- Advertisement -
அழகு குறிப்புகள் | Beauty tips in Tamil

தினமும் உங்கள் முகம் தங்கம்போல் மின்ன இந்த ஒரு பொருள் மட்டும் போதும். இதனை தினமும் பயன்படுத்தி வந்தால் ஜொலிஜொலிக்கும் அழகைப் பெறுவீர்கள்

பெண்களாக இருந்தாலும், ஆண்களாக இருந்தாலும் தங்கள் சருமத்தை எப்பொழுதும் அழகாக வைத்திருக்க தான் ஆசைப்படுவார்கள். ஆனால் என்ன காலை நிலை காரணமாக பல்வேறு சரும பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது. இப்பொழுதெல்லாம் வேலைக்கு செல்பவர்களாக இருந்தாலும், கல்லூரி, பள்ளி செய்பவர்களாக இருந்தாலும் தனது முகம் அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக கடைகளில் விற்கப்படும் பல்வேறு அழகு சாதனப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் இவை அனைத்தும் மேலோட்டமான அழகை மட்டுமே தருகிறது. சில நாட்களுக்கு இவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதன் மூலம் நமது சருமத்தில் பல பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது. இவ்வாறு மேல் தோற்றமான அழகை மட்டும் விரும்புவது விரைவாக நமது சருமத்தை பாதிப்புக்குள்ளாக்கி விடும். எனவே இயற்கையாக நமது அழகை பராமரிக்க வேண்டும். அதற்கு ஒரு பொருள் மட்டும் கையில் இருந்தால் போதும், நீங்கள் தங்கம் போல மின்னுவதற்கு. வாருங்கள் அது என்ன பொருள்? அதனை எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

குங்குமாதி தைலம்:
இந்தப் பெயரை பலரும் கேட்டிருப்பீர்கள். அதாவது தொலைக்காட்சி பெட்டியில் அடிக்கடி பல அழகுசாதனப் பொருட்களை விளம்பரம் செய்யும் பொழுது அதில் குங்குமாதி தைலம் சேர்த்திருக்கிறது என்று கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் சொல்லும் விஷயத்தில் 25 சதவீதம் மட்டுமே உண்மை இருக்கும். ஆனால் இந்த குங்குமாதி தைலத்தின் முழுமையான பலனை நாம் பெற வேண்டும் என்றால் அதனை இயற்கையான முறையில் பயன்படுத்த வேண்டும்.

- Advertisement -

குங்குமாதி தைலம் பயன்படுத்தும் முறை:
பயன்படுத்துவதற்கு முன்னதாக முகத்தில் மேக்கப் செய்திருந்தால் முதலில் அவற்றை சுத்தமாக கழுவி விடவேண்டும். பிறகு முகத்தை சிறிது நேரம் ஆற வைத்த பின்னர் முகம், கழுத்து போன்ற பகுதிகளில் குங்குமாதி தைலம் தடவி விட்டு, பத்து நிமிடத்திற்கு லேசாக மசாஜ் செய்ய வேண்டும். பிறகு இரண்டு மணி நேரத்திற்கு முகத்தை கழுவாமல் அப்படியே விட்டு விட வேண்டும்.

வறண்ட சருமம் உள்ளவர்கள் எப்பொழுதும் குங்குமாதி தைலத்தினை இரவு உறங்கும் முன் முகத்தில் தடவி, மசாஜ் செய்து விட்டு அப்படியே உறங்கி விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் இருக்கும் வறட்சி தன்மை மறைந்து மிருதுவாக மாறும்.

- Advertisement -

ஆனால் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் இதனை முகத்தில் தடவி விட்ட பின்னர், இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு முகத்தை நன்றாக கழுவி விட வேண்டும். இரண்டு ஸ்பூன் முல்தானி மட்டி, இரண்டு ஸ்பூன் பன்னீர், இரண்டு ஸ்பூன் பன்னீர் இவை மூன்றையும் ஒரு பேக்காக தயார் செய்து, அதனை முகத்தில் தடவி, 15 நிமிடத்திற்கு நன்றாக ஊற வைத்து, அதன்பிறகு மசாஜ் செய்து முகத்தை கழுவி விட வேண்டும்.

இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை செய்து வர முகத்தில் உள்ள கருமை மறைந்து, முகம் ஜொலிக்க ஆரம்பிக்கும். சருமம் மிருதுவாக மாறும், கண்ணிற்க்கு அடியில் இருக்கும் கருவளையம் மறைந்து விடும்.

- Advertisement -