- Advertisement -

07-05-2024 பண வசியம் ஏற்பட அமாவாசை பரிகாரம்

07-05-2024 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று சித்திரை மாதத்தின் அமாவாசை திதி வரவிருக்கின்றது. பூலோகத்தில் இறை சக்தியானது வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் இந்த நாளில் நாம் செய்யக்கூடிய வேண்டுதல்கள் பரிகாரங்கள் நமக்கு இரட்டிப்பு மடங்கு பலனைத் தரும். நாளைய தினம் உங்களுடைய பணக்கஷ்டம் தீர வேண்டும் என்று, குலதெய்வத்தை நினைத்து, செய்ய வேண்டிய ஒரு ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பண வசிய குங்குமம் தயார் செய்யும் முறை

நாளைய தினம் அமாவாசை திதி என்பதால் உங்கள் வீடு, பூஜை அறையெல்லாம் சுத்தபத்தமாக இருக்கும். ஆகவே இந்த பரிகாரம் செய்ய வேண்டும் என்பதற்காக புதுசாக நீங்கள் எந்த ஒரு வேலையையும் சிரமப்பட்டு செய்ய வேண்டாம். உங்களுக்கு தேவை எல்லாம் வாசம் நிறைந்த தாழம்பூ குங்குமம் மட்டும்தான்.

- Advertisement -

ஒரு தாம்பூல தட்டின் மேலே வாசம் நிறைந்த இந்த தாழம்பு குங்குமத்தை கொட்டி விடுங்கள். மாதுளை மரத்தில் இருந்து சின்ன குச்சி கிடைத்தால் ரொம்ப ரொம்ப சிறப்பு. அப்படி இல்லை என்றால் நெல்லி மரத்திலிருந்து சின்ன குச்சி எடுத்துக் கொள்ளுங்கள். எந்த குச்சியுமே கிடைக்கவில்லை என்றால் உங்கள் விரல்களாலேயே இந்த பரிகாரத்தை செய்யலாம்.

நாளை மதியம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்து விட வேண்டும். பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, தாம்பூல தட்டில் கொட்டி வைத்திருக்கும் குங்குமத்திற்கு மேலே ‘ஓம் ஸ்ரீம்’ என்ற வார்த்தையை எழுத வேண்டும். மேலே சொல்லப்பட்டிருக்கும் குச்சி கிடைத்தால் அந்த குச்சியை வைத்து குங்குமத்தின் மேலே இந்த வார்த்தையை எழுதுங்கள்.

- Advertisement -

இல்லை என்றால் உங்கள் வலது கை ஆள்காட்டி விரலாலேயே இந்த வார்த்தையை அந்த குங்குமத்தின் மேலே எழுதி விடுங்கள். குலதெய்வத்தை நினைத்து, முன்னோர்களை நினைத்து, மகாலட்சுமி தாயை நினைத்து, இந்த வார்த்தையை அந்த குங்குமத்தின் மேலே எழுதி மனதார உங்களுடைய பிரச்சனைகள் எல்லாம் தீர வேண்டும் என்று வேண்டுதல் வையுங்கள்.

பெரும்பாலும் நாம் எல்லோருக்கும் இருக்க கூடிய கஷ்டம் கடன் கஷ்டம், பணக்கஷ்டம், வீட்டில் வருமை, அதெல்லாம் தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பணம் உங்களுக்கு சீக்கிரம் வசியமாக வேண்டும் என்ற பிரார்த்தனையும் செய்ய வேண்டும். தட்டில் இருக்கும் குங்குமத்தை மாலை 6:00 மணி வரை அப்படியே பூஜை அறையில் விட்டு விடுங்கள்.

- Advertisement -

மாலை 6 மணிக்கு பூஜை அறையில் மீண்டும் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு இந்த குங்குமத்தை எடுத்து சிறிது உங்களுடைய நெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும் ‘ஸ்ரீம்’ என்ற வார்த்தையை சொல்லி இந்த குங்குமத்தை நெற்றியில் வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு அந்த குங்குமத்தை எடுத்து ஒரு டப்பாவில் போட்டு மூடி பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். வீட்டில் இருக்கும் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் எல்லோருமே தினமும் காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு ‘ஸ்ரீம்’ என்ற வார்த்தையை சொல்லி இந்த குங்குமத்தை நெற்றியிலிட்டு வந்தால் உங்கள் குடும்பத்திற்கு பணவசியம் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே: பண வரவை அள்ளித்தரும் முருகன் வழிபாடு

கடன் சுமை குறையும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. இந்த பரிகாரத்தை நாளைய தினம் செய்தால், அடுத்த அமாவாசைக்குள் நிச்சயமாக உங்களுக்கு நல்ல காலம் பிறக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சொல்லும் இந்த எளிய பரிகாரத்தை செய்து பலன் அடையலாம்.

- Advertisement -