- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

கொடுத்த பணத்தை திரும்ப பெற பைரவர் வழிபாடு

இன்றைய சூழலில் பலரும் தன்னை சுற்றி உள்ளவர்களை எத்தனையோ விஷயங்களில் நம்பி ஏமாந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். அதிலும் பெரும்பாலும் பணத்தை கொடுத்துவிட்டு ஏமாந்தவரகள் அநேகம் பேர். அவசர தேவைக்கு என்று வந்து நம்மிடம் பணம் வாங்குவார்கள் வாங்கும் பொழுது அவர்கள் நிலைமை பார்த்து நாமே இறக்கப்பட்டு கொடுத்து விடுவோம். அந்த அளவிற்கு பேசுவார்கள்.

பணத்தை வாங்கிய பிறகு நீங்கள் யார் என்பது போல நடந்து கொள்வார்கள். இந்த சூழ்நிலையை இன்றைய காலகட்டத்தில் பலரும் அனுபவித்துக் கொண்டு தான் இருப்பார்கள். இது மட்டும் இன்றி நாம் உனக்கு வர வேண்டிய பணம் பல இடங்களில் வராமல் தேங்கி இருக்கும். இதை எல்லாம் சரி செய்வதற்கான ஒரு எளிய பரிகார முறையை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

கொடுத்த பணம் வரவேண்டிய பணம் எல்லாம் உடனே வர பரிகாரம்

இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். பணம் சார்ந்த விஷயம் கடன் போன்றவற்றிற்கு எல்லாம் நாம் செவ்வாய்க்கிழமை நாளை தேர்ந்தெடுப்பது தான் சிறந்தது. ஏனெனில் இது போன்ற பிரச்சனைகளுக்கு செவ்வாய் கிரக பாதிப்பு ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது ஆகையால் இந்த நாளில் இந்த பரிகாரத்தை செய்வது சிறந்த பலனை தரும்.

இதற்கு செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஹோரையில் செய்ய வேண்டும். அதுவும் காலையில் வரக்கூடிய ஹோரை தான் இதற்கு மிகவும் சிறந்தது. செவ்வாய்க்கிழமை காலை ஆறிலிருந்து ஏழு மணி வரை செவ்வாய் ஹோரை இருக்கும். அந்த நேரத்தில் உங்கள் வீட்டில் பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விடுங்கள் அடுத்ததாக கொஞ்சம் பச்சரிசியில் மஞ்சளை சேர்த்து அட்சதையாக கலந்து கொள்ளுங்கள். அதில் சிறிதளவு கருப்பு எள்ளை சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த அரிசி எள்ளை உங்கள் உள்ளங் கையில் வைத்து பூஜை அறையில் அமர்ந்து பைரவரை வரை நினைத்து மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு இதை அப்படியே உங்கள் வீட்டிற்கு வெளியில் கொண்டு செல்லுங்கள். நீங்கள் நிற்கும் இடத்தில் சூரிய பகவான் தெரிய வேண்டும் அது மாடியாக இருந்தாலும் பரவாயில்லை. இப்போது இந்த அர்ச்சனையை கையில் வைத்துக் கொண்டு சூரிய பகவானை பார்த்து மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

அப்போது உங்களுக்கு யார் பணம் தர வேண்டுமோ அல்லது எங்கிருந்து பணம் வரவேண்டுமோ அதை சொல்லி அந்த பணம் உங்களுக்கு வர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். இப்படி வேண்டிய பிறகு இந்த அட்சதை, கருப்பு எள்ளையை அங்கேயே தூவி விட்டு வீட்டிற்குள் வந்து பூஜை அறையில் அமர்ந்து கொள்ளுங்கள். அதன் பிறகு பைரவரின் இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.

- Advertisement -

மந்திரம்
ஓம் ஹ்ரீம் வம் பைரவாய நமஹ

இந்த மந்திரத்தை 21 முறை சொன்ன பிறகு பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். இது போல செவ்வாய்க்கிழமை தோறும் செய்து வரும் போது உங்களுக்கு வரவேண்டிய பணம் நீங்கள் கொடுத்து ஏமாந்த பணம் அனைத்தும் உங்களைத் தேடி வருவதற்கான சூழல் உருவாகும் என்று சொல்லப்படுகிறது. வட்டிக்கு பணம் கொடுப்பவர்களுக்கு இந்த முறை பலன் அளிக்காது என்றும் சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மனை வழிபாடு செய்யும் முறை

நியாயமான முறையில் சம்பாதித்து கொடுத்து ஏமாந்த பணத்தை திரும்ப பெற எளிமையான முறையில் இப்படி வழிபாடு செய்தால் திரும்பப் பெறலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த முறையில் நம்பிக்கை இருப்பின் நீங்களும் செய்து பலனை பெறலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -