- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

நினைத்த வாழ்க்கை அமைய சிவபெருமான் மந்திரம்

தேவலோகத்தில் இருந்த பிரச்சனையை நீக்கி அனைவருக்கும் சுகமான வாழ்க்கையை வழங்கிய நாள் தான் பிரதோஷ நாள். இந்த பிரதோஷம் ஏற்பட்ட கதை அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட நாளில் நாமும் விரதம் இருந்து சிவபெருமானை வழிபட்டோம் என்றால் நம் வாழ்வில் இருக்கக்கூடிய தோஷங்கள் அனைத்தும் நீங்கி நினைத்த வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும். அப்படிப்பட்ட பிரதோஷ நாளில் சொல்லக்கூடிய மந்திரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பொதுவாக பிரதோஷ தினத்தன்று பிரதோஷ நேரத்தில் அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். அதற்கு காரணம் பிரதோஷ நேரத்தில் அனைத்து தெய்வங்களும் சிவபெருமானை வழிபடுவார்கள் என்பதால் தான். அந்த நேரத்தில் நாம் ஆலயத்திற்கு செல்லும் பொழுது அனைத்து தெய்வங்களையும் அருளையும் நம்மால் பெற முடியும்.

- Advertisement -

புதன்கிழமை வரக்கூடிய பிரதோஷம் என்பது மிகவும் சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது. எப்படி கடன் தீருவதற்கும் சொந்த வீடு அமைவதற்கும் செவ்வாய்க்கிழமை வழிபாடு என்பது முக்கியமோ அதேபோல்தான் புதன்கிழமையும் வழிபாடு செய்வது என்பது முக்கியம். பெருமாளுக்கு உரிய தினமாக கருதப்படுகிற புதன்கிழமை அன்று பிரதோஷம் வருவதால் அந்த நாளில் நாம் வழிபாடு செய்வதன் மூலம் இவர்கள் இருவரின் அருளையும் பரிபூரணமாக பெற முடியும்.

மேலும் பிரதோஷ நேரத்தில் நாம் செய்யக்கூடிய தான தர்மங்கள் சிவபெருமானுக்கு நேரடியாக போய் சேரும் என்று கூறப்படுகிறது. அதனால் புதன்கிழமை அன்று புதன் பகவானுக்குரிய பச்சை பயறுடன் வெல்லம், வாழைப்பழம் இவற்றை கலந்து பசுமாட்டிற்கு தானமாக தருவதன் மூலம் நம்முடைய கடன் பிரச்சினைகள் தீரும். மேலும் சொந்த வீடு அமைப்பதற்குரிய யோகமும் உண்டாகும்.

- Advertisement -

அப்படி அருகில் பசுமாடு இல்லாத பட்சத்தில் பச்சை பயிரை கொரகொரப்பாக அரைத்து எறும்புகள் இருக்கும் இடத்தில் தூவி விடுவது என்பது சிறப்பு. அனைவராலும் பிரதோஷ நேரத்தில் ஆலயத்திற்கு சென்று தெய்வத்தை வழிபட இயலாது. அப்படிப்பட்டவர்கள் அவர்கள் இருக்கும் இடத்திலேயே சிவபெருமானை மனதார நினைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை கூறும் பொழுது அவர்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி அவர்கள் நினைத்த வாழ்க்கையை வாழ முடியும்.

மந்திரம்

- Advertisement -

நமசிவாய
மசிவாயந
சிவாயநம
வாயநமசி
யநமசிவா

இந்த மந்திரத்தை தங்களால் இயன்ற அளவு குறைந்தபட்சம் 27 முறையில் இருந்து 108 முறை வரை பிரதோஷ நேரத்தில் சிவபெருமானை நினைத்து கூறுவதன் மூலம் வாழ்க்கையில் இருக்கக் கூடிய அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கி எதிர்பார்த்த நல்ல வாழ்க்கை கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே கடன் தீர துவரம் பருப்பு பரிகாரம்

இந்த எளிமையான தானத்தையும் அதேசமயம் மந்திரத்தையும் உச்சரிப்பதன் மூலம் நம் வாழ்க்கையில் நாம் எதிர்பார்க்காத அனைத்து விதமான நன்மைகளும் நடைபெறும். முழு மனதுடன் செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -