- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

இந்த வேரின் ராஜயோக ரகசியத்தை மட்டும் தெரிந்துகொண்டால் இனி இதனை வேண்டாம் என்று தூக்கி எறிய மாட்டீர்கள்

வாழ்க்கை என்பது அனைத்து விதமான போராட்டங்களையும் நமக்கு கற்றுக்கொடுக்கிறது. ஒருவர் பிறந்தது முதல் வயதாகும் வரை தங்கள் வாழ்க்கையில் பல நிலைகளில் பல படிகளைக் கடந்து வருகின்றனர். Moo இன்பம், துன்பம், போராட்டம் என அனைத்தையும் பார்த்து இருப்பார்கள். ஒரு சிலர் தங்கள் வாழ்நாளில் துன்பம் என்பதையே அனுபவித்து இருக்கமாட்டார்கள். இப்படிப்பட்ட வாழ்க்கை கிடைப்பதற்கு நீ அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என்று பலரும் கூறுவார்கள். உனக்கு என்னப்பா நீ ராஜயோகம் படைத்தவன், உனது முகமே வசிய முகம் என்று பலரையும் ஒருசிலர் புகழ்வதை பார்த்திருப்போம். இவ்வாறு ஒருவர் தொட்ட விஷயம் அனைத்துமே பொனாக மாறிவிடும். அவர் எந்த விஷயத்தை முயற்சி செய்கிறாரோ அதில் பல லாபங்களை அடைவார். இவ்வாறு ஒரு சிலருக்கு மட்டுமே இதுபோன்ற அதிர்ஷ்டம் கிடைத்திருக்கும். இவர்களைப் பார்க்கும் பொழுது மற்றவர்களுக்கு பொறாமையாகவும், ஏக்கமாகவும் கூட இருக்கும். இப்படிப்பட்ட அதிர்ஷ்டத்தை நாமும் பெறுவதற்கு இந்த ஒருவர் மட்டும் போதும்.

முன்பெல்லாம் மக்களை ஆட்சி செய்யும் ராஜாக்கள் மட்டுமே எப்பொழுதும் பலவித வசதி, வாய்ப்புகளுடன் இருப்பார்கள். இவர்களிடம் பணம், சொத்து அனைத்தும் பல தலைமுறைகளுக்கு இருக்கும் வண்ணம் சேர்ந்து கொண்டே இருக்கும். இவர்களை பார்க்கும் பொழுது ஒரு அற்புத ஒளிவட்டம் தெரியும். இவர்கள் அருகில் வரும் பொழுது அவர்களிடமிருந்து ஒரு அற்புதமான மணமும் வீசிக்கொண்டிருக்கும்.

- Advertisement -

அவர்களின் தோற்றமே ஆஜானுபாகுவாக இருக்கும். அவர்கள் அணிந்திருக்கும் ஒவ்வொரு பொருளும் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கும். அதிலும் ஒவ்வொரு ராஜாவும் தங்களின் நரம்பு முடிச்சுகளில் ஒவ்வொரு தாயத்தைக் கட்டிக் கொண்டிருப்பார்கள். அதேபோல் ராணியும் அவர்களின் நரம்பு முடிச்சில் தாயத்தை அணிந்து கொண்டு இருப்பார்கள். இதற்குப் பின்னால் பெரும் ரகசியம் புதைந்து இருக்கிறது.

இப்படி அவர்கள் அணிந்திருக்கும் ஒவ்வொனறிலும் பொன், பொருள் இவை அனைத்தையும் ஈர்க்கின்ற பொருட்களை உள்ளடக்கி வைத்திருப்பார்கள். இதற்கு பலவித பூஜை, மந்திரங்கள் ஓதப்பட்டு அவற்றிற்கு சக்தி அளிக்கப்பட்டு, அந்த பொருளை தாயத்தில் அடைத்து அதன் பின்னர் அவர்களிடம் வந்து சேரும். அதன் பிறகு அவர்கள் இதனை தங்கள் உடலில் எப்போதும் அணிந்து கொண்டிருப்பார்கள்.

- Advertisement -

இவற்றிற்கு இருக்கும் வசிய தன்மையின் காரணமாகவே இவர்கள் பல ஆண்டுகள் ஆட்சி செய்த அவர்களின் ஆட்சி மற்றவர்கள் பேசப்படும் அளவிற்கு இருந்திருக்கிறது எனவே இவ்வாறு நம்மிடமும் அதிர்ஷ்டத்தைப் அழைப்பதற்கும், ராஜயோகத்தை பெறுவதற்கும் இவர்கள் செய்த பெரும் பூஜைகளும், மந்திரங்களும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நமது அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் ஒரு சிறிய தழையின் வேர் மட்டும் இருந்தால் போதும்.

அது நாம் தினமும் சமையலுக்குப் பயன்படுத்தும் கொத்தமல்லி தழையின் வேர் தான். கொத்தமல்லியை அனைவரும் கையில் எடுத்தவுடன் முகர்ந்து பார்ப்பதுண்டு. இவ்வாறு இதற்கு மற்றவர்களை ஈர்க்கின்ற வசிய தன்மை இருக்கிறது. இதனை சிறிதளவு குழம்பில் சேர்த்தால் போதும் வீடே மணக்கும் வாசனை வந்து விடும். இவ்வாறு கொத்தமல்லித்தழை வேரை சிறிதளவு எடுத்துக்கொண்டு, அதனுடன் சிறிதளவு தர்ப்பைப் புல்லையும் சேர்த்து, மஞ்சள் பூசி கயிறு போட்டு கட்டிக் கொள்ள வேண்டும். இதனை ஒரு வெள்ளி தாயத்தில் அடைத்து கொண்டு, ஓம் வசி வசி என்று மூன்று முறை சொல்லி, இதனை பூஜை அறையில் வைத்து பூஜை செய்து கழுத்து அல்லது இடுப்பில் கட்டிக்கொள்ள வேண்டும். இதன் மூலம் உங்கள் வாழ்க்கைத்தரம் உயர்வதை விரைவாக அறிந்து கொள்வீர்கள்.

- Advertisement -