை இருக செய்து முகத்தை இளமையான தோற்றம் அடைய செய்யும் அற்புத குறிப்பு பற்றிய தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

எள்ளு விதை மிகச் சிறிய அளவில் இருந்தாலும் அதனுள் நிறையவே கனிமச் சத்துக்களும், வைட்டமின்களும் காணப்படுகின்றன. உடல் ஆரோக்கியத்தில் பல நன்மைகளை கொடுக்கக்கூடிய இந்த எள்ளை தினமும் ஒரு ஸ்பூன் அளவிற்கு உணவில் சேர்த்து வருவது நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது. அப்படி இருக்க சரும பராமரிப்புக்கு எந்த அளவில் இந்த எள்ளு நமக்கு உதவப் போகிறது என்பதை பார்ப்போம். வயதான தோற்றத்தைத் தரக்கூடிய முகச் சுருக்கங்களை இருக செய்யும் அற்புத ஆற்றல் எள்ளில் இருந்து கிடைக்கக்கூடிய சாற்றுக்கு உண்டு.

- Advertisement -

இதனுடன் பயத்த மாவு சிறிதளவு சேர்த்து முகத்திற்கு நாம் இது போல பயன்படுத்துவதன் மூலம் ரொம்பவே விரைவாக நம் முகம் இளமையான தோற்றத்தை பெறும். முதலில் ஒரு பௌலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பயத்தம் மாவை ஒரு ஸ்பூன் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் 2 ஸ்பூன் அளவிற்கு எள்ளு எடுத்து மிக்ஸியில் அரைத்து அதிலிருந்து வரும் சாற்றை தேவையான அளவிற்கு பயத்த மாவுடன் கலந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் வெள்ளை எள்ளு அல்லது கருப்பு வெள்ளை எள்ளு எது எடுத்து இருந்தாலும் பரவாயில்லை. இந்த இரண்டனையும் நன்கு பேஸ்ட் போல் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் முகத்தில் எல்லா இடங்களிலும் தடவி விட்டு 15 நிமிடம் உலர விட்டு விடுங்கள். நன்கு உலர்ந்து முகம் இறுகிவிடும். அதன் பிறகு முகத்தை வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு துடைத்துக் கொள்ளுங்கள். வாரம் இருமுறை இது போல செய்து வர முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறைந்து நாளடைவில் உங்களுடைய முகம் பட்டுப் போல பளிச்சென மின்ன ஆரம்பிக்கும்.

- Advertisement -

தினமும் ஒரு ஸ்பூன் எள்ளு விதைகளை உணவுடன் சாப்பிட்டு வருவதன் மூலம் மன அழுத்தம் வெகுவாக குறையும் என்கிறது ஆய்வுகள். அதில் இருக்கும் கால்சியம், மக்னீசியம் போன்றவை மனதை அமைதியாக்கி பதற்றம், உடல்வலி போன்றவற்றை நீக்கி நிம்மதியான சூழ்நிலையை ஏற்படுத்தும். மேலும் அதில் இருக்கும் தியாமின் மற்றும் ட்ரிப்டோபேன் ஆகியவை செரட்டோனின் உற்பத்தியை அதிகரிக்க செய்யும், இதனால் மனம் இறுக்கத்திலிருந்து தளர்வடைந்து நிம்மதியான தூக்க நிலைக்கு கொண்டு செல்லும்.

எனவே எள்ளு சாறு முகம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நிறைந்த பலன்களை கொடுப்பதால் அவற்றை தேவையான அளவுகளில் பயன்படுத்தி பயன் பெறலாம். பயத்த மாவு முகத்தில் இருக்கும் வறட்சியை நீக்கி சருமத்தை மிருதுவாக்கும். பருக்கள், தேமல், தழும்பு, மாசு, மரு போன்ற அத்தனையும் முகத்தில் இருந்து நீக்கி புத்துணர்வை கொடுக்கக்கூடிய பயத்தமாவை உடல் முழுவதும் தேய்த்து குளிப்பதன் மூலம் இயற்கையான சரும பராமரிப்பு கிடைக்கிறது. இந்த இரண்டும் சேரும் பொழுது அதற்குரிய பலன்களும் அபரிமிதமாக இருக்கும்.

- Advertisement -