- Advertisement -

நாளை வரக்கூடிய இந்த 2 மணி நேரத்தை யாரும் தவறவிடாதீர்கள். மார்வாடிகள் அதிக பணம் சம்பாதிக்க, இன்னும் இந்த சோடசக்கலை நேரத்தை பயன்படுத்தி தான் வருகிறார்கள்.

அமாவாசை திதி, பௌர்ணமி திதி முடிந்தபின்பு வரக்கூடிய ஒரு குறிப்பிட்ட நேரத்தை தான் சோடசக்கலை நேரம் என்று சொல்லுவார்கள். இந்த சோடசக்கலை நேரத்தை முனிவர்கள் சித்தர்கள், தங்களுடைய குண்டலினி சக்தியை அதிகரித்துக் கொள்வதற்காக பயன்படுத்திக் கொள்வார்கள். இந்த நேரத்தில் பிரபஞ்சத்திடம் மனமுருகி உண்மையாக, நம்பிக்கையோடு எதை கேட்டாலும் அது நமக்கு கிடைக்கும் என்பது பல நூறு ஆண்டுகளாக நம்மிடையே இருந்து வரும் நம்பிக்கை. பல வருடங்களுக்கு முன்பு இந்த சோடச கலையை குறிப்பிட்ட சிலர் மட்டுமே பயன்படுத்தி பயனடைந்து வந்துள்ளார்கள். தற்போது இந்த சோடசக்கலையைப் பற்றி நிறைய பேருக்கு தெரிந்துள்ளது. ஆனால் சரியான முறையில் அந்த நேரத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பதில் தெளிவில்லை.

நாளை வரக்கூடிய சோடசக்கலை நேரத்தில் நீங்கள் உங்களுடைய வேண்டுதலை பிரபஞ்சத்திடம் இப்படி சொல்லி பாருங்கள். நிச்சயமாக கேட்ட வரம் உடனடியாக கிடைக்கும். உங்களுடைய ஆசை நிறைவேறும். விரும்பியதை கூடிய விரைவில் அடையலாம். உங்களுக்கு எந்த பிரச்சனை இருந்தாலும் சரி அதில் ஏதாவது ஒரு பிரச்சினையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அது பணம் சம்பந்தப்பட்ட கடன் பிரச்சினையாக இருக்கலாம். வருமானத்தில் பிரச்சனையாக இருக்கலாம். தொழிலில் பிரச்சனையாக இருக்கலாம். இல்லற வாழ்க்கையில் பிரச்சனை, குழந்தை இல்லாத பிரச்சனை உடலில் தீராத நோய் பிரச்சனை இதில் உங்களுக்கு இப்போது இருக்கக்கூடிய பெரிய பிரச்சனை எதுவோ அதை முதலில் சரி செய்யப் பாருங்கள்.

இந்த சோடசக்கலை நேரத்தில் உங்களுடைய மனது அமைதியாக இருக்க வேண்டும். உங்களுடைய வீட்டில் அமைதியாக இருக்கக் கூடிய உங்களுக்கு பிடித்த ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அந்த இடத்தில் தரையிலோ அல்லது நாற்காலியின் மீது சம்மணம் போட்டு அமர்ந்து கொள்ளுங்கள். அது உங்களுடைய சவுகரியத்தைப் பொறுத்தது தான். ஒரு மெழுகுவர்த்தியை அல்லது அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அந்த தீபத்தின் முன்பு அமர்ந்து கண்களை மூடி உங்களுடைய வேண்டுதலை இந்த பிரபஞ்சத்திடம் வைக்க வேண்டும். எப்படி வைப்பது. எடுத்துக்காட்டிற்கு எனக்கு இரண்டு லட்ச ரூபாய் கடன் உள்ளது. அந்த கடனை படிப்படியாக அடைக்க வேண்டும். அதற்கு நல்ல வருமானம் கிடைக்க வேண்டும். இதுதான் உங்களுடைய வேண்டுதல் என்று வைத்துக்கொள்வோம்.

உங்களுடைய கண்களை மூடி ‘கடன் அடைய எனக்கு வருமானம் தடையில்லாமல் கிடைக்க நல்ல வழியை இந்த பிரபஞ்சம் காண்பிக்க வேண்டும்’. என்ற ஒரு வரியை இந்த சோடசக்கலை நேரம் என்று சொல்லப்படும் இரண்டு மணி நேரம் முழுவதும் மந்திரம் போல உச்சரித்து தியானத்தில் ஈடுபடவேண்டும். இந்த சோடசக்கலை நேரத்தில் நீங்கள் வைக்கக் கூடிய இந்தக் கோரிக்கை நிறைவேற தேவையான முயற்சிகளை நீங்கள் கட்டாயம் கைவிடக்கூடாது.

உங்களுடைய அந்த கடன் சுமை கூடிய விரைவிலேயே படிப்படியாக குறைவதை அனுபவபூர்வமாக உங்களால் உணரமுடியும். இப்படி எது வேண்டுமென்றாலும் ஒரு வரியில் அதை நீங்கள் மீண்டும் மீண்டும் உச்சரிக்க, நேர்மறையாக உச்சரிக்க, அது பலிக்கும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது. இந்த சோடசக்கலை நேரத்தில் எதிர்மறையாக எந்த ஒரு வார்த்தையையும் உச்சரிக்க வேண்டாம். அதாவது எனக்கு கஷ்டம் வந்துவிடுமோ எனக்கு கடன் வந்துவிடுமோ எனக்கு திருமணம் ஆகாதா என்ற சந்தேகம் உங்கள் மனதில் ஒரு துளி அளவும் எழக்கூடாது.

சரி, நாளை வரக்கூடிய அந்த சோடசக்கலை நேரம் என்ன. 25-6-2021 அதிகாலை 12.10 மணி முதல் 2.10 மணி வரை. அதாவது 24-6-2021 இன்று இரவு 12 மணிக்கு பிறகு என்றும் சொல்லலாம். மேல் சொன்ன விஷயங்களை இந்த இரண்டு மணி நேரத்தில் முயற்சி செய்து பாருங்கள். நிச்சயமாக இதில் மறைந்திருக்கும் சூட்சமத்தை உங்களால் புரிந்துகொள்ள முடியும்.

- Advertisement -