- Advertisement -

ஒரு சிலரைப் பார்த்தவுடன் நாம் சொல்வதுண்டு, உன்னுடைய முகம் பிரகாசமாக அந்த மகாலட்சுமியை போல இருக்கிறது. அந்த அம்பாளை போல அழகாக இருக்கிறாய் என்று சொல்வோம். அப்படிப்பட்ட முகத்தை பார்க்கும் போது நமக்குள்ளே அறியாமல் ஒரு தெம்பு வரும். சந்தோஷமான முகத்தை பார்க்கும் போது, நம்முடைய மனதும் சந்தோஷமாக மாறும்.

வீட்டில் இருக்கும் பெண்கள் எப்போதும் மகாலட்சுமியை போல அம்சமாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள், ஆனால் சில பேர் காலையில் எழுந்து குளித்து தலை சீவி பொட்டு வைத்து அழகாகத் தான் இருப்பார்கள். ஆனால் முகத்தில் சந்தோஷம் என்பது இருக்காது. முகம் சோர்ந்து போய் வாட்டமாக பொலிவிழந்து காணப்படும். வசீகரத் தோற்றம் இருக்காது. இதற்கு என்ன செய்வது. பெண்கள் வசீகரத் தோற்றத்தைப் பெற சொல்ல வேண்டிய ஒரு அழகான மந்திரத்தை பற்றி தான் இன்று நாம் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் தெரிந்துகொள்ள போகின்றோம்.

- Advertisement -

முக வசீகரத்தை தரும் மந்திரம்

காலையில் எழுந்து பல் தேய்த்து முகம் கழுவி கொள்ளுங்கள். கட்டாயம் அதற்குப் பிறகு வீட்டில் இருக்கும் பெண்கள் கண்ணாடியை பார்ப்பீர்கள் அல்லவா. உங்கள் முகத்தை நீங்கள் கண்ணாடியில் பார்த்துக் கொண்டே ‘ஓம் ஸ்ரீ முகி ஸ்ரீ முகி, ஜெய ஜெய!’ என்ற மந்திரத்தை 11 முறை சொல்லுங்கள். அவ்வளவுதான். பிறகு எப்போதும் போல நீங்கள் உங்களுடைய வேலையை தொடங்குங்கள்.

இந்த பிரபஞ்சத்திற்கு சந்தோஷமாக நன்றி தெரிவித்து உங்களுடைய அழகை நீங்களே பார்த்து இந்த மந்திரத்தை சொல்லுங்கள். மகாலட்சுமி தாயே மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். தினமும் இந்த மந்திரத்தை சொல்லச் சொல்ல உங்களுடைய முகத்தில் வரும் வசீகரத்தை நீங்களே உணர்வீர்கள். 48 நாட்களில் நிச்சயம் இந்த வித்தியாசம் தெரியும்.

- Advertisement -

நடுவில் இடைவிடாது 48 நாள் இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும். மாதவிடாய் நாட்கள் இந்த மந்திரத்திற்கு ஒரு தடையாக இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. மாதவிடாய் நாள் இருந்தாலும் பெண்கள் இந்த மந்திரத்தை தாராளமாக செல்லலாம். இன்னும் குறிப்பிட்டுச் சொல்லப் போனால் காலையில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, உங்களுடைய வாயில் ஒரு கற்கண்டு போட்டுக் கொண்டு மகாலட்சுமியை நினைத்து இந்த மந்திரத்தை சொல்லுவது இன்னும் சீக்கிரம் பலனை தரும்.

வீட்டு பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு போறீங்க. சந்தோஷமாக அழகாக அலங்காரம் செய்து கொண்டு, பெண்கள் அம்பாள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும். அந்த சமயத்தில் அந்த அம்பாள் கோவிலில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு அந்த தீபச்சுடரை பார்த்தும் இந்த மந்திரத்தை சொல்லலாம். உங்களுக்கு மகாலட்சுமியின் அம்சம் கிடைக்கும். உங்களோடு மகாலட்சுமி ஒன்றோடு ஒன்றாக இணைந்து விடுவாள். சரி அப்படி என்ன இந்த மந்திரத்திற்கு பின்னால் இருக்கும் அர்த்தம். அதையும் தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

ஓம் என்பது பிரணவ மந்திரம். ஸ்ரீ என்பது அந்த அன்னை மகாலட்சுமி தேவி சொரூபமே. முகி என்பது பிரகாசமானவள் என்று அர்த்தத்தை குறிக்கிறது. ஜெய ஜெய என்பது வெற்றியை குறிக்கிறது. இந்த சொற்கள் எல்லாம் சேர்ந்து ஒன்றாக கொடுக்கப்பட்டுள்ள இந்த மந்திரம் எத்தனை சிறப்பு. யாரும் இதைத் தவிர விடாதீர்கள்.

இதையும் படிக்கலாமே: பாவம் தீர்க்கும் ஆனி மாத தேய்பிறை ஏகாதசி விரதம்

பெண்கள் தவிர ஆண்கள் இந்த மந்திரத்தை சொல்லலாமா என்ற சந்தேகம் சில பேருக்கு ஏழும். சொல்லலாம் தவறு கிடையாது. இருந்தாலும் பெண்களுக்காக பிரத்யேகமாக சொல்லப்பட்டுள்ள மந்திரம் இது. தேவை உள்ளவர்கள் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் இதை பின்பற்றி பலன் பெறவும்.

- Advertisement -