- Advertisement -
அழகு குறிப்புகள் | Beauty tips in Tamil

தலைமுடி உதிர்வை தடுக்கும் கிராம்பு

இந்த வெயில் காலத்தில் அதிக அளவில் தலைமுடி உதிர்தல் பிரச்சனையை பலரும் சந்தித்து இருப்பார்கள். இதற்கு உடல் சூடு ஒரு காரணமாக இருந்தாலும் தலைமுடிக்கு போதுமான அளவு சத்துக்கள் கிடைக்காதது மற்றும் ஒரு காரணமாக திகழ்கிறது வெயில் காலம். மட்டுமல்லாமல் மற்ற காலத்திலும் ஏற்படக்கூடிய முடி உதிர்வை தடுப்பதற்கும் முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடிகளை வளர செய்வதற்கும் கிராம்பை எந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்றுதான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

தலைமுடி உதிர்வதற்கு பல காரணங்கள் இருக்கிறது என்பது போலவே முடி உதிர்வை தடுத்து புதிய முடிகளை வளர வைப்பதற்கும் பல வழிமுறைகள் இருக்கிறது. இந்த வழிமுறைகளில் இயற்கையான பொருட்களை மட்டுமே பயன்படுத்தி பலன் அடைந்தவர்களும் இருக்கிறார்கள். கெமிக்கல் பொருட்களை உபயோகப்படுத்தி பலனடைந்தவர்களும் இருக்கிறார்கள். இயற்கையான பொருட்களை பயன்படுத்துவதே நல்ல நிரந்தரமான தீர்வாக கருதப்படுகிறது. அந்த வகையில் இயற்கையாக கிடைக்கக்கூடிய கிராம்பை வைத்து எப்படி தலைமுடி உதிர்தலை நிறுத்தி முடியை வளரச் செய்ய முடியும் என்று தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

- Advertisement -

ஒரு டேபிள் ஸ்பூன் அளவு கிராம்பை எடுத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அடுத்ததாக பிரியாணி இலை என்று கூறுவோம் அல்லவா அந்த இலையில் ஆறு இலைகளை எடுத்து அந்த பாத்திரத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அடுத்ததாக ரோஸ்மேரி இலைகளை வாங்கி வந்து இரண்டு ஸ்பூன் அளவிற்கு அந்த பாத்திரத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனுடன் வெதுவெதுப்பாக இருக்கும் தண்ணீராக பார்த்து இரண்டு கிளாஸ் அளவு ஊற்றி அடுப்பில் குறைந்த தீயில் வைக்க வேண்டும்.

இதை மூடி போட்டு மூடி 10 நிமிடம் கொதிக்க விட வேண்டும். 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்துவிட்டு இதன் சாறை வடிகட்டி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது எந்த இடத்தில் அதிகமாக முடி உதிர்வு ஏற்பட்டிருக்கிறதோ அந்த இடத்தில் இந்த தண்ணீரை ஸ்பிரே செய்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். மற்ற இடங்களில் சாதாரணமாக மசாஜ் செய்தால் போதும். இதே முறையில் வாரத்திற்கு இரண்டு முறை இந்த தண்ணீரை வெதுவெதுப்பாக வைத்துக்கொண்டு நம் தலைக்கு மசாஜ் செய்ய வேண்டும்.

- Advertisement -

இந்த மூன்று பொருட்களிலும் ஆன்டிஆக்சைடு அதிக அளவில் இருப்பதால் முடி உதிர்வை நிறுத்துவதோடு மட்டுமல்லாமல் முடியை வேகமாக வளரச் செய்கிறது. இதோடு மட்டுமல்லாமல் இளநரையை தடுக்கும் ஆற்றலும் இந்த தண்ணீருக்கு உள்ளது. இந்த தண்ணீரை நம்முடைய தலையில் தடவி மசாஜ் செய்த பிறகு தலைக்கு குளிக்க வேண்டும் என்ற நிபந்தனை கிடையாது. அதை அப்படியே உலர வைத்து விட்டு நாம் எப்பொழுது போல் நம்முடைய அன்றாட பணிகளை தொடரலாம்.

இதையும் படிக்கலாமே: முடி உதிர்வதை தடுக்கும் கருவேப்பிலை
இந்த தண்ணீரை ஒரு முறை தயார் செய்துவிட்டு ஃப்ரிட்ஜில் வைத்து வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்துவதன் மூலம் புதிய முடிகள் வளர்வதை கண்கூடாக பார்க்க முடியும்.

- Advertisement -