- Advertisement -

பௌர்ணமி திதி, அமாவாசை திதி வரும் சமயத்தில் நம்முடைய பூமியில் இறை சக்தியும், நேர்மறை ஆற்றலும், வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று சொல்லுவார்கள். இதன் அடிப்படையில் இன்று சித்ரா பௌர்ணமி திதி. வழக்கமாக வரக்கூடிய பௌர்ணமி திதியை விட இந்த சித்ரா பௌர்ணமிக்கு பல மடங்கு சக்தி அதிகம்.

இந்த சித்ரா பௌர்ணமி திதியின் சோடசக்கலை நேரம் எப்போது வருகிறது என்பதை பற்றிய தகவலை தான் இந்த ஆன்மிகம் சார்ந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். சோடசகலை நேரம் என்பது சித்தர்களால் நமக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிசக்தி வாய்ந்த அதிசய நேரம். பௌர்ணமி திதி முடியும் தருணத்தில், இந்த சோடசை கலை நேரம் வரும்.

- Advertisement -

பஞ்சாங்கத்தில் சோடசக்கலை நேரம் 2 மணி நேரமாக நமக்கு சொல்லப்பட்டிருக்கும். இந்த இரண்டு மணி நேரத்திற்குள், வெறும் 5 வினாடிகள் மட்டுமே ஷோடசக்கலை நேரமானது செயல்படும். ஆனால் அந்த ஐந்து வினாடி எது என்பது நமக்கு தெரியாது. அதனால் இந்த இரண்டு மணி நேரத்தையும் தவறவிடாமல், உங்கள் மனதை நினைத்த கோரிக்கையை பிரபஞ்சத்திடம் வைத்து மன அமைதியோடு தியானம் செய்ய வேண்டும்.

இன்று மாலை சித்ரா பௌர்ணமி திதியை முன்னிட்டு எல்லோரும், சந்திர தரிசனம் செய்யுங்கள். சித்ரா பௌர்ணமி வழிபாட்டை சிறப்பான முறையில் வழிபாடு செய்து விடுங்கள். குலதெய்வ வழிபாடு அம்மன் வழிபாடு இந்த நாளில் செய்வது ரொம்ப ரொம்ப சிறப்பு.

- Advertisement -

சித்ரா பௌர்ணமி சோடச கலை நேரம்

நாளை 24.4.2024 புதன்கிழமை அதிகாலை 4.50 மணியிலிருந்து 6:50 மணி வரை சோடச கலை நேரம் வரவிருக்கின்றது. புதன்கிழமை பிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்த ஜோடசக்கலை நேரம் வருவது நமக்கு இரட்டிப்பு பலனை கொடுக்கும். காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்து விடுங்கள். கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து கொள்ளுங்கள்.

முதுகு தண்டுவடம் நேராக இருக்கட்டும். உங்கள் மனதை ஒருநிலைப்படுத்தி குலதெய்வத்தையோ அல்லது இஷ்ட தெய்வத்தையோ நினைத்து உங்களுடைய வேண்டுதலை இந்த பிரபஞ்சத்திடம் வையுங்கள். எதாவது ஒரு வேண்டுதலாக இருக்கட்டும். வீடு கட்ட, நிறைய பணம் சம்பாதிக்கணும், பெரிய வேலை கிடைக்கணும், குடும்பம் சந்தோஷமாக இருக்கணும், பிள்ளைக்கு வேலை கிடைக்கணும், திருமணம் நடக்கணும், கடன் தொல்லை நீங்கணும், என்ன வரம் வேண்டும் என்றாலும் கேட்கலாம். ஏதாவது ஒரு வரமாக கேளுங்கள்.

- Advertisement -

இந்த இரண்டு மணி நேரமும் தொடர்ந்து அந்த ஒரே ஒரு வேண்டுதலை நினைத்து தியானம் செய்யுங்கள். இந்த பிரபஞ்சம் நீங்க கேட்டதை நிச்சயமா கொடுக்கும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. அதற்கான சக்தி இந்த சோடசக்கலை நேரத்திற்குள் இருக்கிறது. இந்த இரண்டு மணி நேரத்திற்குள் அந்த ஐந்து வினாடிகள் எப்போது வரும் என்பது யாருக்குமே தெரியாது.

இதையும் படிக்கலாமே: பணம் சேர சர்க்கரை பரிகாரம்

இந்த இரண்டு மணி நேரத்தை சரியாக பயன்படுத்தினால், அந்த ஐந்து வினாடியை உங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளலாம். பிறகு ஏழையாக பிறந்த நீங்கள், கடைசி வரைக்கும் ஏழையாகத்தான் வாழ வேண்டும் என்ற தலை எழுத்து மாற்றப்படும். நீங்களும் நிச்சயம் ஒரு நாள் அம்பானி ஆவீர்கள் என்ற நம்பிக்கையில் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -