- Advertisement -
ஜோதிடம்

சனி வக்ர பெயர்ச்சி பரிகாரங்கள்

ஜூன் மாதம் 29ஆம் தேதி ஆனி மாதம் 15ஆம் தேதி சனி கும்ப ராசியில் வக்கிரப் பெயர்ச்சி அடைகிறார். இதனால் பல ராசிகளுக்கு நன்மைகளும் பல ராசிகளுக்கு தடைகளும் ஏற்படக்கூடும். இதுவரை கஷ்டத்தை அனுபவித்து கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிலை உண்டாகும் வாய்ப்புகள் உள்ளது. நல்ல நிலையில் இருந்தவர்களுக்கு சில தடைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இப்படிப்பட்ட சனி வக்கிர பெயர்ச்சியால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் நீங்குவதற்கு ஒவ்வொரு ராசிக்காரர்களும் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் எந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்று தான் இந்த ஜோதிடம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

மேஷ ராசிக்காரர்கள் திங்கட்கிழமை தோறும் காலபைரவருக்கு தேங்காய் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்ய வேண்டும். மேலும் எறும்புகளுக்கு உணவளிக்க வேண்டும். இதோடு அனு தினமும் “ஓம் நமசிவாய நமநமசிவாய” என்னும் மந்திரத்தை மனதார உச்சரிக்க வேண்டும்.

- Advertisement -

ரிஷப ராசிக்காரர்கள் ஞாயிற்றுக்கிழமையில் வரக்கூடிய ராகு காலத்தில் காலபைரவருக்கு தேங்காய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். ஏழைகளுக்கு தங்களால் இயன்ற அளவு அன்னதானம் செய்ய வேண்டும். “ஓம் பைரவாய நமோ நம” என்னும் மந்திரத்தை 27 முறை தினமும் பாராயணம் செய்ய வேண்டும்.

மிதுன ராசிக்காரர்கள் புதன்கிழமை தோறும் சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபாடு செய்து ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரின் மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். பைரவரின் வாகனமான நாய்க்கு உணவளிப்பது நல்ல பலனைத் தரும்.

- Advertisement -

கடக ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமை அன்று வரக்கூடிய ராகு காலத்தில் பைரவருக்கு தேங்காய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். ஊனமுற்றவர்களுக்கு ஆடைகளை தானமாக தர வேண்டும். “ஓம் ஸ்வர்ண பைரவாய நமோ நம” என்னும் மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும்.

சிம்ம ராசிக்காரர்களுக்கு மலைமேல் இருக்கக்கூடிய பைரவரை தரிசனம் செய்வது மிகவும் சிறப்பு. சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு நன்மையை தரும். கோவிலுக்கு நெய்யை தானமாக வாங்கி தருவதன் மூலம் நன்மைகள் உண்டாகும்.

- Advertisement -

கன்னி ராசிக்காரர்கள் தங்களுடன் முருகனுடைய வேலை சிறிய அளவில் வாங்கி வைத்துக் கொள்வது நல்லது. வியாழக்கிழமை தோறும் பைரவரை வழிபாடு செய்வதும் ஐந்து நபர்களுக்கு அன்னதானம் தருவதும் சிறப்பான பலனைத் தரும்.

துலாம் ராசிக்காரர்கள் சனிக்கிழமை அன்று கால பைரவருக்கு தேங்காய் தீபமும் சனீஸ்வரருக்கு எள் தீபமும் ஏற்றி வழிபட வேண்டும். “ஓம் சனீஸ்வர தேவாய நமோ நமக” என்னும் மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும்.

விருச்சிக ராசிக்காரர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் ராகு காலத்தில் கால பைரவரை வழிபாடு செய்ய வேண்டும். நாய்களுக்கு உணவளிக்க வேண்டும். “ஓம் கால பைரவாய நமோ நமக” என்னும் மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும்.

தனுசு ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமை தோறும் ராகு காலத்தில் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரை வழிபாடு செய்ய வேண்டும். ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரின் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். கோவிலுக்கு மஞ்சளை தானமாக வாங்கி தர வேண்டும்.

மகர ராசிக்காரர்கள் இந்த சமயத்தில் கருங்காலி மாலை அணிந்து கொள்வது சிறப்பு. மேலும் “ஓம் கால பைரவாய நமோ நமக” என்னும் மந்திரத்தை தினமும் 27 முறை உச்சரிப்பது சிறப்பான பலனைத் தரும்.

கும்ப ராசிக்காரர்கள் சனிக்கிழமை தோறும் காலபைரவருக்கு தேங்காய் தீபம் ஏற்றி வைத்துவிட்டு சனீஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றி காலபைரவரையும் சனீஸ்வர பகவானையும் 27 முறை வலம் வருவதன் மூலம் நன்மைகள் உண்டாகும்.

மீன ராசிக்காரர்கள் சொர்ண ஆகர்ஷண பைரவரை அனுதினமும் வழிபாடு செய்வதும் சொந்த ஆகர்ஷண பைரவரின் மந்திரத்தை உச்சரிப்பதும் மேலும் பல சிறப்புகளை ஏற்படுத்தித் தரும்.

இதையும் படிக்கலாமே: வருமானம் பெருக செய்ய வேண்டியது

இந்த பரிகாரங்களை செய்து கொண்டே காலபைரவரின் மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் சனிபகவானால் ஏற்படக்கூடிய தோஷங்கள் அனைத்தும் நீங்கி நன்மைகள் உண்டாகும். நம்பிக்கையுடன் செய்து பலன் பெறுங்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -