- Advertisement -

ஆயுள் முழுவதும் உங்கள் வாழ்க்கையில் நல்லது நடக்க சிவ வழிபாடு

சில பேர் வாழ்க்கையில் முன்னேற்றமே இருக்காது. என்னதான் கடினமாக உழைத்து முயற்சி செய்தாலும் தோல்விதான் கடைசியில் மிஞ்சும். இந்த புலம்பல் உங்களிடம் இருக்கிறதா. உங்களுடைய புலம்பலை மாற்றி, உங்கள் தலையெழுத்தை மாற்றக்கூடிய அதி அற்புதம் வாய்ந்த ஒரு வழிபாட்டை தான் இங்கு நாம் பார்க்கப் போகின்றோம்.

சக்தி வாய்ந்த ஒரு ஐந்து எழுத்து மந்திரம். இந்த மந்திரத்தைச் சொன்னால் உங்கள் தலையெழுத்து மாறும். புலம்பல்கள் மாறும். வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி கிடைக்கும். அது என்ன மந்திரம் அந்த மந்திரத்தை எந்த இடத்தில் அமர்ந்து எப்படி உச்சரிப்பது? ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

ஆயுள் முழுவதும் நல்லது நடக்க சிவ வழிபாடு

ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் மறைந்திருப்பது பஞ்சபூத தத்துவம். பஞ்சபூதங்கள் இல்லாமல் இந்த உடல் இயங்காது. இந்த உலகமும் இயங்காது. இந்த பஞ்சபூதத்தை தன்னகத்தை அடக்கி வைத்திருக்கும் கடவுள் சிவபெருமான். சிவபெருமானின் பாதங்களை பற்றிக் கொண்டால் எவ்வளவு பெரிய கர்மவினையும் நீங்கும். எவ்வளவு பெரிய கஷ்டங்களும் நீங்கும் என்பதில் நம்பிக்கை.

இதன் அடிப்படையில் சிவ மந்திரமான பஞ்சாட்சர மந்திரத்தை தான் இங்கு நாம் பார்க்கப் போகின்றோம். சிவன் கோவிலில் அமர்ந்து ‘நம சிவாய’ என்ற மந்திரத்தை சொல்லுங்கள். இல்லையென்றால் ‘சிவாய நம’ என்ற மந்திரத்தை சொல்லலாம். அது உங்களுடைய விருப்பம். இரண்டு மந்திரத்தையும் சேர்த்து சொன்னாலும் தவறு கிடையாது.

- Advertisement -

சிவன் கோவிலில் அமர்ந்து கண்களை மூடி மனதை ஒருநிலைப்படுத்தி எல்லாம் சிவமயம் என்ற நம்பிக்கைக்குள் நீங்கள் சென்று, பிறகு இந்த மந்திரத்தை உச்சரிக்கும் போது உங்களுடைய புலம்பல்கள் நீங்கும். நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும். இதோடு சேர்த்து இன்னொரு அதி அற்புதமாங இந்த பாடல் வரிகளும் உங்களுக்காக.

திருப்பஞ்சாக்கரப்பதிகம்

துஞ்சலும் துஞ்சல் இல்லாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின், நாள்தொறும்;
வஞ்சகம் அற்று அடி வாழ்த்த, வந்த கூற்று
அஞ்ச உதைத்தன, அஞ்சு எழுத்துமே

- Advertisement -

ஆயுசு முழுவதும் உங்களுடைய வாழ்க்கையில் துன்பம் தொடரக்கூடாது என்றால், அந்த பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்து விட்டு, இந்த 4 வரி மந்திரத்தையும் தினமும் ஒரு முறையாவது படியுங்கள். கோவிலுக்கு சென்று தான் இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும் என்று கூட அவசியம் இல்லை. தினமும் காலையில் எழுந்து குளித்துவிட்டு சிவபெருமானை மனதில் நினைத்து இந்த பாடலை படிக்கலாம்.

இதையும் படிக்கலாமே: துன்பங்கள் தேய்ந்து போக தேய்பிறை பிரதோஷ மந்திரம்

நம்பிக்கை இல்லாமல் இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலமும், இந்த பாடலை படிப்பதன் மூலமும் எந்த பிரயோஜனமும் கிடையாது. அந்த இறைவனே கதி, என்று எல்லா பிரச்சனைகளையும் இறைவனின் பாதங்களில் போட்டுவிட்டு வாழ்க்கையில் இனி நடப்பது நடக்கட்டும். நீதான் என் வாழ்க்கையை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சரணாகதி அடைந்து இந்த பாடலை படித்து வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் நிச்சயம் நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -